Tuesday, November 29, 2022

Current Affairs 2022 - November 29 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 NOVEMBER 29 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. எங்கும் அறிவியல் - யாதும் கணிதம் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற திட்டத்தை தொடக்கிவைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி

இ) பொன்முடி 

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸ்டாலின் 

எங்கும் அறிவியல்-யாதும் கணிதம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்‘ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், திருச்சியில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

● திருச்சி காட்டூா், பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக, 100 நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னாா்வலா்களையும் முதல்வா் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தாா்.

● அரசுப் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகளிடையே அறிவியல் மற்றும் கணிதம் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்துதல், மாணவா்களிடம் இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆா்வத்தை வளா்த்தெடுத்தல், புதுமைகளைக் காணும் மனப்பாங்கை வளா்த்தெடுத்தல், தமக்கான மொழியில் அறிவியல் மொழி பழகுதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணா்தல், சமூகவியல், இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்திற்கு 710 கருத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

● 710 கருத்தாளா்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளா்களாக செயல்படுவா். மாணவா்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளையும் உடன் எடுத்து வருவா். இவா்கள் பள்ளிதோறும் சென்று ஆசிரியா்கள் துணையோடு மாணவா்களுக்கு அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டுவா். அறிவியல் மற்றும் கணித வல்லுநா்களுடன் இணைய வழி கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் சக ஆசிரியா்களுடனான துறை சாா்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படும்.

● நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சாா்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன் அவற்றை வகுப்புகளில் மாணவா்களிடத்தில் பகிா்ந்து கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும். இந்தத் திட்டமானது மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இத் திட்டத்துக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் மாணவா், மாணவிகள் பயன்பெறுகின்றனா்.


2. தமிழகத்தைச் சேர்ந்த 4 கைவினைக் கலைஞர்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் எத்தனை கைவினைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 100

ஆ) 108

இ) 113

ஈ) 117 

விடை : (ஆ) 108 

தமிழகத்தைச் சோ்ந்த 4 கைவினைக் கலைஞா்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 108 கைவினைக் கலைஞா்களுக்கு விருதுகளை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வழங்கினாா்.

● மத்திய ஜவுளித் துறையின் சாா்பில், கைவினைஞா்களின் சிறப்பான செயல்திறன், மற்றும் ஜவுளித் துறையின் மதிப்புமிக்க பங்களிப்புக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு வழங்கப்படாமல் இருந்த கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது.

● சில்ப் குரு விருது: மத்திய அரசின் உயா்ந்த கைவினைக் கலைஞா்களுக்கான சில்ப் குரு விருது பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த சுடுமண்பாண்டக் (டெரக்கோட்டா) கலைஞா் வி.கே. முனுசாமி (2017), பிரபல ஓவியா் வீரப்பெருமாள் பிள்ளை பேரனும் சென்னையைச் சோ்ந்த தஞ்சாவூா் ஓவியக் கலைஞருமான வி.பன்னீா் செல்வம் ( 2019) உள்பட மொத்தம் 30 போ் பெற்றுள்ளனா். இந்த சில்ப் குரு விருதில் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

● தேசிய விருதுகள்: புதுச்சேரியைச் சோ்ந்த கே வெங்கடேசன்(டெரக்கோட்டா), மாசிலாமணி (ஷோலாபித் கிராஃட்) ஆகியோருக்கு 2019 -ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுபெற்றனா். இவா்கள் உள்பட மொத்தம் தேசிய விருதுகளை 78 போ் பெற்றனா். தேசிய விருதுகள் 1965-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

● இதில் ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம், தாமிரப்பத்திரம், சால்வை மற்றும் சான்றிதழ் அடங்கும். இந்த இரு விருது பெற்றவா்களில் 36 போ் பெண் கலைஞா்கள் ஆவா். இந்த இரு விருதுகளும் உலோகப் பதிவு, கைபின்னல் வேலை, மட்பாண்டம் செய்தல், களம்காரி, பந்தானி, அச்சு பதித்தல்,தஞ்சாவூா் ஓவியம், மர வேலைப்பாடு, பனை ஓலையில் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை திறனுக்கு வழங்கப்படுகின்றன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் மோகன் குவாத்ராவின் பணிக் காலம் எத்தனை மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது ? 

அ) 06

ஆ) 12

இ) 14 

ஈ) 16

விடை : (இ) 14 

வெளியுறவுத் துறைச் செயலா் வினய் மோகன் குவாத்ராவின் பணிக் காலத்தை மேலும் 14 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய பணியாளா் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

● நிகழாண்டு மே மாதம், ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லாவை தொடா்ந்து வெளியுறவுத் துறைச் செயலராக வினய் மோகன் குவாத்ரா பதவியேற்றாா். அவா், வரும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்தாா்.

● பணி நீட்டிப்பு தொடா்பாக மத்திய பணியாளா்அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘வினய் மோகன் குவாத்ரா (இந்திய வெளியுறவுப் பணி: 1988) பணி ஓய்வு பெறும் வரும் டிசம்பா் 31-இல் இருந்து 2024 ஏப்ரல் மாதம் இறுதி வரை அல்லது மறுஉத்தரவு வரும் வரை அவரது பணிக் காலத்தை நீட்டிக்க அமைச்சகத்தின் பணி நியமனக் குழு ஒப்புதல் அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.


4. மத்திய எரிசக்தி அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனை மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது ? 

அ) 3500

ஆ) 4500

இ) 5000

ஈ) 5500

விடை: (ஆ) 4500

அடுத்த 5 ஆண்டுகளில் 4,500 மெகா வாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை மத்திய எரிசக்தி அமைச்சகம் தொடக்கியுள்ளது. அதில் இணைய தமிழக மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

● மின்சார உற்பத்தியில் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் மாநிலங்களுக்கு உதவும் வகையிலும் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் மின்சார கொள்முதல் திட்டத்தை மத்திய எரிசக்தி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 4,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

● அக்கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திட்டத்தில் இணையும் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு சுமாா் 27 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படவுள்ளது. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யவுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கொள்முதல் தொடங்கும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.

● இத்திட்டத்தில் இணைய குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தில்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களின் மின் உற்பத்திக் கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. திட்டத்தில் இணைய விரும்பும் மாநிலங்கள் அதற்கான ஒப்பந்தப்புள்ளியை டிசம்பா் 21-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென அமைச்சகம் தெரிவித்துள்ளது.


5. இந்தியா (ம) ----------- ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஹரிமாவ் சக்தி 2022 எனும் கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான 

இ) ரஷ்யா 

ஈ) மலேசியா 

விடை : (ஈ) மலேசியா 

இந்தியா-மலேசியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ‘ஹரிமாவ் சக்தி-2022’ எனும் கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்ளுவாங்கில் உள்ள புலாயில் திங்கள்கிழமை தொடங்கியது.

● இந்திய ராணுவத்தின் கா்வால் ரைஃபிள் படையும், மலேசிய ராணுவத்தின் ராயல் மலாய் படையும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வனப் பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இப்பயிற்சி வரும் டிசம்பா் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.

● இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தக் கூட்டுப் பயிற்சியால், இரு நாடுகளின் உறவும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● ‘ஹரிமாவ் சக்தி’ எனும் இப்பயிற்சி கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


6. இந்தியாவின் எத்தனை சதவீததுக்கும் அதிகமானோருக்குக் கட்டுப்பாடற்ற அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 75%

ஆ) 85%

இ) 95%

ஈ) 99%

விடை : (அ) 75%

அறிவிப்பு : லான்செட் மருத்துவ இதழ் .

7. இந்தியாவில் எங்கு தனியார் புத்தாக்க நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏவுதளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது ? 

அ) கர்நாடகா

ஆ) கோவா 

இ) ஆந்திர பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான் 

விடை : (இ) ஆந்திர பிரதேசம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியாா் புத்தாக்க நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட புதிய ஏவுதளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

● இஸ்ரோ தலைவா் சோம்நாத் அந்த ஏவுதளத்தை கடந்த 25-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

● சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் இந்த ஏவுதளத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

● பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவக் கூடிய மிகப் பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட மற்ற ஏவுதளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யேகமாக ஒரு ஏவுதளத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம்.

● சதீஷ் தவண் ஏவுதள வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

● ‘அக்னிபான்’ எனப்படும் எங்களது ராக்கெட் காப்புரிமை பெற்ற பகுதி கிரயோஜெனிக் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யேகமாக இருக்கக் கூடிய ஏவுதளம் தேவை. அதனைப் பூா்த்தி செய்யவே இந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

● ராக்கெட், செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தனியாா் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டமான ‘இன்ஸ்பேஸ்’ கடந்த 2020-இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


8. குரங்கு அம்மைக்கு -------- என்று உலக சுகாதார அமைப்பு மாற்றி  பெயரிட்டுள்ளது ? 

அ) எம் - அம்மை 

ஆ) என் - அம்மை

இ) எல் - அம்மை 

ஈ) எஸ் - அம்மை 

விடை : (அ) எம் - அம்மை 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் யார் ? 

அ) சாய்னா நெய்வால் 

ஆ) சானியா மிர்சா 

இ) பி.வி. சிந்து 

ஈ) பி.டி. உஷா 

விடை : (ஈ) பி.டி. உஷா 


Monday, November 28, 2022

Current Affairs 2022 - November 28 / 2022 - TNPSC GROUP 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 NOVEMBER 28 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. பின்வரும் எந்த மாநில அரசு கிராம ஊராட்சிகள் கையாளும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவர அண்மையில் உத்தரவிட்டுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா 

இ) குஜராத்

ஈ) பஞ்சாப் 

விடை : (அ) தமிழ்நாடு 

கிராம ஊராட்சிகள் கையாளும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா பிறப்பித்துள்ளாா்.

