Wednesday, June 29, 2022

Current Affairs 2022 - June 29 / 2022 - Group 2 / 2A & Group 4

                      GK SHANKAR 
                    JUNE 29 / 2022 

I.தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. சென்னை அகரமுதலித் திட்ட இயக்கத்தில் நடைபெற்ற 112 ஆவது கூட்டத்தில் எத்தனை கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 141 
ஆ) 131
இ) 109
ஈ) 98 

விடை : (அ) 141 

● அகரமுதலி திட்ட இயக்கத்தின் 112 ஆவது கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
● இக்கூட்டத்தில் 141 கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது . 
● (எ-டு ) : Helicopter - உலங்கூர்தி,
Falooda - பனிக்கனிக் குழைவு ஆகும்.

2. தமிழகத்தில் வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் பாலாறு பெரு விழாவை தொடங்கிவைத்தவர் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) வெங்கையா நாயுடு
ஈ) மேற்கண்ட அனைவரும்

விடை : (ஆ) ஆர்.என் ரவி

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

●  ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி  பங்கேற்று குத்து விளக்கேற்றிக்கு ஏற்றி வைத்தனர்.

இவ்விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும் என்றார். 

3. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த நாளன்று சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது ? 

அ) மார்ச் 01
ஆ) ஜூன் 03
இ) நவம்பர் 01
ஈ) டிசம்பர் 18

விடை : (ஈ) டிசம்பர் 18 

● சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவுக்கு ரூ. 2.50 லட்சம் நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
● இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்தார்.

II. தேசியச் செய்திகள் 

4. முத்திரையிடப்படாமல் பொட்டலமிட்டு , விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு எத்தனை சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 15%
ஆ) 20%
இ) 5%
ஈ) 8%

விடை : (இ) 5%

● மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், பொட்டலமிட்டு முத்திரையிடப்பட்ட நிலையில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மாநில, யூனியன் பிரதேச நிதியமைச்சா்கள் குழு கேட்டுக் கொண்டது.

● இதனை பரிசீலித்த ஜிஎஸ்டி கவுன்சில், இறைச்சி (உறைந்துபோனதை தவிர), மீன், தயிா், பன்னீா், தேன், உலா் பருப்புவகை காய்கறிகள், உலா் தாமரை விதை, கோதுமை மற்றும் பிற தானிய வகைகள், பட்டாணி மாவு, வெல்லம், அரிசி பொரி, கரிம உரம், தென்னை நாா்க்கழிவு போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு.
 செய்யப்பட்டது.

5. மத்திய அரசால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி ( பிளாஸ்டிக் ) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை என்று முதல் அமலுக்கு வருகிறது ? 

அ) ஜூலை 01 
ஆ) ஜூலை 05
இ) ஆகஸ்ட் 15 
ஈ) ஆகஸ்ட் 05

விடை : (அ) ஜூலை 01 

ஒரு முறை மட்டும் பயனபடுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தடை செய்யப்படும் நெகிழிப் பொருள்கள்: நெகிழி குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, நெகிழி குச்சிகளுடன் கூடிய பலூன்கள், நெகிழி கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தொ்மோகோல், நெகிழி தட்டுகள், குவளைகள், நெகிழி கத்தி, ஸ்பூன், ஃபோா்க், உறிஞ்சுக் குழல், ட்ரே, ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கும் குறைவான நெகிழி அல்லது பிவிசி பேனா்கள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

6. ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ? 
அ) ஆனந்த் அம்பானி
ஆ) இஷா அம்பானி
இ) ஆகாஷ் அம்பானி
ஈ) ஆனந்த் பாராமல்

விடை : (இ) ஆகாஷ் அம்பானி 
● முன்பு : முகேஷ் அம்பானி இப்பொறுப்பில் இருந்தார். 

7. சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதற்காக எத்தனை கோடியை செலவிட ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளது ? 

அ) ரூ. 25,000 கோடி
ஆ) ரூ. 30,000 கோடி
இ) ரூ. 50,000 கோடி
ஈ) ரூ. 33,000 கோடி

விடை : (ஈ) ரூ. 33, 000 கோடி

● மேலும் மக்களின் பேச்சு சுதந்திரத்தை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க ஜி7 மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.

8. அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் எத்தனையாவது முறையாக மாநாட்டில் பங்கேற்றார் ? 

அ) 5 ஆவது
ஆ) 3 ஆவது
இ) 10 ஆவது
ஈ) 2 ஆவது

விடை : (ஆ) 3 ஆவது 

உலகத் தலைவா்களுக்குப் பிரதமா் மோடி பரிசு

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜொ்மனி சென்ற பிரதமா் நரேந்திர மோடி, குலாபி மீனாகாரி, காஷ்மீரி ஜமக்காளம் உள்ளிட்ட பல்ேறு இந்தியக் கலைப் பொருள்களை உலகத் தலைவா்களுக்குப் பரிசளித்தாா்.

● புவிசாா் குறியீடு பெற்ற வாராணசியைச் சோ்ந்த குலாபி மீனாகாரி கலைப் பொருளை அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்குப் பிரதமா் மோடி பரிசளித்தாா். ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸுக்கு மரோதியைச் சோ்ந்த மத்கா, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கு உத்தர பிரதேசத்தின் நிஜாமாபாதைச் சோ்ந்த கருப்புப் பானை துண்டுகள், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியமான இத்தா் ஆகியவற்றைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.

● இந்தோனேசிய அதிபருக்கு ராம தா்பாா் சிலையையும், செனகல் அதிபருக்கு கைவினைப் பொருள்களான கூடைகள், கைத்தறிகளையும் பிரதமா் மோடி வழங்கினாா். கனடா அதிபா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பட்டு விரிப்புகளைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.

III. விளையாட்டுச் செய்திகள் 

9. ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் சதுரங்கப் போட்டி தமிழகத்தில் எங்கு தொடங்கியுள்ளது ? 

அ) மதுரை

ஆ) சென்னை

இ) திருச்சி

ஈ) சேலம்

விடை : (அ) மதுரை 

● இப்போட்டி மதுரையில் ஜூன் 28 முதல் ஜூலை 05 வரை நடைபெறவுள்ளது .

● இப்போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 212 வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

IV. முக்கிய தினங்கள் 

10. டிராபிக்ஸின் சர்வதேச தினம் ( International Day of Tropics ) 2022 ? 

அ) ஜூன் 26

ஆ) ஜூன் 27

இ) ஜூன் 28

ஈ) ஜூன் 29

விடை : (ஈ) ஜூன் 29 


Tuesday, June 28, 2022

Current Affairs 2022 - June 28 / 2022 - Group 2/2A & Group 4

                         GK SHANKAR 
                        JUNE 28 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் ரூ.171 கோடியில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) தங்கம் தென்னரசு
ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

2. தமிழகத்தின் பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் என்ன ? 

அ) Penpadipu.tn.gov.in 
ஆ) kallurikanavu.tn.gov.in
இ) Penkalvi.tn.gov.in
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) Penkalvi.tn.gov.in

3. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது குறித்து அறிக்கையை அளித்துள்ள குழுவின் தலைவர் யார் ?

அ) வினித் தேவ் வான்கடே
ஆ) நீதிபதி கே.சந்துரு
இ) க. பணீந்திர ரெட்டி
ஈ) பி. கார்த்திகேயன் 

விடை : (ஆ) நீதிபதி கே. சந்துரு

II. தேசியச் செய்திகள் 

4. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பணீந்திர ரெட்டி
ஆ) பி. கார்த்திகேயன்
இ) வினித் தேவ் வான்கடே 
ஈ) நிதின் குப்தா 

விடை : (ஈ) நிதின் குப்தா 

5. காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாதெமியை அமைத்துள்ள நாடுகள் ? 

அ) இந்தியா - பிரிட்டன்
ஆ) ரஷ்யா - அமெரிக்கா
இ) ஜப்பான் - சீனா
ஈ) இந்தியா - ரஷ்யா

விடை : (அ) இந்தியா - பிரிட்டன்

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக : 

1) ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார் . 
2) ஜி7 மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக ரூ.45 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டத்தை ஜி7 தலைவர்கள் அறிவித்தனர்.

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும் 
இ) 1 மட்டும் 2
ஈ) ஏதுமில்லை

விடை : (அ) 1 மட்டும் 

III. சர்வதேச செய்திகள்

7. உலகளாவிய வாழத் தகுந்த நகரங்கள் குறியீடு 2022 ல் முதலிடம் பிடித்துள்ள நகரம் ? 

