GK SHANKAR June 24 / 2022
I. தமிழ்நாட்டுச் செய்திகள்
1. தமிழகத்தில் தற்போது ------------ மற்றும் --------------- வகை கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ?
அ) பிஏ-4
ஆ) பிஏ-6
இ) பிஏ-5
ஈ) அ (ம) இ
விடை : (ஈ) அ(ம)இ
● தற்போது கரோனா பரவல் பெரும்பாலும் பிஏ-4, பிஏ-5 என்ற வகை தாக்கம் தான் அதிகம் உள்ளது.
● எனவே பொதுமக்கள் நோய்த்தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
● அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
2. நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பேருந்தில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நடத்துநர் யார் ?
அ) இளையராணி
ஆ) ராஜாமணி
இ) அருந்ததி தேவி
ஈ) சீதா தேவி
விடை : (அ) இளையராணி
● நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பேருந்தில் பெண் நடத்துநர் இளையராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
● குறிப்பு : இவருக்கு தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்துள்ளது.
II. தேசியச் செய்திகள்
3. தேசிய புலனாய்வு முகமை ( NIA ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) ஸ்வாகத் தாஸ்
ஆ) தினகர் குப்தா
இ) அரவிந்த் குப்தா
ஈ) அமரேந்தர் சிங்
விடை : (ஆ) தினகர் குப்தா
● 1987 பஞ்சாப் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த தினகர் குப்தா வரும் 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை அவர் இப்பொறுப்பில் நீடிப்பார்.
● அறிவிப்பு : மத்திய பணியாளர் அமைச்சகம்.
● மேலும் ஒரு நியமனம் : மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளராக ( உள்நாட்டுப் பாதுகாப்பு ) ஸ்வாகத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது ? இந்திய தூதரகம் எங்கு உள்ளது ?
அ) காபூல்
ஆ) கந்தகார்
இ) கோஸ்ட்
ஈ) கண்டசு
விடை : (அ) காபூல்
● ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது .
● காரணம் : ஆப்கானுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும் , ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில்நுட்பக்குழு காபூல் சென்றடைந்துள்ளது.
5. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சார்பில் தில்லியில் கட்டப்பட்டுள்ள வாணிஜ்ய பவன் கட்டடத்தை திறந்து வைத்தவர் யார் ?
அ) ராம்நாத் கோவிந்த்
ஆ) நரேந்திர மோடி
இ) அரவிந்த் கெஜ்ரவால்
ஈ) வெங்கையா நாயுடு
விடை : (ஆ) நரேந்திர மோடி
● மேலும் ஆண்டுதோறும் வர்த்தக சூழலை ஆராயும் நோக்கில் தேசிய இறக்குமதி - ஏற்றுமதி பதிவுக்கான நிர்யத் வலைத்தளத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
6. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது ?
அ) மத்திய உள்துறை அமைச்சகம்
ஆ) மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
இ) மத்திய கல்வி அமைச்சகம்
ஈ) மத்திய போகுவரத்து அமைச்சகம்
விடை : (அ) மத்திய உள்துறை அமைச்சகம்
● மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
● போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால், போதைப் பொருள் மற்றும் மனநல பொருள் சட்டம் -1985 மற்றும் போதைப் பொருள் கடத்தல் சட்டம்-1988 ஆகியவை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கடத்தப்படும் போதைப் பொருள், தங்கம் ஆகிய வழக்குகளை மத்திய வருவாய்த் துறை கையாண்டு வருகிறது.
● இவற்றை அனைத்தும் இணைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
III. சர்வதேச செய்திகள்
7. பின்வரும் எந்த நாடு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க முடிவுசெய்துள்ளது ?
அ) இலங்கை
ஆ) ஜெர்மனி
இ) உக்ரைன்
ஈ) ஆப்பிரிக்கா
விடை : (ஆ) ஜெர்மனி
● ஜொ்மனிக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்துவிட்டதால் அங்கு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகியுள்ளது.
● உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்தது.
● இதனால், எரிபொருள் தேவைக்கு ரஷியாவை சாா்ந்துள்ள ஜொ்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க பல்வேறு கட்ட அவசர நிலைகளை அறிவித்து வந்த அந்த நாடு, ‘எச்சரிக்கை’ கட்ட அவசர நிலையை வியாழக்கிழமை அறிவித்தது.
● இது, எரிபொருளை ரேஷன் முறையில் விநியோகிப்பதற்கு முந்தைய கட்டம் என்று கூறப்படுகிறது.
IV. விளையாட்டுச் செய்திகள்
8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் , மிஹிர் ஆம்ப்ரே, அனீஷ் கௌடா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
2) மேலும் படேல் வெள்ளியும் , சிவா ஸ்ரீதர் வெண்கலமும் வென்றுள்ளனர்.
விடை : (இ) 1 மற்றும் 2
● சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் 2022.
● தங்கம் : ஸ்ரீதர் நட்ராஜ் - 100மீ பேக்ஸ்ட்ரோக் ; மிஹிர் - 50 மீ பட்டர்ஃப்ளை ; அனீஷ் கௌடா - 800 மீ ஃபீரிஸ்டைல்.
● வெள்ளி : மானா படேல் - 100 மீ பேக்ஸ்ட்ரோக்.
● வெண்கலம் : சிவா ஸ்ரீதர் - 100மீ பேக்ஸ்ட்ரோக்
9. ஹங்கேரியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் தனது 21 வது பதக்கத்தை வென்று உலக சாதனை செய்துள்ள வீராங்கனை ?
அ) கேட்டி லெடக்கி
ஆ) ரயான் லாக்டே
இ) கிளோ வெய்ன்ஸ்டின்
ஈ) பெல்லாசிம்ஸ்
விடை : (அ) கேட்டி லெடக்கி
● கேட்டி லெடக்கி அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆவார்.
● உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 21 பதக்கங்களை வென்ற ஒரே வீனாங்கனை
● பதக்கங்கள் : 18 G, 3 S
V. முக்கிய தினங்கள்
10. இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் ( International Day of Women in Diploamcy) 2022 ?
அ) ஜூன் 21
ஆ) ஜூன் 23
இ) ஜூன் 25
ஈ) ஜூன் 24
விடை : (ஈ) ஜூன் 24
No comments:
Post a Comment