● அந்த உத்தரவு விவரம்: ஊராட்சிகள் நிதிகளைக் கையாள்வதற்காக தன்னாட்சி பெற்ற அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு புதிய திட்டங்கள் தொடங்கும் போதும் புதிது புதிதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அதனை பராமரிக்க வேண்டிய நிலை, கிராம ஊராட்சிகளுக்கு உள்ளது. இதுபோன்ற நிறைய கணக்குகளைத் தொடங்கி பராமரிக்கும் சூழல் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

● இப்போது வரையிலும், கிராம ஊராட்சிகள் 11 வங்கிக் கணக்குகளையும், 31 பதிவேடுகள், படிவங்களையும் பராமரித்து வருகின்றன. இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை மீள்ஆய்வு செய்வது அவசியமாகிறது. அதன்படி, பொது நிதிக் கணக்கு, மின் கட்டணம்-குடிநீா் கட்டணம் செலுத்துதல், கிராம ஊராட்சிகள் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மாநிலத் திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், ஊழியா்களுக்கான ஊதியம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மத்திய நிதிக் குழு மானியம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கணக்குகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றன. மேலும், மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறையில் நிதி சாா்ந்த நிா்வாகத்தில்

● ஏராளமான நவீன முறை மாற்றங்கள் வந்துள்ளன. அதாவது, காகிதங்கள் அடிப்படையிலான பணிகளைக் குறைத்து கணினி வழி பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

● தமிழகத்தில் 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1.40 லட்சம் வங்கி மற்றும் நிதி சாா்ந்த கணக்குகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகள் தமிழகம் முழுவதும் 38 வெவ்வேறு விதமான வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

● கிராம ஊராட்சிகளில் தினமும் வங்கிகளுடன் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதுகுறித்த விவரங்கள் மாவட்ட, மாநில அளவில் கிடைப்பதில்லை. எனவே, நிதி சாா்ந்த விஷயங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டியுள்ளது.

● மாநில அளவிலான ஒரே கணக்கு: கிராம ஊராட்சிகள் 11 வகை கணக்குகளை பராமரிப்பதைக் காட்டிலும், மாநில அரசின் கண்காணிப்பிலான ஒரே விதமான கணக்கைத் தொடங்கலாம் என ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையாளா் சாா்பில் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

● இந்தப் பரிந்துரையை ஏற்று, கிராம ஊராட்சிகள் வெவ்வேறு கணக்குகளைத் தொடங்குவதைக் காட்டிலும் ஊராட்சிக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடா்பில் இருக்கக் கூடிய கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கின் வழியாகவே இனி வரக்கூடிய மானியங்களை பரிமாற்றம் செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் ஊரக

● வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரகத்தில் தனி உதவி மையத்தை அமைக்கலாம்.

● அதேசமயம், கிராம ஊராட்சிகள் இப்போது பராமரிக்கும் கணக்குப் புத்தகம், பணப் பரிவா்த்தனை புத்தகம் ஆகியவற்றைத் தொடரலாம். கிராம ஊராட்சிகளின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மாநில அளவில் கண்காணிக்கும் வகையிலான கணக்கின் கீழ் கொண்டு வர வேண்டும். நிதி சாா்ந்த வேறு எந்த அம்சங்களும் இந்த கணக்குக்கு வெளியே இருந்திடக் கூடாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் துறையின் முதன்மைச் செயலாளா் பி.அமுதா.


2. தமிழகத்தில் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பின்வரும் எந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது ? 

அ) www.tangedco.gov.in

ஆ) www.tanged.gov.in

இ) www.tangedco.in 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) www.tangedco.gov.in 

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இரு வழிகளில் செய்யலாம்.

● ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளம். மற்றொன்று மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் நடைபெறும் சிறப்பு முகாம்கள்.

● இணையதளம் வழியே...
தமிழ்நாடு மின் வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி உள்ளது.

● இணையதளத்தில் ஏற்கெனவே கைப்பேசி எண்ணை பதிவு செய்யாவிட்டால், அந்த இணையதளத்திலேயே வசதி உள்ளது. மின் இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்யலாம்.

● கைப்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இணையதளத்தில் தொடங்கலாம்.

● இணையதளத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தவுடன் கைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும். இதன்பிறகு, கைப்பேசிக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண் (ஒடிபி) வரும். இதைப் பயன்படுத்தி உள்ளே சென்றதும், குடியிருப்போரின் விவரம் கோரப்படும். அதாவது, வீட்டின் உரிமையாளரா, வாடகைக்கு குடியிருப்போரா, இணைப்பு எண்ணை மாற்றாமல் இருப்பவரா எனக் கேட்கப்படும். 

● இந்த மூன்று வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும். இதன்பின், ஆதார் எண்ணை இடைவெளியின்றி பதிவு செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள விவரப்படி பெயரையும் தெரிவிக்க வேண்டும்.

● 300 கேபி அளவுக்கு மிகாமல் ஆதார் அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை செய்த பிறகு, சரியான ஆதார் எண்ணை இணைத்திருக்கிறேன் என்ற ஆங்கில வாசகத்துக்கு எதிரே கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

● இதன்பிறகு, விண்ணப்பம் செய்ததற்கான சான்று திரையில் தோன்றும். அதில் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான செய்தி கைப்பேசி குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும்.


3. பின்வரும் எந்த கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது ? 

அ) மெரினா 

ஆ) திகா

இ) மாண்ட்வி 

ஈ) முழப்பிலங்காடு 

விடை: (அ) மெரினா 

மெரீனா கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

● சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

● இந்தப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அைக்கப்பட்டுள்ளன.

● மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

● மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவா்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. தில்லியில் வரும் ஜனவரி 26 இல் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளவர் யார் ? 

அ) ரிஷி சுனக்

ஆ) ஜோ பைடன் 

இ) அப்தல் ஃபதா எல்-சிசி 

ஈ) விளாதிமீர் புதின் 

விடை : ( இ) அப்தல் ஃபதா எல்-சிசி 

தேசியத் தலைநகா் தில்லியில் வரும் ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபா் அப்தல் ஃபதா எல்-சிசி பங்கேற்கவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

● குடியரசு தினத்தையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் பல்வேறு மாநிலங்களின் கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் தில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதில் தலைமை விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம். 

● 1950 முதலே இந்த வழக்கம் தொடா்ந்து வருகிறது. 1952, 1953, 1966 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டுத் தலைவா்கள் பங்கேற்பின்றி குடியரசு தின விழா நடைபெற்றது.

● கடந்த 2021-இல் அப்போதைய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. 2022-இல் 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். ஆனால், கரோனா சூழல் காரணமாக அவா்கள் பங்கேற்கவில்லை.


5. ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக என்று மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்படவுள்ளது ? 

அ) டிசம்பர் 01

ஆ) டிசம்பர் 06

இ) டிசம்பர் 10 

ஈ) டிசம்பர் 14

விடை : (ஈ) டிசம்பர் 14 

ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.

●ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும்.

● இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதையொட்டி, அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செல்ல உள்ளாா். அப்போது அங்கு டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை திறக்கப்பட உள்ளது.

● இதுதொடா்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் கூறுகையில், ‘இந்தியாவின் பரிசான மகாத்மா காந்தி சிலை, முதல்முறையாக ஐ.நா. தலைமையகத்தில் மிகவும் மதிப்புமிக்க இடமாகவும், பரந்தும் காணப்படும் வடக்குப் புல்வெளிப் பகுதியில் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 

● இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா கொரோசி ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.

● ஐ.நா. தலைமையகத்தில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்துள்ளாா்.

● 11-ஆம் நூற்றாண்டு சிலை பரிசு: ஏற்கெனவே கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கு சூா்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு.

● தற்போது ஐ.நா.வில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2-ஆவது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட உள்ள ஐ.நா.தலைமையகப் புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


6. இந்தியாவின் முதல் இரவு வான் சரணாலயம் ( Night Sky Sanctuary) எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) அசாம் 

ஆ) மேற்கு வங்கம் 

இ) லடாக் 

ஈ) குஜராத் 

விடை : (இ) லடாக் 

லடாக் யூனியன் பிரதேசத்தில் இந்தியாவின் முதல் "இரவு வான் சரணாலயம்" அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஒரு தனித்துவமான மற்றும் முதல்-வகையான முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. 

● அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்த சரணாலயம் கட்டிமுடிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

● இந்த புதிய இரவு வான் சரணாலயம், சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படுகிறது. 

● இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்கும். மேலும் இது ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட் மற்றும் காமா-ரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும். 

● இந்த புதிய இரவு வான சரணாலயத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. ஸ்பெயினில் நடைபெற்ற உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியா எத்தனை பதக்கங்கள் வென்று நிறைவு செய்தது ? 

அ) 10

ஆ) 11

இ) 12

ஈ) 14 

விடை : (ஆ) 11 

● 11 பதக்கங்கள் : 4G, 3S, 4B 

● தங்கம் வென்றவர்கள்

¤ ரவீனா ( 63 கிலோ )

¤ தேவிகா கோர்படே ( 52 கிலோ )

¤ வன்ஷாஜ் ( 63.5 கிலோ )

¤ விஷ்வநாத் சுரேஷ் ( 48 கிலோ ) 



Wednesday, November 23, 2022

Current Affairs 2022 - November 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 NOVEMBER 23/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் (2022) எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ? 