அ) மும்பை
ஆ) ஓசாகா
இ) டோராண்டோ 
ஈ) வியன்னா

விடை : (ஈ) வியன்னா 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. கஜகஸ்தானில் நடைபெற்ற காசனோவ் நினைவு தடகள போட்டியில் மகளிருக்கான 200 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) சரஸ்வதி தேவி
ஆ) எஸ். தனலட்சுமி
இ) ஹிமா தாஸ் 
ஈ) டூட்டி சந்த் 

விடை : (ஆ) எஸ். தனலட்சுமி

Current Affairs 2022 - June 27 / 2022 - Group 2 / 2A & Group 4

                         GK SHANKAR 
                        JUNE 27 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு எத்தனை கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) ரூ.404 கோடி
ஆ) ரூ. 500 கோடி
இ) ரூ. 740 கோடி
ஈ) ரூ. 970 கோடி

விடை : (அ) ரூ. 404 கோடி

2. தமிழகத்தில் எங்கு முதுமக்கள் தாழியினுல் தங்கத்தாலான 2 குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) சிவகங்கை
ஆ) அரியலூர்
இ) மதுரை
ஈ) திருநெல்வேலி

விடை : (அ) சிவகங்கை

3. அண்மையில் காலமான செயில் முன்னாள் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி பின்வரும் எந்த விருதுகளை பெற்றுள்ளார் ? 

அ) பத்ம ஸ்ரீ
ஆ) பத்ம பூஷண்
இ) பத்ம விபூஷண்
ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

II. விளையாட்டுச் செய்திகள் 

4. பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3 ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை

விடை : (ஆ) வெள்ளி

5. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின்  வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) மும்பை
 ஆ) தமிழ்நாடு
இ) மத்திய பிரதேசம்
ஈ) ஜார்கண்ட் 

விடை : (இ) மத்திய பிரதேசம்

III. முக்கிய தினங்கள் 

6. தொழில்துறை தொழிலாளர்களுக்கான சர்வதேச நாள் ( Industria workers of the World day  ) 
2022 ? 

அ) ஜூன் 25
ஆ) ஜூன் 26 
இ) ஜூன் 27 
ஈ) ஜூன் 28

விடை : (இ) ஜூன் 27 

Monday, June 27, 2022

Current Affairs 2022 - June 26 / 2022 - TNPSC GROUP 2/2A & GROUP 4

                       GK SHANKAR
                     JUNE 26 / 2022  

I. தமிழ்நாட்டுச் செய்திகள்  

தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ------------- உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ.1000
ஆ) ரூ.1,500
இ) ரூ. 5,000
 ஈ) ரூ. 2,500 

விடை : (அ) ரூ. 1000

2. தமிழகத்தில் மாணவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும் , ஆசிரியர்களுக்காகவும் பின்வரும் எந்த இதழை பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன ? 

அ) ஊஞ்சல் 
ஆ) தேர்விற்கு
இ) கனவு ஆசிரியர்
ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும்

II. தேசியச் செய்திகள் 

3. ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை எந்த ஆண்டு வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 2024 
ஆ) 2026
இ) 2030
ஈ) 2027 

விடை : (ஆ) 2026 

4. இந்தியாவில் எங்கு பொது சுகாதார சர்வதேச மையம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது ? 

அ) டெல்லி
ஆ) தமிழ்நாடு 
இ) புதுச்சேரி
ஈ) ஜார்கண்ட்

விடை : (இ) புதுச்சேரி

5. ஜூன் 26 & 27 , நாட்களில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளர் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) ராம்நாத் கோவிந்த் 
இ) வெங்கையா நாயுடு
ஈ) ஜெய்சங்கர்

விடை : (அ) நரேந்திர மோடி 

III. சர்வதேச செய்திகள் 

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 
1) வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா திறந்துவைத்தார்.

2) இப்பாலம் அந்நாட்டின் முதல் மிக நீண்டப்பாலம் ஆகும். 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2 
ஈ) ஏதுமில்லை

விடை : (அ) 1 மட்டும் 

7. ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்கள் அணிவகுக்கும் ஆபுர்வ நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றுகிறது ? 

அ) 12 
ஆ) 13
இ) 18 
ஈ) 31 

விடை : (இ) 18 ஆண்டுகள் 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்தெடுக : 
1) பிரான்ஸில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தை 3 ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் அபிஷேக் / ஜோதி சுரேகா இணை தங்கப்பதக்கம் வென்றது . 

2) இப்போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் வரலாற்றில் இதுவரை இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம் இது . 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (ஆ) 2 மட்டும் 

V. முக்கிய செய்திகள் 

9. சர்வதேச போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் ( International Day of Drug lllicit Trafficking ) 2022 ? 

அ) ஜூன் 24
ஆ) ஜூன் 25
இ) ஜூன் 26
ஈ)ஜூன் 27 

விடை : (இ) ஜூன் 26 

Sunday, June 26, 2022

Current Affairs 2022 - June 25 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                       GK SHANKAR 
                      JUNE 25 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் : 

1. தமிழகத்தில் , 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியை நடத்த எத்தனை கோடி நிதியை தமிழக கல்வித்துறை விடுவித்து அரசாணை வெளியிட்டது ? 

அ) ரூ. 1 கோடி
ஆ) ரூ. 2.5 கோடி
இ) ரூ. 4 கோடி
ஈ) ரூ. 3.6 கோடி 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

● 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளுக்கு ரூ.1 கோடி நிதியை  விடுவித்து  பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

● செஸ் போட்டியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

● அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். செஸ் போட்டிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளன.

● இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 304 மாணவர்கள், சர்வதேச போட்டிகளை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

● இதேபோல, 6 முதல் 8-ம் வகுப்பு வரையான போட்டிகளில் தேர்வாகும் 152 மாணவர்கள், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும்.


2. திருப்பூர் , விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ? 

அ) ஆர். என் . ரவி

ஆ) மு.க. ஸ்டாலின்

இ) தங்கம் தென்னரசு

ஈ) மா. சுப்பிரமணியன்

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
 
● மேலும் டைடல் பூங்காவில் ரூ.212 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.33.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை முதல்வா் திறந்து வைத்தாா்.

● குறிப்பு : 295 பில்லியன் அமெரிக்க டாலா் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

3. தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எந்த வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது ? 
அ) 10th Std
ஆ) 9th Std
இ) 12th Std
ஈ) 11th Std 

விடை : (இ) 12th std 

நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.
● இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. 

● எச்சிஎல் (HCL) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. எச்சிஎல் நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.

● மேலும், இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 29.06.2022, 30.06.2022, 1.07.2022, 2.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

II. தேசியச் செய்திகள் 

4. நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) அமிதாப் காந்த் 

ஆ) தபன்குமார் டேகா 

இ) அரவிந்த் குமார் 

ஈ) பரமேஸ்வரன் ஐயர் 

விடை : (ஈ) பரமேஸ்வரன் ஐயர் 

● குடிநீர் துப்பரவுத் துறை முன்னாள் செயலர் பரமேஸ்வரன் ஐயர் நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

● இப்பொறுப்பில் முன்பு : அமிதாப் காந்த் 

● மேலும் ஒரு நியமனம்: உளவுத்துறையின் புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தபன் குமார் டேகா நியமிக்கப்பட்டுள்ளார்.  

5. நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிப் பெயர்ப்புக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகம் எது ? 

அ) ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள்

ஆ) கர்ணன் - காலத்தை வென்றவன்

இ) கதை இல்லாதவனின் கதை

ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் 

 விடை : (ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

2021ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

● தமிழ்மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலுக்காக எழுத்தாளர் மாலனுக்கு (வி.நாராயணன்) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

● ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலானது சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய க்ரோனிக்கல் ஆஃப் கார்பஸ் பேரியர் எனும் ஆங்கில நாவலை மொழிபெயர்த்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

6. இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் எத்தனை பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது ? 

அ) ரூ.42 லட்சம்

ஆ) ரூ. 50 லட்சம்

இ) ரூ. 25 லட்சம்

ஈ) ரூ. 73 லட்சம்

விடை : (அ) ரூ.42 லட்சம்

இந்த ஆய்வில், டிசம்பர் 8, 2020ம் ஆண்டில் தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியதில் இருந்து டிசம்பர் 8, 2021ம் ஆண்டு வரையிலான இறப்பு எண்ணிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் (66 சதவீதம்) ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

● இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்த காலகட்டத்தில் தடுப்பூசி மூலம் 42.10 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை காட்டுகிறது.

7. போர்க்கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பை இந்தியக் கடற்படை எங்கு வெற்றிகரமாக பரிசோதித்தது ? 

அ) டெல்லி

ஆ) குஜராத்

இ) ஒடிசா

ஈ) ஹைதராபாத்

விடை : (இ) ஒடிசா

போா்க்கப்பலுக்கு நெருக்கமாகச் செல்லும் எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு, ஒடிஸாவில் சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

● இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோதனையின்போது ஏவுகணை அமைப்பின் அனைத்து கருவிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. விண்ணில் அதிவேகத்தில் செல்லும் விமானங்களை அழிக்கவே இந்த ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III.சர்வதேச செய்திகள் 

8. அண்மையில் எந்த நாட்டில் பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாகக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது ? 

