Sunday, May 29, 2022

Current Affairs 2022 - May 29 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ,இதைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது ?

அ) 31
ஆ)13
இ) 20
 ஈ) 25

2. இந்தியாவின் எந்த மாநில அரசு நாட்டின் மிகப்பெரிய தங்க இருப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளது ?

அ) பிகார்
ஆ) தமிழ்நாடு
இ) ஆந்திர பிரதேசம்
ஈ) குஜராத்

3. அண்மையில் ஒரே நாடு ஒரு மருத்துவ நடைமுறை என்ற தலைப்பிலான மாநாடு எங்கு நடைபெற்றது ?

அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத்

4. 75 வது சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கண் விருது
பெற்ற இந்திய இயக்குநர் யார் ?

அ) அக்னியெஸ்கா 
ஆ) நதீம்
இ) மந்தாஸ் குவேதரவிசி 
ஈ) ஷௌனக் சென்

5. இந்தியாவில் எங்கு நாட்டின் முதல் லாவெண்டர் திருவிழாவை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்துள்ளார் ? 

அ) ஜம்மு காஷ்மீர் 
ஆ) உத்தர கரண்ட்
இ) ராஜஸ்தான்
ஈ) கேரளா

6. இங்கிலாந்தின் முதல் தலித் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி யார் ?

அ) கிரேசியா ராம்
ஆ) ஜூலி பிரிட்னி
இ) மொஹிந்தர் கே மிதா 
ஈ) கென்யா பிரிட்டி 

7. சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் யார் ? 

அ) டெய்சி ராக்வெல்
ஆ) ரத்தினா பிரியா
இ) தரேகா ராவ்
ஈ) கீதாஞ்சலி ஸ்ரீ

விடைகளும் / விளக்கமும்

1. (இ) 20

¤ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 .
¤ 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்புகள் திருத்தச் சட்டம் 2022 விரைவில் அமல்படுத்தப்பட்டள்ளது.
¤ இதற்கான புதிய விதிகள் (ம) துணை விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாக ஆணையர் பி. பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

2. (அ) பிகார்

¤ பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய தங்க இருப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது .
¤ இந்த முதல்கட்ட ஆய்வுக்கென மத்திய அரசு நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளுடன் ஒரு மாத காலத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

3. (அ) மத்திய பிரதேசம்

¤ போபால், மத்திய பிரதேசத்தில் ஆரோக்கிய பாரதி சார்பில் நடைபெற்றது.
¤ மாநாட்டில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
¤ உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்துவருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

4. (ஈ) ஷௌனக் சென்

¤ 75 வது சர்வதேச திரைப்பட விழா , கேன்ஸ் நகர், பிரான்ஸில் நடைபெற்றது .
¤ ஆல் தேட் பிரீத்ஸ் என்ற ஆவணப்படத்துக்காக தங்க கண் விருது வழங்கப்பட்டுள்ளது.
¤ படத்தின் கரு : தில்லியை சேர்ந்த நதீம் , சவூத் ஆகிய இரு சகோதரர்கள் புலம்பெயர்த்து வரும் பருந்து உள்ளிட்ட பறவைகளை காற்று மாசு பாட்டிலிருந்து பாதுகாப்பது ஆகும் .

5. (அ) ஜம்மு காஷ்மீர்

¤ தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாகும். தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாவை இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாக அமைச்சர் விவரித்தார்.
¤ இறக்குமதி செய்யப்பட்ட நறுமண எண்ணெய்களிலிருந்து உள்நாட்டு ரகங்களுக்குச் செல்வதன் மூலம் உள்நாட்டு நறுமணப் பயிர் சார்ந்த வேளாண் பொருளாதாரத்தை ஆதரிப்பதே இந்த பணியின்
 நோக்கமாகும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிட்டத்தட்ட அனைத்து 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் சாகுபடி நடைமுறையில் உள்ளது.

6. (இ) மொஹிந்தர் கே மிதா 

¤  இங்கிலாந்தில் ஈலிங் நகரசபை மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய வம்சாளியை சேர்ந்த மொகிந்தர் மிதா இங்கிலாந்தில் எதிர்கட்சியாக செயல்படும் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். தற்போது ஈலிங் கவுன்சிலில் உள்ள டோர்மர் வெல்ஸ் வார்டில் துணை மேயராக இருக்கும் இவர், லண்டனில் கடந்த 5ம் தேதி நடந்த நகரசபை தேர்தலில் இக்கட்சியின் சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
¤ இது குறித்து தொழிலாளர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ``கவுன்சிலர் மொகிந்தர் மிதா ஈலிங் நகரசபை மேயராக அடுத்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் வரும் 2022-23ம் ஆண்டில் மேயராக பொறுப்பேற்பார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

7. (ஈ) கீதாஞ்சலி ஸ்ரீ

¤ இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
¤ அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.
¤ 50,000 பவுண்ட் பரிசுத்தொகை அடங்கியது சர்வதேச புக்கர் பரிசாகும். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும்.¤ "புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதனை வெல்வேன் என நினைக்கவில்லை," என கீதாஞ்சலி ஸ்ரீ தெரிவித்துள்ளார். "இது பெரிய அங்கீகாரம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பணிவாகவும் உணர்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...