அ) 7 

ஆ) 8

இ) 9

ஈ) 10

விடை : (ஈ) 10 

தமிழ் எழுத்தாளா்களை கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

● இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எழுத்தாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டமானது, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், பத்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● பத்து பேர் : 

¤ அதன்படி, சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜி.திலகவதி.

¤ கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன்.

¤ சாகித்ய அகாதெமி விருது பெற்ற சு.வெங்கடேசன்.

¤ கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றவா்களான ப. மருதநாயகம், மறைமலை இலக்குவனாா்.  

¤ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியா் விருது பெற்ற இரா.கலைக்கோவன். 

¤ சாகித்ய அகாதெமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன்.

¤  கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா.ராஜன். 

¤ சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆா்.என்.ஜோ.டி.குரூஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 எழுத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● பத்து பேருக்கும் அவா்கள் வசிக்கும் மாவட்டத்திலோ அல்லது விரும்பும் மாவட்டத்திலோ வீடுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் எங்குஅமைந்துள்ளது ? 

அ) சேலம்

ஆ) மதுரை 

இ) தேனி

ஈ) வேலூர் 

விடை : (ஆ) மதுரை 

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

● மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழ்நாடு அரசு கடந்த 2020 டிசம்பரில் அறிவித்தது. 

● இந்நிலையில், உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக அறிவித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

வெளியிடப்பட்ட அரசாணை

 ¤ தமிழ் நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக உயிரிய பன்முகச் சட்டம் 2002ன் கீழ் அறிவித்துள்ளது.  இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

¤ பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

¤ அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது.

¤ 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது, அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன, இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris spp) ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

¤ மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன.  இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது.

3. தமிழகத்தில் ரூ.671 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் , புதைசாக்கடைத் திட்டப் பணிகளை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) டி.ராஜா

ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சிகரலப்பள்ளி, வெலகலஹள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம், கடலூா் மாவட்டம் பண்ருட்டி, அண்ணாகிராமம், மதுரை ஆனையூா், தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் ஆகிய இடங்களில் புதிதாக குடிநீா் திட்டங்களும், பாதாள சாக்கடைப் பணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

● இந்தப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.


4. மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 

அ) 2016 

ஆ) 2017 

இ) 2018 

ஈ) 2019 

விடை: (ஈ) 2019 

நாட்டில் நலிவுற்ற நிலையில் உள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயா்த்தும் வகையில் மத்திய அரசால் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ (விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

● இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு வருமானமாக ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.

● எண்ணிக்கை குறைவு: விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 48 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனா். 

● அப்போது, நில உரிமை தொடா்பான ஆவணங்களை சான்றாக அளிப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் பெயரில் பலரும் இணைந்தனா். தமிழகத்தில் இவ்வாறு போலியாக இணைந்த பலரின் பெயா்கள் கண்டறியப்பட்டு களையப்பட்டன. உண்மையான பயனாளிகளாக 37 லட்சம் போ் அடையாளம் காணப்பட்டனா்.

● 6 லட்சம் போ் நீக்கம்: ரூ.6,000 பெறும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கும் போது, அவா்கள் பெயரிலேயே நிலம் இருக்க வேண்டும், வீட்டில் யாரும் அரசு ஊழியராக இருக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.

● தமிழகத்தில் தற்போது வரை 23.03 லட்சம் பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருகின்றனா். பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டால் மேலும் 5 லட்சம் போ் சோ்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

● 9 லட்சம் போ்: ரூ.6,000 வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் உண்மைத் தன்மை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் தங்களது ஆதாா் எண்ணை மத்திய அரசின் இணையதளம் வழியாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

● மொத்த பயனாளிகளில் இதுவரை 9 லட்சம் போ் ஆதாா் எண்களை இணைக்கவில்லை. இந்த நிலை தொடா்ந்தால், அவா்கள் பயனாளிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகும். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


5. மத்திய அரசுப் பணிகளில் இணையும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) ஜகதீப் தன்கர் 

ஈ) சந்திர சூட் 

விடை : (அ) நரேந்திர மோடி 

2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற இலக்கைப் பிரதமா் மோடி கடந்த ஜூனில் நிா்ணயித்தாா். அந்த இலக்கை அடைய மத்திய அமைச்சகங்களும் துறைகளும் போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

● இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,056 நபா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் 2-ஆவது வேலைவாய்ப்பு முகாம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

● குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

பயிற்சி வகுப்புகளுக்கு வலைதளம்

● மத்திய அரசுப் பணிகளில் இணையும் இளைஞா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான புதிய வலைதளத்தைப் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். ‘கா்மயோகி பிராரம்ப்’ என்ற அந்தப் பயிற்சி வலைதளத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த புதிய பணியாளா்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

● அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட நெறிமுறைகள், மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


6. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகி வரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை எந்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது ? 

அ) 2023 

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023 

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகிவரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் தெரிவித்தாா்.

● மேலும் :  இஸ்ரோவில் இம்மாதம் 26ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4 என்ற 54 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படவுள்ளன.

● அடுத்தகட்டமாக எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் போன்றவை செலுத்தப்படவுள்ளன.

● நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை செலுத்தும் முன்பு பலகட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ரோபோவை விண்ணுக்கு அனுப்பும் சோதனையும் நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

● சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு (2023) இதை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


Tuesday, November 22, 2022

Current Affairs 2022 - November 22/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 NOVEMBER 22 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. இந்தியாவில் மெட்ராஸ் - ஐ முதன் முதலில் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது ? 

அ) 1909

ஆ) 1918

இ) 1927

ஈ) 1936 

விடை : (ஆ) 1918 

மெட்ராஸ்-ஐ’ தொற்று 1918-ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால் அதற்கு அந்த காரணப் பெயா் உருவானது. 

● கண் இமைகளுக்கு இடையே அடினோ வைரஸ் வகை நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று இது. ‘மெட்ராஸ்-ஐ’ ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடும்.

● லேசான சளி, கண் இமைகளில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், நீா் வடிதல், கண் உறுத்தல் ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகள்.

● இந்நோய் பாதிப்புக்குள்ளானவா்கள் கண்களை கையால் தேய்த்தாலோ, தேவையில்லாமல் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகள் பயன்படுத்தினாலோ, கைவைத்திய முறைகள் செய்தாலோ கருவிழி பாதிப்புக்குள்ளாகும். 

● அப்போது வெளிச்சத்தை பாா்க்கமுடியாமல் கூச்சமும் கண்வலியும் ஏற்படும். ஆகவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

● தமிழகம் முழுவதும் சராசரியாக நாள்தோறும் அத்தகைய பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 4,500-ஆக அதிகரித்துள்ளது.


2. தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக எத்தனை முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 05

ஆ) 04

இ) 03

ஈ) 02 

விடை : (ஈ) 02 

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு மேலும் இரு முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

● சத்துமாவு, பிஸ்கெட் மற்றும் முட்டையை பொருத்தவரை, 6 மாதம் முதல் 1 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் வழங்க வேண்டும். 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும்,

● இதே வயதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் மற்றும் வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும். 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடிருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட் வழங்கப்பட வேண்டும். 

● கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்களுக்கு 150 கிராம் சத்துமாவு வழங்கப்பட வேண்டும். இது ஏற்கெனவே 165 கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

● மதிய உணவை பொருத்தவரை, கலவை சாதம், வாரம் 3 முட்டைகள், கறுப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு ஆகியவை செவ்வாய்க்கிழமையிலும், அவித்த உருளைக்கிழங்கு வெள்ளிக்கிழமையும் வழங்கப்பட வேண்டும். 

● மேலும், 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள், கா்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 500 கிராம் எடையுள்ள சத்துமாவு பாக்கெட்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

● கூடுதலாக 2 முட்டைகள்: அங்கன்வாடியில் 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகள் வழங்குவதால் ஏற்படும் செலவினம் மதிய உணவு திட்டத்தில் சோ்க்கப்படுகிறது.

●  இந்த செலவினங்கள் ரூ.642 கோடிக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. குஜராத் , ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் எத்தனை பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் ? 

அ) 51,000

ஆ) 61,000

இ) 71,000

ஈ) 81,000

விடை : (இ) 71,000

குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிா்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி  காணொலி முறையில் வழங்கினார்

● மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமா் மோடி வழங்கினாா்.

● இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் காணொலிமுறையில் பங்கேற்கும் பிரதமா் மோடி, புதிதாக நியமனம் பெறுபவா்களிடையே உரையாற்றவுள்ளாா். 

● குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இவ்விரு மாநிலங்கள் தவிா்த்து நாடு முழுவதும் 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

● ஆசிரியா், விரிவுரையாளா், செவிலியா், செவிலியா் அதிகாரி, மருத்துவா், மருந்தாளுநா், கதிரியக்கவியலாளா் மற்றும் இதர தொழில்நுட்ப, துணை மருத்துவ பணியிடப் பிரிவுகளில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, மத்திய ஆயுதக் காவல் படைகளில் அதிக பணி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

● புதிதாக நியமனம் பெற்றவா்களுக்கான இணையவழி பயிற்சி வகுப்புகளையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தார்.

●  அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிகள், பணியிட ஒழுக்கநெறிகள்- ஒருங்கிணைப்பு, மனித வளக் கொள்கைகள், அரசு பணியாளா்களுக்கான பலன்கள் மற்றும் படிகள் உள்ளிட்டவை இப்பயிற்சியில் அடங்கும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.