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) பாகிஸ்தான்

விடை : (அ) அமெரிக்கா 

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. பிஃபா (FIFA) 17 வயது மகளிர் உலகக்கோப்பை 2022 போட்டி எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) அமெரிக்கா

ஆ ) பிரேசில்

இ) சீனா

ஈ) இந்தியா

விடை : (ஈ) இந்தியா

● சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்அப்பில் இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 11 - 30 வரை நடைபெறவுள்ளது.

● புவனேசுவரம்,  கோவை, நவிமும்பை உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறவுள்ளது.

● குறிப்பு : இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

V. முக்கிய தினங்கள்

10. சர்வதேச மாலுமிகள் தினம் ( International Day of  the Seafarer ) 2022 ? 

அ) ஜூன் 24

ஆ) ஜூன் 25

இ) ஜூன் 26

ஈ) ஜூன் 29

விடை : (ஆ) ஜூன் 25

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Theme : Your Voyage , then and now, share your Journey .




Friday, June 24, 2022

Current Affairs 2022 - June 24/ 2022 - Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                       June 24 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள்  

1. தமிழகத்தில் தற்போது ------------ மற்றும் --------------- வகை கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) பிஏ-4
ஆ) பிஏ-6
இ) பிஏ-5
ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ(ம)இ

● தற்போது கரோனா பரவல் பெரும்பாலும் பிஏ-4, பிஏ-5 என்ற வகை தாக்கம் தான் அதிகம் உள்ளது.
● எனவே பொதுமக்கள் நோய்த்தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
● அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

2. நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பேருந்தில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நடத்துநர் யார் ? 

அ) இளையராணி
ஆ) ராஜாமணி
இ) அருந்ததி தேவி
ஈ) சீதா தேவி 

விடை : (அ) இளையராணி

● நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பேருந்தில் பெண் நடத்துநர் இளையராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
● குறிப்பு : இவருக்கு தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்துள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. தேசிய புலனாய்வு முகமை ( NIA ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஸ்வாகத் தாஸ்
ஆ) தினகர் குப்தா
இ) அரவிந்த் குப்தா
ஈ) அமரேந்தர் சிங் 

விடை : (ஆ) தினகர் குப்தா

● 1987 பஞ்சாப் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த தினகர் குப்தா வரும் 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை அவர் இப்பொறுப்பில் நீடிப்பார்.
● அறிவிப்பு : மத்திய பணியாளர் அமைச்சகம்.
● மேலும் ஒரு நியமனம் : மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளராக ( உள்நாட்டுப் பாதுகாப்பு ) ஸ்வாகத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

4. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது ? இந்திய தூதரகம் எங்கு உள்ளது ? 

அ) காபூல் 
ஆ) கந்தகார்
இ) கோஸ்ட்
ஈ) கண்டசு 

விடை : (அ) காபூல் 

● ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது . 
● காரணம் : ஆப்கானுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும் , ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில்நுட்பக்குழு காபூல் சென்றடைந்துள்ளது. 

5. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சார்பில் தில்லியில் கட்டப்பட்டுள்ள வாணிஜ்ய பவன் கட்டடத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) ராம்நாத் கோவிந்த் 
ஆ) நரேந்திர மோடி
இ) அரவிந்த் கெஜ்ரவால் 
ஈ) வெங்கையா நாயுடு 

விடை : (ஆ) நரேந்திர மோடி

● மேலும் ஆண்டுதோறும் வர்த்தக சூழலை ஆராயும் நோக்கில் தேசிய இறக்குமதி - ஏற்றுமதி பதிவுக்கான நிர்யத் வலைத்தளத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 

6. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது ? 

அ) மத்திய உள்துறை அமைச்சகம்
ஆ) மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
இ) மத்திய கல்வி அமைச்சகம்
ஈ) மத்திய போகுவரத்து அமைச்சகம்

விடை : (அ) மத்திய உள்துறை அமைச்சகம் 

● மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

● போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால், போதைப் பொருள் மற்றும் மனநல பொருள் சட்டம் -1985 மற்றும் போதைப் பொருள் கடத்தல் சட்டம்-1988 ஆகியவை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கடத்தப்படும் போதைப் பொருள், தங்கம் ஆகிய வழக்குகளை மத்திய வருவாய்த் துறை கையாண்டு வருகிறது.

● இவற்றை அனைத்தும் இணைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


III. சர்வதேச செய்திகள் 

7. பின்வரும் எந்த நாடு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க முடிவுசெய்துள்ளது ? 

அ) இலங்கை

ஆ) ஜெர்மனி

இ) உக்ரைன்

ஈ) ஆப்பிரிக்கா

விடை : (ஆ) ஜெர்மனி 

● ஜொ்மனிக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்துவிட்டதால் அங்கு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகியுள்ளது.

● உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்தது. 

● இதனால், எரிபொருள் தேவைக்கு ரஷியாவை சாா்ந்துள்ள ஜொ்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க பல்வேறு கட்ட அவசர நிலைகளை அறிவித்து வந்த அந்த நாடு, ‘எச்சரிக்கை’ கட்ட அவசர நிலையை வியாழக்கிழமை அறிவித்தது.

● இது, எரிபொருளை ரேஷன் முறையில் விநியோகிப்பதற்கு முந்தைய கட்டம் என்று கூறப்படுகிறது.

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் , மிஹிர் ஆம்ப்ரே,  அனீஷ் கௌடா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

2) மேலும் படேல் வெள்ளியும் , சிவா ஸ்ரீதர் வெண்கலமும் வென்றுள்ளனர்.

விடை : (இ) 1 மற்றும் 2 

● சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் 2022.

● தங்கம் : ஸ்ரீதர் நட்ராஜ் - 100மீ பேக்ஸ்ட்ரோக் ; மிஹிர் - 50 மீ பட்டர்ஃப்ளை ; அனீஷ் கௌடா - 800 மீ ஃபீரிஸ்டைல். 

● வெள்ளி : மானா படேல் - 100 மீ பேக்ஸ்ட்ரோக். 

● வெண்கலம் : சிவா ஸ்ரீதர் - 100மீ பேக்ஸ்ட்ரோக் 

9. ஹங்கேரியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் தனது 21 வது பதக்கத்தை வென்று உலக சாதனை செய்துள்ள வீராங்கனை ? 

அ) கேட்டி லெடக்கி 

ஆ) ரயான் லாக்டே

இ) கிளோ  வெய்ன்ஸ்டின் 

ஈ) பெல்லாசிம்ஸ் 

விடை : (அ) கேட்டி லெடக்கி 

● கேட்டி லெடக்கி அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆவார்.

● உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 21 பதக்கங்களை வென்ற ஒரே வீனாங்கனை 

● பதக்கங்கள் : 18 G, 3 S 

V. முக்கிய தினங்கள் 

10. இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் ( International Day of Women in Diploamcy) 2022 ? 

அ) ஜூன் 21

ஆ) ஜூன் 23

இ) ஜூன் 25

ஈ) ஜூன் 24

விடை : (ஈ) ஜூன் 24 


Thursday, June 23, 2022

Current Affairs June - June 23 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                     GK SHANKAR CURRENT AFFAIRS
                    JUNE 23 / 2022 

       I. தமிழ்நாட்டுச் செய்திகள்

1. தமிழகத்தில் எங்கு மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் ஏற்படுத்தப்படவுள்ளது ? 

அ) புதுக்கோட்டை
ஆ) மதுரை 
இ) திருநெல்வேலி 
ஈ) சேலம் 

விடை : (அ) புதுக்கோட்டை 

● தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9 ஆவது மன்னர் ராஜகோபால தொண்டைமான் ஆவார். 
● அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு சார்பில் புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  
● காரணம்  : அவர் தனது ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து , விவசாயம் , நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார் 
● குறிப்பு : இவர் தான் புதுக்கோட்டையை மாவட்டமாக அறிவித்தவர் .

2. தமிழ்நாட்டில் எத்தனை புதிய உழவர் சந்தைகளை விரைந்து திறக்க வேண்டும் என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் ? 

அ) 31
ஆ)13
இ) 14
ஈ) 16

விடை : (இ) 14 

● முக்கிய உத்தரவுகள் : புதிதாக 14 உழவர் சந்தைகள் தொடங்கப்பட வேண்டும்.
● 27 உழவர் சந்தைகளில் உள்ள 2 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன அறைகளை விவசாயிகள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
● தமிழக வேளாண்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.  
● குறிப்பு : தமிழ்நாட்டில் 172 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 

3. தமிழகத்தில் 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) சேலம்
ஆ) கிருஷ்ணகிரி
இ) தருமபுரி
ஈ) நாமக்கல்

விடை : (ஆ) கிருஷ்ணகிரி

● கிருஷ்ணகிரியில் 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியுள்ளது. 
● இந்த கண்காட்சி 25 நாட்கள் நடைபெறவுள்ளது. 
● இக்கண்காட்சி மாம்பழ விவசாயிகளுக்கான போட்டி ஆகும்.

4. ரூ.25 செலுத்தி புதிய குடும்ப அட்டையை தபாலில் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா
ஆ) ஆந்திர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா

விடை : (இ) தமிழ்நாடு 

● புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் ரூ.25 கட்டணம் செலுத்தி தபால் மூலமாய் பெறும் திட்டம் விரைவில் தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. 
● இத்திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசின் கூட்டுறவு , உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

             II. தேசியச் செய்திகள் 

5. இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கியுள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பின் பெயர் என்ன ? 

அ) சூர்யா நுடன்
ஆ) சூர்யா தீ
இ) சூர்யா அடுப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) சூர்யா நுடன்

● இந்தியன் ஆயில் நிறுவனம் சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய அடுப்பை உருவாக்கியுள்ளது.
● அந்த அடுப்பின் பெயர் : சூர்யா நுடன். 
● அடுப்பின் விலை - ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என்றும் , 3 லட்சம் அடுப்புகளை உருவாக்கினால் இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை குறையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

6. இஸ்ரோ ( ISRO ) பின்வரும் எந்த நாளன்று மூன்று செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி - 53 ராக்கெட்டை விண்ணில் ஏவப்படவுள்ளது ? 

அ) ஜூன் 29
ஆ) ஜூன் 30
இ) ஜூலை 03 
ஈ) ஜூலை 10

விடை : (ஆ) ஜூன் 30 

● PSLV C - 53 ராக்கெட் தாங்கிச் செல்லும் டிஎஸ் - இஓ செயற்க்கோள் பூமியிலிருந்து 570 கி.மீ. உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. 
● டிஎஸ் - இஓ செயற்கைக் கோள் : 
பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள் , சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு ,வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது . 
● இச்செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.
● இதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் ஏவப்படவுள்ளது.

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக : 

1) ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் .

2) இப்போது ஜி7 அமைப்புக்கு பிரான்ஸ் தலைமை வகிக்கிறது.

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2
ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

● ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி ஜூன் 26 அன்று கலந்துக்கொள்ளவுள்ளார்.
● இப்போது ஜி7 அமைப்புக்கு தலைமை வகிக்கும் நாடு ஜெர்மனி.
● ஜி7 அமைப்பில் உள்ள நாடுகள் : 
ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான்.

8. 2021 ஆம் ஆண்டின் படி சர்வதேச அளவில் தங்கத்தை மறுசுழற்சி செய்யும் நாடுகளில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது 

விடை : (ஈ) நான்காவது 

● முதல் மூன்று இடங்களில் : சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகும்.

          III. சர்வதேச செய்திகள்

9. அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார் ? 

அ) அனிதா குப்தா
ஆ) ஆர்த்தி பிரபாகர்
இ) ஈஷா வேலண்டைன்
ஈ) பூஜா சிங் 

விடை : (ஆ) ஆர்த்தி பிரபாகர் 

● இந்திய வம்சாவளியான பிரபல விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
● செனட் சபையின் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அறிவியல் (ம) தொழில் நுட்பக்கொள்கை அலுவலகத்தின் தலைமை பொறுப்பை ஏற்கும் புலம்பெயர்ந்து வந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுவார் . 

10. பின்வரும் எந்த நாட்டில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ? 

அ) இந்தியா 
ஆ) அமெரிக்கா
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) கனடா

விடை : (இ) ஆப்கானிஸ்தான் 

ஆப்கானிஸ்தானின் கிழக்கே, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.24 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 ● இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர்.
● இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதி கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் 1,000 பேர் பலியானதாகவும், 1,500 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
● நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 500 கி.மீ. தொலைவு வரை உணரப்பட்டதாகவும், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பலர் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் ஐரோப்பிய நிலநடுக்கவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

11. கூற்று : அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

காரணம் : தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறைவேற்றப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி .

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

● அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் நிறைவேற்றினா்.

● இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

      IV. விளையாட்டுச் செய்திகள்


12. அண்மையில் தனது அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யார் ? 

அ) மிதாலி ராஜ்
ஆ) ருமேலி தார் 
இ) தீபிகா குப்தா 
ஈ) ஸ்மிரிதி மந்தானா 

விடை : (ஆ) ருமேலி தார். 
● ருமேலி தார் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆவார். 
● கிரிக்கெட் பயணம் : 2003 - 2018 ( 23 ஆண்டுகள் ) . 

13. ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2022 ல் 200 மீ ஃப்ளையிங் பிரிவில் வெள்ளி வென்றுள்ள முதல் இந்தியர் யார் ? 

அ ) ரொனால்டோ சிங்
ஆ) கென்டோ யமாசாகி
இ) ஆண்ட்ரே சுகே
ஈ) பிர்ஜித் யும்நாம்

விடை : (அ) ரொனால்டோ சிங்

● இப்போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் .

             V. முக்கிய தினங்கள்

14. சர்வதேச ஒலிம்பிக் தினம் ( International Olympic Day ) 2022 ? 

அ) ஜூன் 19
ஆ) ஜூன் 20
இ) ஜூன் 23
ஈ) ஜூன் 22 

விடை : (இ) ஜூன் 23 

சர்வதேச ஒலிம்பிக் தினம் 2022 இன்று, 23-6-2022 அன்று கொண்டாடப்படுகிறது. விளையாட்டு, நல்ல ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் மகிழ்ச்சியைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் 23, விளையாட்டின் மூலம் உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற மக்களை அழைக்கிறது. 

● இந்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் தின கரு என்னவெனில் 'உலக அமைதிக்காக ஒன்றுபடுவொம்.' ( Together for a Peaceful World ) சமூக ஊடகங்களில், உலக ஒலிம்பிக் தினம் 2022 #MoveForPeace மற்றும் #OlympicDay என்ற ஹேஷ்டேக்குகளுடன் குறிக்கப்படுகிறது.

15. சர்வதேச விதவைகள் தினம் ( International Widow's day ) 2022 ? 

அ) ஜூன் 20
ஆ) ஜூன் 21
இ) ஜூன் 22
ஈ) ஜூன் 23 

விடை : (ஈ) ஜூன் 23

உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை  குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரை துடைக்கும்  வகையிலும் சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஐ.நா  பொது சபைக்கு  கோரிக்கை விடுத்துவந்தனர்.

● ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows'  Day)அறிவித்து, 2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது.

● Theme :  Sustainable Solutions for widows Financial Independence . 


Wednesday, June 22, 2022

Current Affairs 2022 - June 22 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

1. ஐ.நா.வுக்கான இந்திய தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ருசிரா கம்போஜ் 
 ஆ) டி.எஸ். திருமூர்த்தி
இ) அல்கா மிட்டல் 
ஈ) ரவீந்திர குப்தா 

2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

i) பிரிக்ஸ் நாடுகளுக்குச் சொந்தமான புதிய வளர்ச்சி வங்கியின் இந்திய அலுவலகம்  டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.


ii) இந்திய அலுவலகத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ஜே. பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வெளிநாடுகளில் பணிபுரிந்துவிட்டு வயது முதிர்வால் சொந்த ஊர் திரும்புவோருக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வரும் இந்திய மாநிலம் ? 

அ) கேரளா
ஆ) தில்லி
இ) பஞ்சாப்
ஈ) தமிழ்நாடு

4. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக : 

1) 8 ஆவது சர்வதேச யோகா தினம் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது.

2) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விழாவை தொடங்கிவைத்தார். 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) ஏதுமில்லை 

5. 2021 ஆம் ஆண்டின் அடிப்படையில் தண்ணீரில் மூழ்கி இறக்கும் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு பிடித்துள்ள இடம் ? 

அ) ஏழாவது
ஆ) ஐந்தாவது
இ) எட்டாவது
ஈ) பத்தாவது

6. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி எத்தனையாவது பிரிக்ஸ் ( BRICS ) மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்?
அ) 11 ஆவது
ஆ) 10 ஆவது
இ) 14 ஆவது
ஈ) 19 ஆவது

7. அமெரிக்க அரசின் பொருளாளராக பூர்வகுடியைச் சேர்ந்த ஒருவரை அதிபர் பைடன் முதல்முறையாக பரிந்துரைத்துள்ளவர் யார் ? 