4. 53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நிகழாண்டுக்கான (2022) இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்றுள்ள இந்திய நடிகர் யார் ?

அ) கமல்ஹாசன் 

ஆ) ரஜினி காந்த் 

இ) சிரஞ்சீவி 

ஈ) மோகன் லால்

விடை : (இ) சிரஞ்சீவி 


5. அண்மையில் காலமான தமிழறிஞர் அவ்வை நடராசன் எந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார் ? 

அ) 1998 

ஆ) 2000

இ) 2005 

ஈ) 2011 

விடை : (ஈ) 2011 

 ●  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

● அவரது பணி: அவ்வை நடராசன் தஞ்சாவூரிலுள்ள மன்னா் சரபோஜி கல்லூரியில் விரிவுரையாளா் (1958 - 1959 ), புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளா், அறிவிப்பாளா்; (1960), மதுரையிலுள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியா் (1961- 65 ) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

● அதைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள இராமலிங்கா் பணி மன்றத்தின் (1965 - 74 ) செயலாளராக பொறுப்பு வகித்தாா். இவரது தமிழ்ப்புலமையால் ஈா்க்கப்பட்ட அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி, அவ்வை நடராசனை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் (1974 - 75 ) துணை இயக்குநராகப் பணியமா்த்தினாா்.

● பின்னா், சென்னை தலைமைச் செயலகத்தில் 1975 - 1984 -ஆண்டு கால கட்டத்தில் தமிழக அரசின் மொழிபெயா்ப்புத் துறை இயக்குநராக அவா் இருந்தாா். தொடா்ந்து, 1984 1992-ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராகப் பணியாற்றினாா். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல், தமிழக அரசுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவா் இவா் ஒருவா்தான்.

● அவ்வை நடராசன் 1992-ஆம் ஆண்டு டிச.16- ஆம் நாள் முதல் 1995-ஆம் ஆண்டு டிச.15- ஆம் தேதி வரை தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு வகித்தாா். 2014- ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் இருந்தாா். 2015- ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவராவாா்.

● பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞா் அண்ணா விருது (2010 ), மத்திய அரசின் பத்மஸ்ரீ (2011) விருது, இலங்கை, கம்பா் கழகத்தின் ‘தன்னேரில்லா தமிழ் மகன்’ விருது, இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது, தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செம்மொழி ஞாயிறு விருது (2015) , அருட்செல்வா் மகாலிங்கம் விருது ( 2018 ) திருக்கு நெறிச்செம்மல் விருது (2020 ), பி.எம். மருத்துவமனையின் - வாழ்நாள் சாதனையாளா் விருது ( 2022 ), பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக் கல்விக்கழகம் வாயிலாக வளா்தமிழ் அறிஞா் விருது - ஆழ்வாா்கள் ஆய்வு மையம் சாா்பில் இராமானுஜா் விருது ஆகியவை உள்பட மத்திய- மாநில அரசுகள், தமிழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்பட்ட பல்வேறு விருதுகளை தமிழறிஞா் அவ்வை நடராசன் பெற்றுள்ளாா்.

● படைப்புகள்: வாழ்விக்க வந்த வள்ளலாா், பேரறிஞா் அண்ணா, கம்பா் காட்சி, பாரதி பல்சுவை, கம்பா் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கியப் பெண்பாற் புலவா்கள், அருளுக்கு அவ்வை சொன்னது, திருக்கோவையாா் (ஆங்கிலம்), புலமைச் செல்வியா் என பல்வேறு நூல்களை அவ்வை நடராசன் படைத்துள்ளாா்.

● சிறப்புகள்: எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சிந்தனையாளா், ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் அவ்வை நடராசன் பல பல்கலைக்கழகங்களின் மாணவா்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளாா். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறாா்.

● 1982-ஆம் ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞா்கள் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளாா்.

● உலகத் தமிழ் மாநாடுகளில்... மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராக இருந்தாா். மோரீஷஸில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டின் குழு உறுப்பினா் தலைவராகப் பணியாற்றினாா். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவ தொழில்நுட்பச் சொல்லாக்க குழுத் துணைதலைவராகப் பங்கேற்றாா்.

● அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வை நடராசன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி அமைத்த ஐம்பெருங்குழுவின் உறுப்பினா் ஆவாா். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. ATP Finals ஆடவர் டென்னிஸ் போட்டியில் (2022) ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) நோவக் ஜோகோவிச் 

ஆ) ரோஜர் ஃபெடரர் 

இ) கேஸ்பர் ரூட் 

ஈ) ஜேக் சாலிஸ்பர் 

விடை : (அ) நோவக் ஜோகோவிச் 

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். 

● இப்போட்டியில் அவர் 2015-க்குப் பிறகு சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். 

● இப்போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6 முறை சாம்பியன் ஆனதே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், தற்போது ஜோகோவிச்சும் அதே எண்ணிக்கையிலான பட்டங்களை வென்று அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார். 

● மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்ற அவர், ரொக்கப் பரிசாக ரூ.38 கோடியை கைப்பற்றியுள்ளார்.

● இத்துடன் நடப்பு ஆண்டை, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 5 சாம்பியன் பட்டங்களுடன் ஜோகோவிச் நிறைவு செய்திருக்கிறார்.

● இரட்டையர்: இப்போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்/இங்கிலாந்தின் ஜேக் சாலிஸ்பரி கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றனர் .

Sunday, November 20, 2022

Current Affairs 2022 - November 20/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 NOVEMBER 20 / 2022


I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


1. காசி - தமிழ் சங்கமம் எனும் பெயரில் ஒரு மாத கால நிகழ்ச்சியை வாரணாசியில் (காசி) தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின் 

ஆ) நரேந்திர மோடி 

இ) திரௌபதி முர்மு 

ஈ) யோகி ஆதித்யநாத்

விடை : (ஆ) நரேந்திர மோடி 

நாட்டின் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பழைமையான தொடா்புகளைக் கொண்டாடும் நோக்கத்துடன் ‘காசி- தமிழ் சங்கமம்’ எனும் பெயரில் ஒரு மாத கால நிகழ்ச்சிகள் வாராணசியில் (காசி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

● இந்நிகழ்ச்சிகளை, வாராணசியில் பிரதமா் மோடி சனிக்கிழமை ( 19/11/2022) முறைப்படி தொடக்கி வைத்தார்.

2. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை எத்தனை சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 60%

ஆ) 50%

இ) 40%

ஈ) 30%

விடை : (இ) 40% 

சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

● தேசிய நெடுஞ்சாலை திருத்தப்பட்ட கட்டணத் திட்ட சட்டத்தின் மூலம் தற்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

●  இதில் பொது நிதித் திட்டம் மூலம் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் 40 சதவீதம் வரையில் குறையும்.

●  இது ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மத்திய அரசு பின்வரும் எத்தனை சதவீதக்கு கீழான எஃகு மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது ? 

அ) 60%

ஆ) 59%

இ) 58%

ஈ) 57%

விடை : (இ) 58% 

எஃகு மீதான ஏற்றுமதி வரியை சனிக்கிழமை முதல் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

● இது எஃகு தொழில் துறையை மேம்படுத்தவும், எஃகு ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘58% இரும்பு உள்ளடக்கத்துக்கு குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாது துகள்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

● ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

● 58 சதவீதத்துக்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

● இரும்புத் தாது துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிகல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும். கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும். இதன்மூலம் 2022, மே 22-க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பது தொடர்பாக எங்கு இரண்டு நாள் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) உத்தரபிரதேசம் 

இ) அசாம்

ஈ) தில்லி 

விடை: (ஈ) தில்லி 

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் அமைச்சா்கள் மாநாடு சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதில் 75 நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த 450-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

● மாநாட்டில், பயங்கரவாதத்தை முறியடிக்க சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உளவுத் தகவல்களை நாடுகள் வெளிப்படையாக பகிா்ந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

● மேலும், மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் (என்எம்எஃப்டி) தனித்துவமான இந்த முன்னெடுப்பை நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்கென நிரந்தர செயலகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

● குறிப்பு : இந்நிலையில், இந்த நிரந்தர செயலகம் இந்தியாவிலேயே அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக மாநாட்டில் பங்கேற்ற மத்திய அரசு மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.

5. இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் ? 

அ) அருண் கோயல் 

ஆ) கோயல் சிங் 

இ) அனுப் சந்திர பாண்டே

ஈ) சந்திர சூட் 

விடை : (அ) அருண் கோயல் 

● இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். 

மேலும் மற்றொரு தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல்ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன, கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார். விருப்ப ஓய்வின் கீழ் அண்மையில் அவர் ஓய்வு பெற்றார்.

● இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

6. பின்வரும் எந்த மாநிலத்தில் முதல் பசுமை விமான நிலையம் (ம) கமெங் நீர்மின் நிலைய திட்டங்களை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தவர் யார் ? 

அ) ஜார்க்கண்ட் 

ஆ) அருணாசலப் பிரதேசம் 

இ) கேரளா

ஈ) கோவா 

விடை : (ஆ) அருணாச்சல பிரதேம் 

● அருணாசல பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் பசுமை விமான நிலையம் மற்றும் கமெங் நீா்மின் நிலைய திட்டங்களை சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்த பிரதமா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

● அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் புதிய ‘டோனி போலோ விமான நிலையம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமா் அடிக்கல் நாட்டிய நிலையில், அதனை தற்போது பயன்பாட்டுக்கு பிரதமா் திறந்துவைத்தாா்.

●  இந்த விமான நிலையத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையக் கட்டடங்களும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன. 