அ) மரிலின் லின் மலேர்பா
ஆ) கேத்தரின் மன்ரோ 
இ) அனாமிகா ஜோசிலின் 
ஈ) ஈஷா வேலண்டைன் 

8. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்த 75 லட்சமாவது நபருக்கு மருந்து பெட்டகம் வழங்க நேரில் சென்றவர் கீழ்கண்டவருள் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்
ஆ) மா. சுப்பிரமணியன் 
இ) உதயநிதி ஸ்டாலின்
ஈ) தங்கம் தென்னரசு 

9. நடப்பாண்டுக்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஜூலை 05
ஆ) ஜூன் 27
இ) ஜூலை 10
ஈ) ஜூன் 30

10. ஆசிய ஓசியானியா ஓபன் பாரா பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் 2022 ல் இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களை பொருத்துக :

தங்கம்               - 1) 4 பதக்கங்கள்
வெள்ளி            - 2) 12 பதக்கங்கள்
வெண்கலம்    - 3) 6 பதக்கங்கள் 

அ) 1 2 3 
ஆ) 3 2 1
இ) 3 1 2 
 ஈ) 2 1 3 

விடைகளும்  / விளக்கமும் 

1. (அ) ருசிரா கம்போஜ் 

● ஐ.நா.வுக்கான இந்திய தூதராக ருசிரா நியமிக்கப்பட்டுள்ளார்.

● முன்பு : 1987 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான இவர் , தற்போது பூடானுக்கான இந்தியத் தூதராக இருந்து வருகிறார். 

● இப்பொறுப்பில் முன்பு : எஸ். திருமூர்த்தி இருந்தார். 

2. (ஆ) ii மட்டும்

● பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்குச் சொந்தமாக புதிய வளர்ச்சி வங்கி ( என்டிபி ) உள்ளது.
● பிரிக்ஸ் வங்கியின் இந்திய மண்டல அலுவலகம் குஜராத் மாநிலத்தின் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
● அந்த அலுவலகத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.ஜே. பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் : பிரேசில்,  ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா. 

3. (ஈ) தமிழ்நாடு 

● வெளிநாடுகளில் பணிபுரிந்து விட்டு வயது முதிர்வால் சொந்த ஊர் திரும்புவோருக்கு மாதம் உதவித்தொகை திட்டம் 
● வெளிநாடுகளில் விபத்திலோ,  இயற்கையாகவோ மரணமடைய நேர்ந்தால் அவர்களது குடும்பங்களுக்கு பாதுகாப்பு , குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் திட்டமும் அரசிடம் பரசீலனையில் உள்ளது.
● அறிவிப்பு : தமிழக சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

4. (அ) 1 மட்டும்

● 8 ஆவது சர்வதேச யோகா தினம் மைசூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. 
● இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 
● இவ்விழாவில் 15,000 பேருடன் சேர்ந்து பிரதமரும் யோகா பயிற்ச்சியில் ஈடுபட்டார்.
நிகழாண்டுக்கான யோகா தின விழா மனித நேயத்துக்கான யோகா என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
● குறிப்பு : பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா.சபை சார்ப்பில் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

5. ( இ ) எட்டாவது

● 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இறந்தோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் தமிழகம் 8 ஆவது இடத்தில் உள்ளது. 

6. (இ) 14 ஆவது

● 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை சீனா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடத்தவுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொள்ளவுள்ளார். ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் கூட்டத்தில் சர்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
 
● பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், வேளாண்மை, தொழிலகக் கல்வி-பயிற்சி உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.

●  கரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளுதல், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. ( அ) மரிலின் லின் மலேர்பா 

● இவர் மோஹெகன் பழங்குடியின அமைப்பின் வாழ்நாள் தலைவராவார்.
● அமெரிக்க நாணயங்கள் அச்சிடுவது,  மத்திய வங்கி நடவடிக்கைகளை பதிவு செய்வது , நிதியமைச்சகத்தின் நுகர்வோர் கொள்கையை மேற்பார்வையிடுவது போன்ற பணிகளை அரசின் பொருளாளர் மேற்கொள்வார். 

8. (ஆ) மா. சுப்பிரமணியன் 

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கெடமலை மலை கிராமத்திற்கு இன்று காலை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றனர்.

● தமிழக அரசின் மருத்துவ திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.


9. ( ஆ) ஜூன் 27

● டென்னிஸ் காலண்டரில் ஒரு ஆண்டில் நடைபெறும் 3 வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது.

● குறிப்பு : புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டி விம்பிள்டன் ஆகும்.


10. (இ) 3 1 2 

● ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021

● போட்டி நடைபெற்ற இடம் : தென் கொரியா.

● மொத்த பதக்கங்கள்: 22 ( 6G, 4S , 12B ).

Current Affairs - June 21, 2022 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழக அளவில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வில் ------------- சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் (ம) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் -------------- சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பிடித்துள்ள மாநிலங்கள் ? 

அ) பெரம்பலூர், கன்னியாகுமரி
ஆ) சேலம், கோயம்புத்தூர்
இ) திருச்சி, மதுரை
ஈ) வேலூர் , கன்னியாகுமரி

2. அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கீழ்கண்ட எந்த இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது ? 

அ) www.Joinindianarmy.nic.in
ஆ) www.armyjoinindian.in
இ) www.joinindianarmy.in
ஈ) www.indianarmyjoin.nic.in

3. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நாட்களில் எங்கு நடைபெறவுள்ளது?

அ) ஆப்ரக்கா
ஆ) ஜப்பான்
இ) கனடா
ஈ) ருவாண்டா

4. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக :-

i) இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ரோந்து பணியில் அண்மையில் இணைக்கப்பட்டது.

ii) இந்த கிழக்கு பிராந்தியப் பிரிவு ஆந்திர பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. 

iii) இந்த கிழக்கு பிராந்தியத்தின் தளபதி ஏ.பி. படோலா. 

5. அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட நாடு எது ? 

அ) அமெரிக்கா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) ரஷ்யா

6. கூற்று : இருளர் (ம) நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களைக் கொண்டு செயற்கைக்கோளை ISRO விண்ணில் ஏவவுள்ளது.  
காரணம் : நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 செயற்கை கோள்கள் மாணவர்கள் மூலமே விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் சரி , காரணம் தவறு
இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று தவறு , காரணம் சரி .

7. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ------------- சதுர அடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது ?

அ) 75,000
ஆ) 50,000
இ) 65,000
 ஈ) 52,000

8. தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 

அ) 2021 டிசம்பர் 18
ஆ) 2020 டிசம்பர் 18 
இ) 2021 ஜனவரி 01
ஈ) 2020 ஜனவரி 01 

9. சர்வதேச யோகா தினம் ( International Day of Yoga ) 2021 ? 

அ) ஜூன் 16
ஆ) ஜூன் 18
இ) ஜூன் 19
ஈ) ஜூன் 21

விடைகளும் / விளக்கமும் 
1. (அ) பெரம்பலூர், கன்னியாகுமரி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

● பத்தாம் வகுப்பில் தமிழகம், புதுச்சேரியில் 90.07 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

● தேர்ச்சி சதவீதத்தில் முதல் (ம) கடைசி மாவட்டங்கள் . 
+2- முதலிடம் : பெரம்பலூர் (97.95%)
10th - முதலிடம் : கன்னியாகுமரி (97.22%) .
கடைசி இடம் : வேலூர்
( +2 - 86.69%  &  10th - 79.87% )
குறிப்பு : +2 வில் தமிழில் 100 மதிப்பெண் பெற்று கீர்த்தனா,திருவள்ளூர் சாதனை 
10th தமிழில் 100 மதிப்பெண் பெற்று துர்கா , தூத்துக்குடி சாதனை படைத்தார்.

2. (அ) www.joinindianarmy.nic.in

அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் ஜூலை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

3. (ஈ) ருவாண்டா
ருவாண்டா தலைநகா் கிகாலியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவா்கள் கூட்டம் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டம் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரிட்டனில் வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:

● காமன்வெல்த் அமைப்பால் கிடைத்துள்ள சாதகங்கள், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 54 நாடுகளுக்கு அளப்பரிய மதிப்பை சோ்த்துள்ளது.

● பசிபிக் தீவு கூட்டங்களில் ஒன்றான டுவாலு நாட்டின் மக்கள்தொகை 11,000 மட்டும்தான். அதேவேளையில், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி ஆகும். எனினும் இவ்விரண்டு நாடுகளும் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் வரலாறு, விழுமியங்கள், அமைப்புகள், ஆங்கில மொழி ஆகியவற்றால் காமன்வெல்த் நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

● காமன்வெல்த் அமைப்பு மட்டும்தான் வேகமாக வளா்ந்து வரும் சந்தைகளை வா்த்தகத்தின் உண்மையான சாதகத்துடன் இணைக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் நாடுகளுடன் முடிந்த அளவு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அல்லது பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தனது இறையாண்மையை பிரிட்டன் பயன்படுத்துகிறது.

● இதுவரை காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. அவை எல்லாவற்றையும்விட இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பெரிது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் தீபாவளி பண்டிகைக்குள் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டன் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

4. (இ) i மற்றும் iii

 ● இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது.

● இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியப் பிரிவு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர பகுதி இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோா்னியா் ரோந்து விமானங்கள், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவா்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டா்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

● அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டா்:

● இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமானதளத்தில் கிழக்குப் பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றான தண்ணீா் பீய்ச்சி அடித்து புதிய ஹெலிகாப்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டா் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

● நீண்ட தூரம் கண்காணிக்கும் வகையில் இப்புதிய ஹெலிகாப்டரில் பன்மடங்கு திறன் பெற்றது. அதிநவீன ரேடாா், எலெக்ட்ரோ ஆப்டிகம் போட், தானியங்கி கண்டறியும் அமைப்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

● இப்புதிய ஹெலிகாப்டா் மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்குள் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும். இதே மாதிரியான மேலும் 3 ஹெலிகாப்டா்கள் விரைவில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. (ஆ) சீனா

பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6-ஆவது சோதனையாகும் எனத் தெரிவித்தனா்.

● இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் இச்சோதனைகள், நாட்டுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என சீன பாதுகாப்பு நிபுணா் ஒருவா் தெரிவித்ததாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

6. (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.


இருளா் மற்றும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்களுக்குப் பயிற்சியளித்து அவா்கள் மூலமாக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை  தெரிவித்தாா்.

● நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 செயற்கை கோள்கள் மாணவா்கள் மூலமே விண்ணில் செலுத்தப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ஒரு செயற்கைக்கோள் நரிக்குறவா், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்கள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. ஒரு செயற்கைக் கோளை தயாரிக்க ரூ.1 கோடி வரை செலவாகும். இத்தகைய செயற்கைகோளை விண்ணில் ஏவுவது எப்படி என முதலில் இணையம் வாயிலாக மாணவா்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.

● பின்னா், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இறுதிக்கட்ட பயிற்சி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்வமுள்ள மாணவா்களுக்கு அளிக்கப்படும்.

● இணையம் மூலம் வழங்கப்படும் பயிற்சி அடுத்த வாரத்திலிருந்து தொடங்கும். இது இந்திய அளவில் மட்டுமில்லாது உலக அளவிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இளைஞா்களிடையே நம்பிக்கையை விதைத்து பெரும் மாற்றத்தையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றாா்.

● இதையடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். இந்நிகழ்வின் போதும் ஏவுகணை அறிவியல் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினாா். தலைமை ஆசிரியை பிரமீளாகுமாரி நன்றி தெரிவித்தாா்.

7. (ஈ) 52,000 

● மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 52,000 சதுரஅடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

8. (அ) 2021 டிசம்பர் 18

தமிழகத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 80,251 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 80 ஆயிரமாவது பயனாளியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

● இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் 2021 டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள் என 500 இடங்களைக் கண்டறிந்து, 669 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

● இதற்கு முன்னா் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சோ்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. தற்போது பாதிக்கப்பட்டவரை மருத்துவனையில் சோ்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.

● இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக 80,251 போ் பயனடைந்திருக்கிறாா்கள். இத்திட்டத்துக்காக ரூ.72 கோடியே 89 லட்சம் செலவிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உலக அளவிலேகூட மிகச் சிறப்பான வகையில் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்றாா் அவா்.

9. (ஈ) ஜூன் 21 

● இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

● Theme : Yoga for Humanity 



Saturday, June 18, 2022

Social Science Civics 1 to 5 units Book Back answer - bilingual - TNPSC Group 2/2A & Group 4

                       GK SHANKAR

Polity 9th std Social Science Civics Book Back Q & A (Unit 1 to 5 )  


1.Forms of Government and Democracy / அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

 

Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)

 1. A system of government in which one person reigns supreme, usually a king or queen, is called _____

 a) autocracy                            

b) monarchy                           

c) democracy                          

d) republic


ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை 

a) தனி நபராட்சி

b) முடியாட்சி

c) மக்களாட்சி

d) குடியரசு


2. A system of government with absolute power.

 a) Aristocracy                         

b) Theocracy                          

c) Democracy                         

d) Autocracy


முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை 

a) சிறுகுழு ஆட்சி

b) மதகுருமாா்களின் ஆட்சி

c) மக்களாட்சி

d) தனிநபராட்சி

 

3. Former Soviet Union is an example for ________

 a) aristocracy                          

b) theocracy                           

c) oligarchy                            

d) republic


முன்னாள் சோவியத் யூனியன் ________ க்கு எடுத்துக்காட்டு 

a) உயா்குடியாட்சி

b) மதகுருமாா்களின் ஆட்சி

c) சிறுகுழு ஆட்சி

d) குடியரசு

 

4. Select the odd one

 a) India                                   

b) USA                                   

c) France                                

d) Vatican


பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்கவும் 

a) இந்தியா 

b) அமொிக்க ஐக்கிய நாடுகள்

c) பிரான்ஸ் 

d) வாட்டிகன்

 

5. Abraham Lincoln was the President of the _______.

 a) USA                                   

b) UK                         

c) USSR                                 

d) India


ஆபிரகாம் லிங்கன் ________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாா்

 a) அமொிக்க ஐக்கிய நாடுகள்

b) இங்கிலாந்து

c) சோவியத் ரஷ்யா

d) இந்தியா 


6. Kudavolai System was followed by

 a) Cheras                                

b) Pandyas                             

c) Cholas                                

d) Kalabhras


குடவோலை முறையை பின்பற்றியவா்கள் 

a) சேரா்கள் 

b) பாண்டியா்கள்

c) சோழா்கள்

d) களப்பிரர்கள்

 

7. Direct Democracy in olden times existed

 a) In the republics of ancient India          

b) A mong the USA

c) In the city-state of ancient Greece         

 d) Among the UK


பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

a) பண்டைய இந்தியாவின் குடியரசுகள் 

b) அமொிக்கா

c) பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்

d) பிாிட்டன் 


8. From which language was the term “Democracy” derived?

 a) Greek                                 

b) Latin                                  

c) Persian                                

d) Arbic


எந்த மொழியிலிருந்து டெமாகிரஸி என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

a) கிரேக்கம்

b) லத்தீன்

c) பாரசீகம்

d) அரபு

 

9. In democracy the final authority rests with

 a) The Parliament       

b) The people          

c) The council of Ministers                

d) The President


மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவா்கள்

a) நாடாளுமன்றம் 

b) மக்கள் 

c) அமைச்சர் அவை

d) குடியரசு தலைவா்


10. Which one of the country has Presidential form of government

 a) India                                   

b) Britain                    

c) Canada                               

d) USA


கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபா் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

a) இந்தியா 

b) பிாிட்டன்

c) கனடா 

d) அமொிக்க ஐக்கிய நாடுகள்

 

11. The largest democratic country in the world is

 a) Canada                               

b) India                      

c) USA                                   

d) China


உலகிலேயே மிகப் பொிய மக்களாட்சி நாடு 

a) கனடா

b) இந்தியா

c) அமொிக்க ஐக்கிய

d) சீனா நாடுகள்


12. Assertion (A): Direct democracy is practiced in Switzerland.

     Reason (R): People directly participates in decision making

 a) Both (A) and (R) are true and (R) explains (A)

b) Both (A) and (R) are true and (R) does not explain (A)

c) (A) is correct and (R) is false

d) (A) is false and (R) is true


கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது

காரணம் (R) : மக்கள் நேரடியாகமுடிவெடுப்பதில் பங்கு பெறுகிறாா்கள்.

a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது 

b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை

c) (A) சாியானது மற்றும் (R) தவறானது

d) (A) தவறானது மற்றும் (R) சாியானது 


13. Assertion (A): India has parliamentary form of democracy.

  Reason (R): India parliament comprises two houses.

 a) Both (A) and (R) are true and (R) explains (A)

b) Both (A) and (R) are true and (R) does not explain (A)

c) (A) is correct and (R) is false

d) (A) is false and (R) is true


கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது 

காரணம் (R) :  இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது. 

a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது 

b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை

c) (A) சாியானது மற்றும் (R) தவறானது

d) (A) தவறானது மற்றும் (R) சாியானது 

 