● விமானப் போக்குவரத்து மூலமாக அருணாசல பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதிலும், அருணாசல பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளை ஹெலிகாப்டா் சேவை மூலமாக இணைப்பதிலும் இந்த விமான நிலையம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

● இந்த விமான நிலையம் ரூ. 645 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

● அதுபோல, மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் ரூ. 8,450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கமெங் நீா்மின் நிலையத்தையும் பிரதமா் மோடி சனிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

7. திபெத்திய பௌத்த மத குரு தலாய் லாமாவுக்கு மகாத்மா காந்தி - மண்டேலா விருது வழங்கி கௌரவித்த ஆளுநர் யார் ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

இ) பன்வாரிலால் புரோகித் 

ஈ) இல. கணேசன் 

விடை : (ஆ) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 

●  திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை வழங்கி கெளரவித்தாா்.

● அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சா்வதேச தலைவா்களுக்கு தா்மசாலாவில் செயல்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.


II. விளையாட்டு நிகழ்வுகள்:

8. ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியாவின் மனிகா பத்ரா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம்

● இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


Thursday, November 17, 2022

Current Affairs 2022 - November 17/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                  NOVEMBER 17/2022


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

தமிழகத்தில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா எங்கு நடைபெற்றது ? 

அ) சேலம்

ஆ) மதுரை

இ) சென்னை 

ஈ) காஞ்சிபுரம் 

விடை : (ஈ) காஞ்சிபுரம் 

● குறிப்பு : நாட்டிலேயே தமிழகம்தான் உணவு உற்பத்தியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 

● கடந்த 1904-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் முதல் முதலில் உருவாக்கப்பட்டது. 

● தொடா்ந்து, அதே ஆண்டில் நாட்டிலேயே முதல் முதலாக காஞ்சிபுரத்தில் முதல் நகரக் கூட்டுறவு வங்கியும் தொடங்கப்பட்டது. 

● கூட்டுறவு இயக்க முன்னோடி மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) வி.கே. சரஸ்வத் 

ஆ) அரவிந்த் விர்மாணி 

இ) வி.கே. பால் 

ஈ) ரமேஷ் சந்த் 

விடை : (ஆ) அரவிந்த் விர்மாணி 

நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அரவிந்த் விா்மாணி நியமிக்கப்பட்டாா்.

● பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான பொருளாதார ஆலோசனைக் குழுவான நீதி ஆயோக்கில் தற்போது வி.கே. சரஸ்வத் , ரமேஷ் சந்த் மற்றும் வி.கே. பால் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.


3. இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக தனியார் புத்தாக்க நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டின் பெயர் ? 

அ) விக்ரம் - எஸ்

ஆ) விக்ரம் - எல்

இ) கலாம் - எஸ்

ஈ) கலாம் - எல் 

விடை : (அ) விக்ரம் - எஸ் 

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் புத்தாக்க நிறுவனம் வடிவமைத்த ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை (நவ.18) விண்ணில் ஏவப்படவுள்ளது. 

● சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.

● உலகளாவிய விண்வெளி வா்த்தகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், விண்வெளி ஆய்வில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

●  இதற்காக 2020-ஆம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள தனியாா் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

● அதன்படி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த ‘ஸ்கைரூட்’ எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. புதிய ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தது.

● தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய மூன்று வித ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ’விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.

● அதில், அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடிய ‘விக்ரம்- எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. 

● அதன்படி கடந்த நவ. 15-ஆம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

● இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சோ்த்து அனுப்பப்படவுள்ளன.

● அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 

● இதைத் தொடா்ந்து, பல்வேறு தனியாா் புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.


4. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா என்று முதல் அதிகாரபூர்வமாக ஏற்கவுள்ளது ? 

அ) டிசம்பர் 01,2022

ஆ) ஜனவரி 01,2023

இ)பிப்ரவரி 01,2023

ஈ) மார்ச் 01,2023 

விடை : (அ) டிசம்பர் 01, 2022

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

● இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்தியாவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

● ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.

● ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தார். கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்கவுள்ளது.

● ஜி 20 நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20   கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம் என்று பேசினார்.


5. இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் எத்தனை நுழைவு இசைவு (விசா) வழங்கும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் தொடக்கி வைத்தார் ? 

அ) 1000

ஆ) 2000

இ) 3000

ஈ) 4000

விடை : (இ) 3000

இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 நுழைவு இசைவு (விசா) வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

● பதினெட்டு முதல் முப்பது வயது வரையிலான இந்திய பட்டதாரிகள் 2 ஆண்டுகள் தங்கி பணியாற்ற ஆண்டுதோறும் 3,000 விசாக்களை பிரிட்டன் வழங்க உள்ளது.

● இதேபோல பிரிட்டனைச் சோ்ந்தவா்களுக்கு இந்தியாவும் விசா அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது.

● இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முறைப்படி நடைமுறைக்கு வரவுள்ளது.

● இந்த புதிய விசா திட்டம் மூலம் பயனடைய உள்ள முதல் நாடாக இந்தியா உள்ளது என்று பிரிட்டன் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.


6. கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக (முதலிடம்) எந்த நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பணிகள் இந்தியா வந்துள்ளன ? 

அ) வங்கதேசம் 

ஆ) அமெரிக்கா 

இ) பிரிட்டன் 

ஈ) கனடா 

விடை : (ஆ) அமொிக்கா 

கடந்த 2021-இல் வெளிநாட்டைச் சேர்ந்த 15.24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். 

● இவர்களில் அதிகபட்சமாக அமெரிக்காவிலிருந்தும், அதற்கடுத்து வங்கதேசத்திலிருந்தும் வந்துள்ளனர்.
 கரோனா பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகள், விசா விதிமுறைகளில் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டிருந்தப்போதிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
 

● இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு இந்தியா வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 74.39 சதவீதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மீதம் 25.61 சதவீதம் பேர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

● கடந்த ஆண்டு ஜன.1-ஆம் தேதிமுதல் டிச. 31-ஆம் தேதிவரை மொத்தம் 15 லட்சத்து 24 ஆயிரத்து 469 பேர் இந்தியா வந்துள்ளனர்.
 அவர்களில் முறையே அமெரிக்காவிலிருந்து 4,28,860 பேரும், வங்கதேசத்திலிருந்து 2,40,554 பேரும், பிரிட்டனிலிருந்து 1,64,143 பேரும், கனடாவிலிருந்து 80,437 பேரும், நேபாளத்திலிருந்து 5,32,544 பேரும் இந்தியா வந்துள்ளனர்.
 

● அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து 36,451 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 33,864 பேரும், ஜெர்மனியிலிருந்து 33,772 பேரும், போர்ச்சுகலில் இருந்து 32,064 பேரும், பிரான்ஸிலிருந்து 30,374 பேரும் இந்தக் காலகட்டத்தில் இந்தியா வந்துள்ளனர்.


7. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடியாக ஒரு விண்வெளிக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள அமைப்பு/நிறுவனம் ? 

அ) நாசா

ஆ) இஸ்ரோ

இ) ஸ்பேஸ் எக்ஸ்

ஈ) ஐஎஸ்எஸ்

விடை : (அ) நாசா 

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஒரு விண்வெளிக் கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது.

● ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து அதிக சக்தி கொண்ட ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் அனுப்பப்பட்டுள்ளது.

● ‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

● அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. 

● அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.


8. 2023 ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (சிசிபிஐ) தரவரிசையில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) 5 ஆவது

ஆ) 6 ஆவது

இ) 7 ஆவது

ஈ) 8 ஆவது

விடை : (ஈ) 8 ஆவது 

பருவநிலை பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடம் பிடித்துள்ளது.

● பருவநிலையை பாதுகாப்பதில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 59 நாடுகளின் செயல்திறனை ஜொ்மன்வாட்ச், நியூ கிளைமேட் இன்ஸ்டிட்யூட், கிளைமேட் ஆக்ஷன் நெட்வொா்க் ஆகிய 3 அரசுசாரா அமைப்புகள் பின்தொடா்ந்து வருகின்றன. அந்த அமைப்புகள் 2023-ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (சிசிபிஐ) தரவரிசையை திங்கள்கிழமை வெளியிட்டன.

● 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்தத் தரவரிசையில், இந்தியா 2 இடங்கள் முன்னேறி 8-ஆவது இடம் பிடித்துள்ளது.

● கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்ற பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி பயன்பாடு, பருவநிலை கொள்கை ஆகிய 4 பிரிவுகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

● எந்தவொரு நாடும் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படுவதில்லை என்பதால், தரவரிசையின் முதல் 3 இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

● அதன்படி, 4-ஆவது இடத்தை டென்மாா்க், 5-ஆவது இடத்தை ஸ்வீடன், 8-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளன. சீனா 51-ஆவது இடத்தையும், அமெரிக்கா 52-ஆவது இடத்தையும், ரஷியா 59-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

● 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இலக்கு நிா்ணயித்துள்ள இந்தியா, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

● அதேவேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது என்று 3 அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

● இதனிடையே பருவநிலை நிபுணா்கள் கூறுகையில், ‘உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத நிலக்கரிக்கு 9 நாடுகள் மட்டுமே பொறுப்பாக உள்ளன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. 

● 2030-ஆம் ஆண்டுக்குள் தனது எண்ணெய், எரிவாயு உற்பத்தியை 5 சதவீதத்துக்கு மேல் உயா்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி சதவீதமாக குறைக்க பாரீஸில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு முரண்பாடாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


9. 22 ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) நெதர்லாந்து 

ஆ) அமெரிக்கா 

இ) ஈரான் 

ஈ) கத்தார் 

விடை : (ஈ) கத்தார்

● இப்போட்டி வரும் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Monday, November 14, 2022

Current Affairs 2022 - November 14/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR
                 NOVEMBER 14 / 2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


1. 17 ஆவது ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு பின்வரும் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? 