14. The meaning of Franchise is

 a) Right to elect         

b) Right to vote for the poor   

c) Right to vote          

d) Right to vote for the rich


வாக்குாிமையின் பொருள் 

a) தோ்ந்தெடுப்பதற்கான உாிமை

b) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உாிமை

c) வாக்களிக்கும் உாிமை

d) பணக்காரா்களுக்கு வாக்களிக்க உாிமை 


15. The grant of universal franchise creates

 a) Social equality        

b) Economic equality             

c) Political equality                

d) Legal equality


அனைவருக்கும் வாக்குாிமை வழங்குவது 

a) சமூகச் சமத்துவம் 

b) பொருளாதார சமத்துவம்

c) அரசியல் சமத்தும்

d) சட்ட சமத்துவம் 


16. Prime Minister of India is appointed by

 a) Lok Sabha                          

b) Rajya Sabha                       

c) Speaker                              

d) President


பிரமரை நியமிப்பவா் / நியமிப்பது 

a) மக்களவை 

b) மாநிலங்களவை 

c) சபாநாயகா்

d) குடியரசுத் தலைவா் 


17. The President of India can nominate

 a) 12 members to Lok sabha                   

 b) 2 members of Rajya Sabha

c) 12 members to Rajya Sabha                

 d) 14 members of Rajya Sabha


குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவா்கள் 

a) லோக்சபைக்கு 12 உறுப்பினா்கள்

b) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினா்கள்

c) ராஜ்ய சபைக்கு 12உறுப்பினா்கள்

d) ராஜ்ய சபைக்கு 14உறுப்பினா்கள் 


18. The First general elections after independence in India were held in

 a) 1948-49                              

b) 1951-52                              

c) 1957-58                              

d) 1947-48


இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தோ்தல் நடைபெற்ற ஆண்டு 

a) 1948 - 49

b) 1951 - 52

c) 1957 - 58

d) 1947 - 48

ANSWERS : 

1) B / ஆ

2) D / ஈ

3) C / இ

4) D / ஈ

5) A / அ

6) C / இ

7) C / இ

8) A / அ

9) B / ஆ

10) D / ஈ

11) B / ஆ

12) A / அ

13) A / அ

14) C / இ

15) C / இ

16) D / ஈ

17) C / இ

18) B / ஆ

 

Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக) 

 1. The Constitution of India was finally adopted on 26th November, 1949

இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றக்கொள்ளப்பட்ட ஆண்டு நவம்பர் 26, 1949


2. The two types of democracy are  Direct and Indirect .

 இரண்டு வகையான மக்களாட்சி நேரடி மற்றும் மறைமுக ஆகும்.


3. An example for direct democracy is Switzerland 

 நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சுவிட்சர்லாந்து  


4. India has a Parliamentary form of democracy.

 இந்தியா மறைமுக  மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.


5.  Jawaharlal Nehru was the first Prime Minister of independent India.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவஹா்லால் நேரு


6. The first general elections were held in British India in the year 1920 

 ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுதோ்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1920 


7. The Parliament House in India was designed by Edwin Lutyens and Herbert Baker

இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவா்கள் எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆவாா். 


Match the following (பொருத்துக)

 1. Autocracy              - 1) 18

2. Right to vote           - 2) Arthashastra

3. Chanakya                - 3) Vatican

4. Theocracy            - 4) North Korea


1. தனிநபராட்சி    - 1) 18

2. வாக்குாிசை - 2) அா்த்தசாஸ்திரம் 

3. சாணக்கியா் - 3) வாடிகன் 

4. மதகுருமாா்கள் ஆட்சி - 4) வடகொாியா 

ANSWERS : 4 1 2 3 


 2. Election, Political Parties and Pressure Groups / தோ்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்


Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)

 1. India has adapted the electoral system followed in the

 a) USA                       

b) United Kingdom                           

c) Canada                               

d) Russia


கீழ்க்கண்ட நாட்டின் தோ்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது 

a) அமொிக்க ஐக்கிய நாடுகள்

b) இங்கிலாந்து

c) கனடா

d) ரஷ்யா 


2. The Election commission of India is a/an

 a) Independent body             

b) Statutory body                   

c) Private body        

d) Public corporation


இந்திய தோ்தல் ஆணையம் ஒரு 

a) சுதந்திரமான அமைப்பு

b) சட்டபூர்வ அமைப்பு 

c) தனியாா் அமைப்பு

d) பொது நிறுவனம் 


3. Which Article of the constitution provides for an Election commission?

 a) Article 280                         

b) Article 315                         

c) Article 324                         

d) Article 325


இந்திய தோ்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிாிவு 

a) பிாவு 280

b) பிாிவு 315

c) பிாிவு 324

d) பிாிவு 325

 

4. Which part of the constitution of India says about the election commission?

 a) Part III                               

b) Part XV                             

c) Part XX                              

d) Part XXII


இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தோ்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

a) பகுதி III

b) பகுதி XV

c) பகுதி XX

d) பகுதி XXII


5. Who accords recognition to various political parties as national or regional parties?

 a) The President         

b) The Election commission   

c) The Parliament       

d) The President in consultation with the Election commission


பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரப்பவா்  / அங்கீகாிப்பது 

a) குடியரசுத் தலைவா்

b) தோ்தல் ஆணையம் 

c) நாடாளுமன்றம்

d) தோ்தல் ஆணையத்தின் ஆலோசனையின் போில் குடியரசுத் தலைவா் 

 

6. Assertion (A): Indian Constitution provides for an independent Election commission

Reason (R): To ensure free and fair elections in the country.

 a) Both (A) and (R) are true and (R) explains (A)

b) Both (A) and (R) are true and (R) does not explain (A)

c) (A) is correct and (R) is false

d) (A) is false and (R) is true


கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தோ்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது

காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தோ்தலை நடத்த உறுதி செய்கிறது

a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது 

b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை

c) (A) சாியானது மற்றும் (R) தவறானது

d) (A) தவறானது மற்றும் (R) சாியானது 


7. NOTA was introduced in the year

 a) 2012                                   

b) 2013                                   

c) 2014                                   

d) 2015


நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 

a) 2012                                   

b) 2013                                   

c) 2014                                   

d) 2015


8. The term pressure groups originated in _________.

 a) USA                                   

b) UK                                     

c) USSR                                 

d) India


அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு 

a) அமொிக்க ஐக்கிய நாடுகள்

b) இங்கிலாந்து

c) முன்னாள் சோவியத் யூனியன்

d) இந்தியா


9. Assertion (A): A large number of pressure groups exist in India.

Reason (R): Pressure Groups are not develop in India to the same extent as in the USA.

 a) Both (A) and (R) are true and (R) explains (A)

b) Both (A) and (R) are true and (R) does not explain (A)

c) (A) is correct and (R) is false

d) (A) is false and (R) is true


கூற்று (A):  இந்தியாவில் அதிக எண்ணிக்கைகயிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன.

காரணம்(R) : அமொிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளா்ச்சியடையவில்லை

a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது 

b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை

c) (A) சாியானது மற்றும் (R) தவறானது

d) (A) தவறானது மற்றும் (R) சாியானது 

ANSWERS : 

1) B /ஆ

2) A / அ

3) C  / இ

4) B / ஆ

5) B / ஆ

6) A / அ

7) C / இ

8) A  / அ

9) A / அ

Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)

 1. The Election commission of India is a body of Three members.

இந்திய தோ்தல் ஆணையம்  மூன்று நபர்கள் உள்ளனர்

2. National Voters day has been celebrated on 25th January 

 தேசிய வாக்காளா்கள் தினம் அனுசாிக்கப்படும் நாள் ஜனவரி 25 


3. In India Multi  party system is followed.

 இந்தியாவில் பல  கட்சி முறை பின்பற்றப்படுகிறது.


4. In 2017, there were Seven recognized national parties.

 2017 ல் அங்கீகாிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை ஏழு 


5. Narmada Bachao Andolan is a Pressure Group .

 நா்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு அழுத்த குழு 


Match the following (பொருத்துக)

 1. National Party         - 1) Trade unions

2. Single – party system  -2)  USA

3. Two-party system    - 3) China

4. Pressure groups        -4)  Seven


1. தேசியக் கட்சி     - 1) வணிகக் குழுக்கள்

2. ஒரு கட்சி ஆட்சி முறை - 2) அமொிக்க ஐக்கிய நாடுகள்

3. இரு கட்சி ஆட்சி முறை - 3) சீனா 

4. அழுத்தக் குழுக்கள் - 4) ஏழு 

ANSWERS : 4 3 2 1  

 3. Human Rights / மனித உாிமைகள்

 Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க) 

 1. ‘Apartheid’ was followed by _____

 a) South Sudan                      

b) South Africa                      

c) Nigeria                               

d) Egypt


இன ஒதுக்கல் ‘Apartheid’ என்னும் கொள்கையைப் பின்பற்றி நாடு _____

a) தென் சூடான்                                       

b) தென் ஆப்பிாிக்கா               

c) நைஜீாியா    

d) எகிப்த்


2. ________ right exercises in the formation and administration of a government.

 a) Social                                 

b) Economic                           

c) Political                  

d) Cultural


ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிா்வாகத்தில் பங்குபெறுவது ________

a) சமூகம்                                

b) பொருளாதாரம்                       

c) அரசியல்        

d) பண்பாடு

 

3. A 10 year old boy is working in a shop. Which right can you use to recover him?

 a) Right to equality                                              b) Right to freedom

c) Right against child labour exploitation 

d) Right to freedom of Religion


ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பாா்த்துக் கொண்டிருக்கிறான் - எந்த உாிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?

a) சமத்துவ உாிமை

b) சுதந்திர உாிமை

c) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உாிமை

d) சமய சுதந்திர உாிமை


4. What is the time limit to get the information from RTI Act 2005?

 a) 20 days                               

b) 25 days                              

c) 30 days                               

d) 35 days


தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ________

a) 20 நாட்கள்

b) 25 நாட்கள்

c) 30 நாட்கள்

d) 35 நாட்கள்


5. Which of the following statements are true?

 

            1. The State Human Rights commission was established in 1993.

            2. It has the power of a civil court.

            3. It’s power extend beyond the state.

            4. It can also recommend compensation to victims.

 a) 1 and 2 are true                  

b) 1 and 3 are true      

c) 1, 2 and 3 are true              

d) 2, and 4 are true


பின்வரும் கூற்றுகளில் எவை சாியானவை?