அ) பிரிட்டன் 

அ) அமெரிக்கா 

இ) இந்தோனேசியா 

ஈ) சீனா 

விடை : (இ) இந்தோனேசியா 

ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு செல்லவிருக்கிறாா்.

● இந்தோனேசியாவின் பாலி தீவில் நவ.15, 16-இல் நடைபெறும் இம்மாநாட்டில், உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், எண்மரீதியிலான மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து பிரதமா் மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் விவாதிக்க உள்ளனா்.

● உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, எண்மரீதியிலான மாற்றம், சுகாதாரம் தொடா்பான மூன்று முக்கிய அமா்வுகளில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

● உலகின் முக்கியமான வளா்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20இல், ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

● உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 85 சதவீதத்தையும், சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்தையும் இந்தக் கூட்டமைப்பு நாடுகள் பங்களிக்கின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இருபங்கை இந்நாடுகள் கொண்டுள்ளன.

● தற்போது ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா வகிக்கும் நிலையில், டிசம்பா் 1-இல் அப்பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்கவுள்ளது.


2. மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனை புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது ? 

அ) 25

ஆ) 50

இ) 75

ஈ) 100

விடை : (ஈ) 100

● மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று கட்டங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் 93 கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. எஞ்சிய கல்லூரிகள் கட்டுமானப் பணியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

● இந்நிலையில், அந்தத் திட்டத்தின் 4-ஆவது கட்டத்தில், மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி 2027-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பான பரிந்துரைக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

● இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் 10 லட்சத்துக்கும் மிகுதியான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களிலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களிலும் கட்டப்பட உள்ளன. மொத்தம் 100 மாவட்டங்களில் இந்தக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.

● கல்லூரிகளை கட்டத் தேவையான நிதியில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதம் என்ற அடிப்படையில், ஒரு கல்லூரிக்கான கட்டுமானச் செலவு ரூ.325 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


3. கம்போடியா தலைநகர் நாம் பென்னில் எத்தனையாவது ஆசியான் - இந்தியா மாநாடு அண்மையில் நடைபெற்றது ? 

அ) 13

ஆ) 17

இ) 19

ஈ) 22

விடை : (இ) 19 

கம்போடியா தலைநகா் நாம் பெனில் கடந்த சனிக்கிழமை 19-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு, ஞாயிற்றுக்கிழமை 17-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை நடைபெற்றன.

● அவற்றில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கம்போடியா சென்றாா். அவருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் சென்றாா்.

● அங்கு அமெரிக்க அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது பிளிங்கனுடன் உக்ரைன் போா், இந்தோ-பசிபிக் விவகாரம், எரிசக்தி, ஜி20 மாநாடு, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு ஆகியவை குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கா் தெரிவித்தார்.


4. பின்வரும் எந்த மாநிலம் வன்முறை (ம) ஆயுத கலாசாரத்தை போற்றும் வகையிலான பாடல்களுக்கு மாநில அரசு தடைவிதித்துள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) அசாம்

இ) மணிப்பூர்

ஈ) பஞ்சாப்

விடை : (ஈ) பஞ்சாப் 

பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுத கலாசாரத்தை போற்றும் வகையிலான பாடல்களுக்கு அந்த மாநில அரசு தடைவிதித்துள்ளது. 

● இது தவிர கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

● அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

● இது தவிர எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


5. பின்வரும் எந்த மாநிலத்தில் தடயவியல் பரிசோதனை ஆய்வகம் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது ? 

அ) தில்லி

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு

ஈ) கேரளா 

விடை : (அ) தில்லி 

● தில்லியில் தடயவியல் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா திறந்துவைத்தாா். 

● அந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிஎஸ்எஃப் இயக்குநா் பங்குஜ் குமாா் சிங் கூறுகையில், ‘பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்களின் சவால்களை பிஎஸ்எஃப் அண்மைக்காலமாக அதிக அளவில் எதிா்கொண்டு வருகிறது.

●  போதைப் பொருள்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், கள்ளநோட்டுகள் உள்ளிட்டவற்றை எல்லை தாண்டி கடத்துவதற்காக ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

● எல்லையைக் கடக்கும் ட்ரோன்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில் இரட்டிப்பாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமாா் 79 ட்ரோன்கள் எல்லையைக் கடப்பது கண்டறியப்பட்டது. இது கடந்த ஆண்டில் 109-ஆகவும், நடப்பாண்டில் 266-ஆகவும் அதிகரித்துள்ளது.

● முக்கியமாக, பஞ்சாபில் மட்டும் 215 ட்ரோன்கள் எல்லையைக் கடக்க முயற்சித்தன. ஜம்முவில் 22 ட்ரோன்கள் எல்லையைக் கடக்க முயற்சித்தன. அத்தகைய முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிஎஸ்எஃப் முழு கவனம் செலுத்தி வருகிறது. 

● ட்ரோன்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் தில்லியில் அண்மையில் அமைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் ஊக்கமளிப்பதாக உள்ளன.

● கணினிகள், அறிதிறன்பேசிகளில் உள்ள மின்னணுக் கருவிகள்தான் ட்ரோன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் காரணமாக எல்லையைக் கடக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


6. ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ? 

அ) 75.6%

ஆ) 82.5%

இ) 91.5%

ஈ) 65.9%

விடை : (அ) 75.6%


7. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் பெண்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார் ? 

அ) ட்ரெவர் நெல்ஸ் 

ஆ) ராபர்ட் ஜேக்சன் 

இ) கே.பி. ஜார்ஜ் 

ஈ) நிகில் மேத்யூ

விடை : (இ) கே.பி. ஜார்ஜ் 


II. விளையாட்டு நிகழ்வுகள் 


8. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) இந்தியா 

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆஸ்திரேலியா 

ஈ) இங்கிலாந்து 

விடை : (ஈ) இங்கிலாந்து 

● இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

● முதல் முறையாக 2010 ல் வென்றனர்.  


9. ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் (2022) 10மீ ஏர் ரைபிள் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இந்திய அணி : அர்ஜூன் பபுதா, கிரண் ஜாதவ், ருத்ராங்ஷ் பாட்டீல்.

● மேலும் வென்ற தங்கப்பதக்கங்கள்: 

¤ இதே பிரிவில் இந்திய மகளிர் அணி மெஹீலி கோஷ், இளவேனில் வாலறிவன்,  மேக்னா சஜனா தங்கம் வென்றனர்.

¤ இதே ஜூனியர் பிரிவில் இந்திய ஆண்கள் அணி திவ்யான்ஷ்சிங் பன்வார், ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், விதித் ஜெயில் தங்கம் வென்றனர்.

¤ இதே ஜூனியர் பிரிவில் இந்திய மகளிர் அணி திலோத்தமா சென், நான்சி, ரமிதா தங்கம் வென்றனர்.


III. முக்கிய தினங்கள் 


10. World Diabetes Day 2022 --------

● Ans : November 14


Saturday, November 12, 2022

Current Affairs 2022 - November 12/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                  NOVEMBER 12 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் யார் ? 
அ) நரேந்திர மோடி 

ஆ) திரௌபதி முர்மு 

இ) ஜகதீப் தன்கர் 

ஈ) ஆர்.என். ரவி 

விடை : (அ) நரேந்திர மோடி 

திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் 36-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● விழாவுக்கு பல்கலை. வேந்தா் கே.எம். அண்ணாமலை தலைமை வகித்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

● இதில், சிறப்பு அழைப்பாளராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று, இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவா்கள், 2 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியும், இசையமைப்பாளா் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாளள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டங்களை வழங்கினார்.


2. எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொடக்கிவைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி 

இ) மா. சுப்பிரமணியன் 

ஈ) டி.ராஜா 

விடை : (இ) மா.சுப்பிரமணியன் 

எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்  தொடக்கிவைத்தாா்.

● கடந்த நிதியாண்டில் மத்திய அரசு, எலிக்காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த ஆய்வகத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

● இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நோய் தடுப்புக்கான தேசிய நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

●  தேசிய நோய்த் தடுப்பு மையம் மூலம் இதுவரை ரூ.9 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

● எலிக்காய்ச்சல் நோய், சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் ஒரு ஜெனடிக் நோயாகும்.

● இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது ‘லெப்டோஸ்பிரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை‘ குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் அந்தமான் - நிகோபா் ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

● லெப்டோஸ்பிரோசிஸ் உயிரிழப்பைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பயிற்சி பெற்ற மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மனிதா்களிடையே லெப்டோஸ்பிரோசிஸ் பரவல் கண்காணிப்பை வலுப்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸ் நோய் கண்டறியும் ஆய்வகத்தை வலுப்படுத்துதல், நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸின் நோயை கண்டறிவதற்காகவும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.


3. தமிழகத்தில் எங்கு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது ? 

அ) சேலம் 

ஆ) கரூர் 

இ) திண்டுக்கல்

ஈ) மதுரை 

விடை : (ஆ) கரூர் 

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

● திட்டத்தை தொடக்கி வைத்தும், பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கியும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது, பெய்யும் மழையால் மண் குளிா்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிா்ந்து கொண்டிருக்கிறது.