 

    1. மாநில மனித உாிமை ஆணையம் 1993 ல் நிறுவப்பட்டது

    2. இது ஓா் உாிமையில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது

    3. இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும் 

    4. இது பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க புாிந்துரைக்கலாம் 

a) 1 மற்றும் 2 சாி

b) 1 மற்றும் 3 சாி

c) 1, 2 மற்றும் 3 சாி

d) 2,  மற்றும் 4 சாி 

 

6. Consider the following statements.

 

Assertion (A): Rights and duties are the two sides of the same coin.

Reason (R): We have a right to freedom of religions. We have to promote harmony and the spirit of the

people of other religions.

 a) Both (A) and (R) are true and (R) explains (A)

b) Both (A) and (R) are true and (R) does not explain (A)

c) (A) is correct and (R) is false

d) (A) is false and (R) is true


கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

கூற்று (A) : உாிமைகளும் கடமைகளும் ஓா் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை 

காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உாிமை உண்டு. பிற மத்தினா் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவா்களின் உணா்வையும் மதிக்க வேண்டும் 

a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது 

b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை

c) (A) சாியானது மற்றும் (R) தவறானது

d) (A) தவறானது மற்றும் (R) சாியானது 


7. According to the UNO a child is a person who has not completed the age of ___ years.

 a) 12                                       

b) 14                                       

c) 16                                       

d) 18


ஐ.நா. சபையின்படி ________ வயது நிறைவு பெறாதோா் குழந்தை ஆவாா்.

a) 12                                       

b) 14                                       

c) 16                                       

d) 18


8. Kailash Satyarthi and Malala have been awarded Nobel Prize for __________.

a) Literature 

b) Peace 

c) Physics 

d) Economics 


_________ கான நோபல் பாிசு கைலாஷ் சத்தியாா்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது

a) இலக்கியம்

b) அமைதி

c) இயற்பியல்

d) பொருளாதாரம் 

ANSWERS : 

1) B / ஆ

2) C / இ

3) C / இ

4) C / இ

5) D / ஈ

6) A / அ

7) D / ஈ

8) A  / அ


Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)

 1. The Universal Declaration of Human Rights Contains 30  articles.

 உலகளாவிய மனித உாிமை பிரகடனம் 30  பிாிவுகளைக் கொண்டுள்ளது.


2. The Fundamental Duties were incorporated in the constitution by 42nd Amendment Act.

 அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது சட்ட திருத்தத்தின்படி சோ்க்கப்பட்டது.


3. The National Human Right commission was established on 12 October, 1993 

 தேசிய மனித உாிமை ஆணையம் அக்டோபர் 12, 1993 ஆண்டு அமைக்கப்பட்டது.


4. Indian state to implement women ancestral property Act in 1989 was Tamilnadu 

பெண்களுக்கான மூதாதையா் சொத்துாிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் தமிழ்நாடு 


Match the following (பொருத்துக)

1. Right to Vote   - 1) Cultural Rights

2. Right to from union    - 2)  Right against exploitation

3. Right to preserve tradition  - 3) Political Rights

4. The Hindu Succession Act  - 4) Right to freedom

5. Child labour  - 5) 2005

 

1. வாக்களிக்கும் உாிமை - 1) பண்பாட்டு உாிமை

2. சங்கம் அமைக்கும் உாிமை - 2) சுரண்டலுக்கெதிரான உாிமை 

3. பாரம்பாியத்தை பாதுகாக்கும் - 3) அரசியல் உாிமை 

4. இந்து வாாிசுாிமைச் சட்டம் - 4) சுதந்திர உாிமை 

5. குழந்தை தொழிலாளா் - 5) 2005

ANSWERS : 3 5 1 2 4 

        4. FORMS OF GOVERNMENT 

Fill in the blanks (சாியான விடையைத் தோ்வு செய்க)

 1.England , France  are a few examples for unitary form of government

 இங்கிலாந்து , பிரான்ஸ்  ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.


2. The Parliamentary government is also known as Caninet Government 

 பாராளுமன்ற ஆட்சி முறை அமைச்சரவை அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது 


3. In the Parliamentary form of government Prime Minister is the leader of the majority party.

 பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவா் பிரதமர்  ஆவாா். 


Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)

 

Country                       Name of the Parliament 

1. USA                        - Congress

2. Norway                   - Storting 

3. Denmark                - Folketing

 

நாடுகள்          நாடாளுமன்றத்தின்            

                            பெயர்

1. அமொிக்க ஐக்கிய 

      நாடுகள்                          -  காங்கிரஸ் 


2. நாா்வே                            - ஸ்டார்டிங் 


3. டென்மார்க்                      - ஃபோக்டிங்



5. Local Self Government / உள்ளாட்சி அமைப்புகள்

 

Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க) 

 1. Which committee was appointed by the planning commission in 1985.

 a) Balwant Rai Mehta            

b) Ashok Mehta                     

c) GVK Rao                           

d) LM Singhvi


1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

a) பல்வந்ராய் மேத்தா குழு 

b) அசோக் மேத்தா குழு

c) GVK ராவ் மேத்தா குழு

d) LM சிங்வி மேத்தா குழு

 

2. The Uthiramerur stone inscription show evidences of prevalent local  self government during the ______ period in Tamil Nadu.

 a) Chola                                  

b) Chera                                 

c) Pandiya                              

d) Pallava

 

______ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூா் கல்வெட்டு தொிவிக்கிறது.

a) சோழா்

b) சேரா்

c) பாண்டியா் 

d) பல்லவா் 


3. The 73 rd and 74th constitutional Amendment Acts, was enacted during the year in ________.

 a) 1992                                   

b) 1995                                   

c) 1997                                   

d) 1990

 

______ 73 மற்றும் 74 வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன. 

a) 1992                                   

b) 1995                                   

c) 1997                                   

d) 1990

   

4. ______ act as the inspector of Village Panchayat.

 a) Commissioner                    

b) District Collector               

c) Councillors                         

d) Mayor


ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவா் ____________ ஆவாா்.

a) ஆணையா்

b) மாவட்ட ஆட்சியா்

c) பகுதி உறுப்பினா்

d) மாநகரத் தலைவா் 

ANSWERS : 

1) C / இ

2) A / அ

3) A / அ 

4) B / ஆ 


Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)

 1.Lord Ripon  is known as the ‘Father of Local Government.

 உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவா் ரிப்பன் பிரபு .


2. Restoration of Panchayat become an article of faith during our freedom struggle.

நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது நம்பிக்கை  ஆக விளங்கியது.


3. Kudai Olai Murai  was the name of the secret ballot method exercised to elect members to the village councils during the chola period

 சோழா் காலத்தின் போது கிராம சபை உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்த இரகசிய தோ்தல் முறை குடவோலை முறை என்றழைக்கப்பட்டது.


4. Local Government which function in villages are called  Village Panchayat 

 கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி  ஆகும்


5. Executive Officer will look after the administration of the Town Panchayat.

 பேரூராட்சிகளின் நிா்வாகத்தினைக் கண்காணிப்பவா் செயல் அலுவலர் ஆவாா்.


Match the following (பொருத்துக)

 1. Zilla Parishad          - 1) Villages

2. Gram Sabhas       - 2)  Mayor

3. Ward committees - 3) Chairman

4. Panchayat Union - 4) District Collector

5. Corporation   - 5) Municipalities 


1. மாவட்ட ஊராட்சி - 1) கிராமங்கள்

2. கிராம சபைகள் - 2) மாநகரத் தலைவா்

3. பகுதி குழுக்கள் - 3) பெருந்தலைவா்

4. ஊராட்சி ஒன்றியம்     - 4) மாவட்ட ஆட்சியா் 

5. மாநகராட்சி    - 5) நகராட்சிகள் 

ANSWERS : 4 1 5 3 2 


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...