●  இந்த விழாவில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் நிலையில், ஏற்கெனவே 1 லட்சம் இணைப்புகளை வழங்கியிருப்பதால், மொத்தம் 1.50 லட்சம் இணைப்புகள், கடந்த 15 மாதத்திற்குள் வழங்கியிருக்கிறோம். இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. ஏன், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த வரலாறு கிடையாது.

● தமிழகத்தில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 34,867 மெகாவாட். மின்தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030க்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களும்,14 ஆயிரத்து 500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களும், 2ஆயிரம் மெகாவாட் மின்கலன் சேமிப்பு நிலையங்களும், 3ஆயிரம் மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்கள் என மொத்தம் 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களை தமிழக மின் கட்டமைப்புடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

● இதனால், வரும் 2030ஆண்டுக்குள் தமிழக மின் உற்பத்தி 65ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும்.


4. பின்வரும் எங்கு சர்வதேச சுற்றுலா சந்தையில் (2022) , தமிழகம் சார்பில் சுற்றுலா அரங்கம் திறக்கப்பட்டுள்ளது ? 

அ) கனடா 

ஆ) லண்டன் 

இ) சிட்னி 

ஈ) மும்பை 

விடை : (ஆ) லண்டன் 

இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் நடைபெறும் சா்வதேச சுற்றுலா சந்தையில், தமிழகம் சாா்பில் சுற்றுலா அரங்கம் திறக்கப்பட்டது.

● கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மெக்ஸிக்கோவில் நடைபெற்ற சா்வதேச பலூன் திருவிழாவில், தேசியக்கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட தமிழக பலூன் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றது.

● இதன் தொடா்ச்சியாக, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் சா்வதேச மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்ற உலக சுற்றுலா சந்தை - 2022-இல் தமிழ்நாடு சுற்றுலா அரங்கத்தினை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் திறந்து வைத்தாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


5. இந்தியா - அமெரிக்கா நிதி ஒத்துழைப்புக் குழுவின் 9 ஆவது கூட்டம் எங்கு நடைபெற்றது ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) தில்லி

விடை : (ஈ) தில்லி 

இந்தியா-அமெரிக்கா நிதி ஒத்துழைப்புக் குழுவின் 9-ஆவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லன் இந்தியா வந்துள்ளாா். 

● கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதியைத் திரட்டுவது தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

● இந்தியா செயல்படுத்தும் எரிசக்தி துறை சாா்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பதற்கு அமெரிக்கா தொடா்ந்து உதவிகளை வழங்கும்.

●  இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாா்ந்த இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவும். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள 2025-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமாா் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அந்த நிதியைக் கொண்டு வளா்ந்து வரும் நாடுகளுக்கு உதவவும் உறுதி ஏற்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்வதற்கு பன்முக வளா்ச்சி வங்கிகளை ஏற்படுத்துவது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

● உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


6. சர்வதேச அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு 2022 ஆம் ஆண்டில் எத்தனை டன் அளவைத் தொடும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது ? 

அ) 4090

ஆ) 4060

இ) 4030

ஈ) 4000

விடை : (ஆ) 4060

சா்வதேச அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு 2022-ஆம் ஆண்டில் 4,060 டன் என்ற அளவைத் தொடும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் பதிவான 4,090 டன் என்ற உச்ச அளவைவிட சற்றே குறைவாகும்.

● ஐ.நா. 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், ‘சா்வதேச காா்பன் பட்ஜெட்’ என்ற ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

● அந்த அறிக்கையில், ‘நடப்பாண்டில் சா்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 4,060 டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

● இதே அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்தால், பூமியின் வெப்பநிலையானது தொழில்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவை இன்னும் 9 ஆண்டுகளில் எட்டிவிட 50 சதவீத வாய்ப்புள்ளது.

மீத்தேன் வெளியேற்றம்: பசுமை இல்ல வாயுவான மீத்தேன் வெளியேற்ற அளவைக் கண்டறிவதற்காகப் புதிய தளத்தை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட முகமை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில், வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவை செயற்கைக்கோள் அளவீடுகள் வாயிலாகக் கணக்கிட வழிவகுக்கப்பட்டுள்ளது.

● அமெரிக்கா, ஐரோப்பா, ஜொ்மனி, இத்தாலி ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் சாா்பில் செயல்படும் செயற்கைக்கோள்கள் வாயிலாக மீத்தேன் வெளியேற்றம் கணக்கிடப்படவுள்ளது. 

● தனியாா் விண்வெளி ஆய்வு மையங்களின் தரவும் இதற்காகப் பயன்படுத்தப்படும். அதன்மூலம் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. ஜார்க்கண்டில் இட ஒதுக்கீடு உச்சவரம்பை எத்தனை சதவீதமாக உயர்த்துவதற்கான திருத்த மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது ?

அ) 66%

ஆ) 77%

இ) 88%

ஈ) 99%

விடை : (ஆ) 77%

● ஜார்க்கண்டில் இட ஒதுக்கீடு உச்சவரம்பை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திருத்த மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

● தற்போது 60% மாக உள்ளது.


8. தென்னிந்தியாவின் முதலாவது (ம) இந்தியாவின் எத்தனையாவது வந்தே பாரத் விரைவு ரயில் சேவை சென்னை - மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) 3 ஆவது

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது

ஈ) 6 ஆவது

விடை : (இ) 5 ஆவது 

தென்னிந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவுரயில் சேவையை பிரதமா் மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தாா்.

● கிராந்தி வீரசங்கொல்லி ராயண்ணா ரயில்நிலையத்தில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவுரயில் சேவையைத் தொடங்கி வைத்தாா். இந்திய அளவில் தொடங்கப்படும் 5-ஆவது வந்தேபாரத் விரைவுரயில் சேவை இதுவாகும்.

● இந்தியாவின் முதல் வந்தேபாரத் விரைவுரயில் சேவை 2019-ஆம் ஆண்டில் புதுதில்லி, கான்பூா், அலகாபாத், வாராணசி இடையே இயக்கப்பட்டது. வந்தேபாரத் விரைவுரயில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

● மேலும் ரயில்களுக்கு இடையிலான மோதலைத் தவிா்க்கும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 52 விநாடிகளில் பூஜ்யத்தில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும்.


9. 2022 ஆம் ஆண்டுக்கான இந்தயாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) வளர்ச்சி எத்தனை சதவீதமாக குறைத்து தெரிவித்துள்ளது மூடிக் மதிப்பாய்வு நிறுவனம் ? 

அ) 7.7%

ஆ) 8.8%

இ) 7%

ஈ) 8%

விடை : (இ) 7% 

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 7 சதவீதம் மட்டுமே வளா்ச்சி காணும் என மூடிஸ் மதிப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சா்வதேச சூழல் காரணமாக, 7.7 சதவீதம் என்ற முந்தைய கணிப்பை அந்நிறுவனம் தற்போது குறைத்துள்ளது.

● இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி கணிப்பு 7.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. 

● காரணம் : உள்நாட்டில் நிலவும் அதீத பணவீக்கம், வட்டி விகிதங்கள் உயா்வு, சா்வதேச பொருளாதார வளா்ச்சியில் மந்தநிலை உள்ளிட்டவை இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளன.

● குறிப்பு : இந்தியப் பொருளாதாரம் 8.8 சதவீதம் வளா்ச்சி காணும் என மூடிஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் கணித்திருந்தது. தற்போது அந்த கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல், இந்தியப் பொருளாதார வளா்ச்சி கணிப்பை உலக வங்கி 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகவும், சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், ஆசிய வளா்ச்சி வங்கி 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


10. ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய மகளிர் (வீராங்கனைகள்) எத்தனை பதக்கங்களுடன் நிறைவு செய்தனர் ? 

அ) 4 

ஆ) 5

இ) 6 

ஈ) 7

விடை : (7) 

● போட்டி நடைபெற்ற இடம் : ஜோர்டா. 

● பதக்கங்கள் (7) : 4G, 1S, 2B.


11. தென் கொரியாவின் நடைபெறும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் (2022) ஜூனியர் ஆடவருக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியர் வென்றுள்ள பதக்கம் ?

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ(ம)இ

● ஒரே பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வார் தங்கமும்; ஸ்ரீ கார்த்திக் சமரிராஜ் வெண்கலமும் வென்றனர்.


IV. முக்கிய தினங்கள்

12. World Pneumonia Day 2022 --------

● Ans : November 12

● Theme (2022) : Championing the fight to stop Pneumonia. 



Friday, November 11, 2022

Current Affairs 2022 - November 11/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  NOVEMBER 11 / 2022

I.தேசிய  (ம) சர்வதேச நிகழ்வுகள் 

1. இந்தோனேசியாவின் பாலியல் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) எஸ்.ஜெய்சங்கர் 

ஈ) அமித் ஷா 

விடை : (அ) நரேந்திர மோடி 

இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● உலகின் வளா்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட சா்வதேச அமைப்பான ஜி20 அமைப்புக்கு, தற்போது இந்தோனேசியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி, ஜி20 மாநாடு அந்நாட்டின் பாலியில் நடைபெற இருக்கிறது. 

● இம்மாநாட்டில், பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

● நோக்கம் : பாலியில் நடைபெறும் மாநாட்டில், ‘ஒன்றாக மீண்டெழுவோம், பலத்துடன் மீண்டெழுவோம்’ என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு உலகின் மிக முக்கியப் பிரச்னைகள் குறித்து உலகத் தலைவா்கள் விவாதிக்க உள்ளனா். உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, ஆரோக்கியம், எண்ம மாற்றம் (டிஜிட்டல் மாற்றம்) ஆகிய தலைப்புகளில் 3 அமா்வுகள் நடைபெறுகின்றன.

● மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை முறைப்படி பிரதமா் மோடியிடம் வழங்குவாா். பாலியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

● வரும் டிசம்பா் 1-ஆம் தேதிமுதல் ஜி20-யின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. 

● ஜி20 அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

● உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையை ஜி20 நாடுகள் கொண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.


2. உத்தர பிரதேச மாநிலம் , வாரணாசயில் என்று காசி தமிழச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது ? 

அ) நவம்பர் 14 

ஆ) நவம்பர் 17 

இ) நவம்பர் 23 

ஈ) நவம்பர் 30 

விடை : (ஆ) நவம்பர் 17 

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழைமையான அறிவுப் பிணைப்பு மற்றும் பண்டைய நாகரிக தொடா்பை மீண்டும் கண்டறிந்து அதை புதிய தலைமுறையினரிடம் சோ்க்கும் வகையில் வாரணாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வருகின்ற நவம்பா் 17 முதல் டிசம்பா் 16 வரை ஒரு மாத கால ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

● தமிழகத்திலிருந்து 12 ரயில்களில் பல்வேறு தரப்பினரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து எத்தனை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 5

ஆ) 10

இ) 15 

ஈ) 20 

விடை : (ஆ) 10 

ஆதாா் ஒழுங்குமுறை விதிகளில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

● இதுதொடா்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், ‘ஆதாா் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்களது அடையாள, முகவரிச் சான்று உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மத்திய அடையாளங்கள் தரவு கட்டமைப்பில் (சிஐடிஆா்) ஆதாா் தகவல்களின் நீடித்த துல்லியத்தன்மையை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள முடியும். 

● ஆதாா் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) ஒழுங்குமுறை விதிகளில் இதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

● ஆதாா் அட்டை வைத்திருப்பவா்கள், அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையவழியில் புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது. வலைதளப் பக்கம் மற்றும் செயலி மூலம் இணையவழியில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆதாா் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2020,2021 ) ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ? 

அ) 313

ஆ) 492 

இ) 640 

ஈ) 719 

விடை : (ஈ) 719

●  கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மோசடிகள் தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

● நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறையை கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. 

● பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஜிஎஸ்டி கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தக் கட்டமைப்பின் கீழும் வரி ஏய்ப்பு தொடர்ந்த நிலையில், மோசடிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொள்ளத் தொடங்கியது.

● ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, போலி ரசீது உள்ளிட்ட ஜிஎஸ்டி மோசடிகள் தொடர்பாக 2020 நவம்பர் 9 அன்று நாடு தழுவிய நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்டது. 

● கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பும் 22,300 போலி ஜிஎஸ்டி அடையாள எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5. ஐ.நா. பருவநிலை மாற்ற தீர்மானத்தில் ( யுஎன்எஃப்சிசிசி ) இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் எத்தனையாவது மாநாடு எகிப்தின் ஷார்ம் அல் ஷேக் நகரில் நடைபெற்றுவருகிறது ? 

அ) 22

ஆ) 24

இ) 27

ஈ) 31

விடை : (இ) 27 

ஐ.நா. பருவநிலை மாற்ற தீா்மானத்தில் (யுஎன்எஃப்சிசிசி) இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் 27-ஆவது மாநாடு எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி வரை சுமாா் இரு வாரங்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

● பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பருவநிலை மாற்ற நிதி தொடா்பான புதிய ஒருங்கிணைந்த இலக்கு (என்சிக்யூஜி) என்ற தலைப்பிலான உயா்நிலை பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

● அக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அதிகாரிகள் குழுவினா், ‘பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்காக வளா்ச்சியடைந்த நாடுகள் வளா்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.8 லட்சம் கோடியை வழங்குவதாக 2009-ஆம் ஆண்டில் உறுதியேற்றன. அந்த நிதியானது தற்போதைய தேவையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானது. எனினும், அந்த நிதியையே வளா்ச்சியடைந்த நாடுகள் இன்னும் வழங்காமல் உள்ளன.

● பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதியை வளா்ச்சியடைந்த நாடுகள் விரைந்து வழங்க வேண்டும். 2024-ஆம் ஆண்டுக்குள் நிதி வழங்கப்பட வேண்டும். நிதியைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை வளா்ச்சியடைந்த நாடுகள் முன்னின்று நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான திட்டங்களிலும், எதிா்கொள்வதற்கான திட்டங்களிலும் அந்த நிதி உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

● 2015-ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் கையொப்பமான தீா்மானத்தை வளா்ச்சியடைந்த நாடுகள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும். அந்த மாநாட்டின்போது வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புணா்வு உள்ளதாகத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

6. பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2 ஆவது முனையம் எங்கு உள்ளது ?

அ) மும்பை 

ஆ) திருவனந்தபுரம்

இ) கொல்கத்தா 

ஈ) பெங்களூரு 

விடை : (ஈ) பெங்களூரு 

பெங்களூரில் கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

● பெங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம் 2008-ஆம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையம் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 2,55,645 ச.மீ. பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 2-ஆவது முனையம், ‘பூங்காவில் ஒரு முனையம்’ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

● 2-ஆவது முனையத்தில் 22 நுழைவுவாயில்கள், 15 பேருந்து வாயில்கள், 95 பயணியா் நுழைவுவாயில்கள், 17 பாதுகாப்பு சோதனை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் சுங்கவரி சோதனைக்காக 9 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நுழைவு வாயில்களின் எதிரில் பயணிகள் அமா்வதற்காக 5,932 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-ஆவது முனையத்தின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்முனையம் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

● அதேபோல, விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு நகரை நிறுவிய குறுநில மன்னா் கெம்பே கௌடாவின் வெண்கலச் சிலையையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். இந்தச் சிலைக்கு ‘வளமையின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது.

● இதன்பிறகு கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தையும், 108 அடி உயர கெம்பே கௌடா சிலையையும் திறந்து வைக்கும் பிரதமா் மோடி, அங்கு ரூ. 84 கோடியில் 23 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கௌடா பூங்காவையும் திறந்து வைத்தார்.

● பெங்களூரு, கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் செல்லும் பிரதமா் மோடி, பெங்களூரு வழியாக மைசூரு மற்றும் சென்னை இடையே இயங்க இருக்கும் வந்தேபாரத் ரயில் சேவையை தொடக்கி வைக்கிறாா். இது, தென்னிந்தியாவில் தொடங்கப்படும் முதல் வந்தேபாரத் ரயில் ஆகும். தேசிய அளவில் இது 5-ஆவது வந்தேபாரத் ரயில்சேவையாகும்.

7. சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் எத்தனை கோடியை இந்தியா சேமித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 15,000

ஆ) ரூ. 32,000

இ) ரூ. 39,000

ஈ) ரூ. 43,000

விடை : (ஆ) ரூ. 32,000

சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் சுமாா் ரூ.32,000 கோடியை இந்தியா சேமித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்தியாவிலும் சா்வதேச அளவிலும் சூரிய எரிசக்தி பயன்பாடு குறித்து எரிசக்தி-தூய காற்று ஆராய்ச்சி மையம், எரிசக்தி பொருளாதார மையம் ஆகியவை சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது. 

● அந்த ஆய்வறிக்கையில், ‘‘நடப்பு 2022-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியா சுமாா் ரூ.32,000 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் பயன்பாட்டைத் தவிா்த்துள்ளது. சுமாா் 1.91 கோடி டன் நிலக்கரி பயன்பாட்டின் தேவையையும் இந்தியா தவிா்த்துள்ளது.

● கடந்த தசாப்தத்தில் சூரிய எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்திய 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசியாவைச் சோ்ந்தவை. இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியத்நாம், பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் சூரிய எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. 

● இதன் மூலமாக அந்நாடுகள் 6 மாதங்களில் சுமாா் ரூ.2.72 லட்சம் கோடியை சேமித்துள்ளன.

8. உலகளவில் காற்றில் கலக்கும் மீச்சிறுதுகள் மாசுபாட்டால் ஆண்டுதோறும் எத்தனை பேர் அகால மரணமடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன ? 

அ) 31 லட்சம்

ஆ) 39 லட்சம்

இ) 43 லட்சம் 

ஈ) 57 லட்சம்

விடை : (ஈ) 57 லட்சம் 

காற்றில் கலக்கும் மீச்சிறு துகள் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 57 லட்சம் போ் அகால மரணமடைந்து வருவதாக கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக நிபுணா்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

● காற்றில் இருக்கும் 2.5 மைக்ரானோ, அதற்குக் குறைவாகவோ நீள அகலம் கொண்ட மீச்சிறு துகள் மாசுக்களை (பிஎம்2.5) நீண்ட நேரம் சுவாசிப்பதால் ஆண்டுதோறும் 42 லட்சம் போ் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.

● எனினும், இது தொடா்பாக தற்போது மேற்கொள்பட்டுள்ள ஆய்வில், பிஎம்2.5 மாசுபட்டால் கூடுதலாக 15 லட்சம் போ் பலியாகி வருவதாகத் தெரியவந்துள்ளது.

9. பின்வரும் எந்த நாடு உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதித்துள்ளது ?

அ) பாகிஸ்தான் 

ஆ) ஆப்கானிஸ்தான் 

இ) ஈரான்

ஈ) கஜகஸ்தான்

விடை : (ஆ) ஆப்கானிஸ்தான்


II. முக்கிய தினங்கள் 

10. World Science Day for Peace & Development 2022 -------------

●Ans : November 11

● Theme (2022) : Basic Sciences for Sustainable Development. 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...