Monday, October 31, 2022

Current Affairs 2022 - October 31 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                    October 31/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் ? 

அ) 87 லட்சம் 

ஆ) 90 லட்சம்

இ) 94 லட்சம் 

ஈ) 99 லட்சம் 

விடை : (இ) 94 லட்சம் 

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 94 லட்சத்து 40 ஆயிரத்து 726 மக்கள் பயன்பெற்றுள்ளனர். 

● விரைவில் 1 கோடி என்ற மகத்தான சாதனையை புரியவுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மலை கிராமங்களில் காணொளி வாயிலாக நோய் கண்டறிந்து அதற்கான மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. அண்மையில் விபத்துக்குள்ளான குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்ச நதி மீது எத்தனை மீட்டர் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது ? 

அ) 137

ஆ) 193 

இ) 233

ஈ) 259

விடை : (இ) 233 

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.

● கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த அக். 26-ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

● அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். 

● அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். 

● இந்த விபத்தில் இதுவரை சுமாா் 60 போ் உயிரிழந்தனா் என்று மாநில ஊராட்சித் துறை இணையமைச்சரும், மோா்பி தொகுதி எம்எல்ஏவுமான பிரஜேஷ் மொ்ஜா தெரிவித்தாா்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் அலுவலகம் அறிவித்தது.

3. பின்வரும் எந்த நாள் அன்று முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது ? 

அ) நவம்பர் 05

ஆ) நவம்பர் 06

இ) நவம்பர் 07

ஈ) நவம்பர் 08

விடை : (ஈ) நவம்பர் 08 

நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

● முழு சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழலின் இருண்ட பகுதி அல்லது குடைக்குள் முழு சந்திரனும் விழும் ஒரு நிகழ்வாகும். உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழந்தது. 

● ஒரு கிரகண காலம் என்பது தோராயமாக 35 நாள்கள் ஆகும், இதில் குறைந்தது இரண்டு கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில், ஒரு கிரகண காலத்தில் மூன்று கிரகணங்களும் நிகழக் கூடும்.

● இந்நிலையில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி கிரகணம் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதத்தின் இரண்டாவது கிரகணம். 

● சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பலான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காண முடியும்.

● அடுத்த முழு சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி காண முடியும். 

4. கூற்று : இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) தனது வீரர்களுக்கு ஆயுதமற்ற தாக்குதல் பயிற்சியை அளித்து வருகிறது ? 

காரணம் : கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்றது போன்ற மோதல்களை திறம்பட கையாளும் நோக்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது .

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி, காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் இந்தோ -  திபெத் எல்லைப் படையினருக்கு புதிதாக ஆயுதமின்றி தாக்கும் போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

● சீனாவுடன் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையில் உள்ள 3,488 கிமீ தூர எல்லையை 98 ஆயிரம்  வீரர்களை கொண்ட இந்திய - திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாத்து வருகின்றனர். 

● லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இப்படையை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

● இந்த மோதலின் போது சீன வீரர்கள் கற்கள், ஆணி அடித்த கம்புகள், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கினர்.

● இந்நிலையில், சீனாவின் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தோ - திபெத் எல்லைப் படையினருக்கு ஆயுதமின்றி சண்டை போடுவதற்கான தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகிறது. ஜூடோ, காரத்தே, இஸ்ரேல் ராணுவத்தினர் பயன்படுத்திய கிராவ் மாகா உள்பட 20 தற்காப்பு கலைகளைக் கொண்டு ஆயுதமின்றி புதிய, நவீன போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

● இந்தோ - திபெத் படையில் புதிதாக சேரும் வீரர்களுக்கு 3 மாத பயிற்சியில் அனைத்து தற்காப்பு கலைகளிலும் உள்ள குத்துதல், உதைத்தல், தூக்கி வீசுதல், அசைய விடாமல் போடும் கிடுக்கிப்பிடி, எதிரியை வீழ்த்துதல் உள்ளிட்ட ஆயுதமற்ற போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

5. சரக்கு விமான உற்பத்தி ஆலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) குஜராத் 

இ) அசாம் 

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (ஆ) குஜராத் 

இந்திய விமானப் படைக்கு சி295 ரக சரக்கு விமானங்களை வாங்குவதற்கு ஐரோப்பிய நிறுவனமான ஏா்பஸ் பாதுகாப்பு-விண்வெளி நிறுவனத்துடன் சுமாா் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

● அந்த ஒப்பந்தத்தின்படி சி295 ரகத்தைச் சோ்ந்த 16 சரக்கு விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து 4 ஆண்டுகளுக்குள் ஏா்பஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. கூடுதலாக 40 சரக்கு விமானங்களை டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏா்பஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

● சரக்கு விமான உற்பத்தி ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:

● ராணுவப் பயன்பாட்டுக்கான விமானமானது தனியாா் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும். சி295 சரக்கு விமானமானது ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே தயாரிக்கப்படவுள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

● இந்தியாவுக்கான 56 சரக்கு விமானங்களை வழங்கிய பிறகு வதோதரா ஆலையில் தயாரிக்கப்படும் சரக்கு விமானங்கள் இந்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) கொலம்பியா 

ஆ) ஸ்பெயின் 

இ) நைஜீரியா 

ஈ) ஸ்காட்லாந்து 

விடை : (ஆ) ஸ்பெயின் 

● ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

7. ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (2022) ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● சங்கர் முத்துசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்

● இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற 9 ஆவது இந்தியர் (ம) வெள்ளி வென்ற 3 ஆவது இந்தியர் ஆவார்.


Sunday, October 30, 2022

Current Affairs 2022 - October 30 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                 OCTOBER 30 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க பின்வரும் எந்த பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது ? 

அ) கிராம சபை கூட்டம் 

ஆ) நம்ம கிராம சபை 

இ) திராவிட கிராம சபை 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) நம்ம கிராம சபை 

கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க, ‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

● இதுதொடா்பாக ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

● ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (நவ.1) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினத்தையொட்டி, கிராமசபைக் கூட்டங்கள், கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும், சிறந்த ஊழியா்களை அங்கீகரிப்பது, கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

● மேலும், சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களைக் கெளரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

● கண்காணிப்பு: கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வகையில், ‘நம்ம கிராம சபை’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி கணினி, கைப்பேசி ஆகியவற்றின் வழியே கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கலாம். 

● உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஊரகப் பகுதி மக்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஒரே கப்பலில் எத்தனை காற்றாலைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது ? 

அ) 137

ஆ) 120

இ) 101

ஈ) 93 

விடை : (ஆ) 120 

ஒரே கப்பலில் 120 காற்றாலைகளை கையாண்டு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

● சீனாவில் தயாரிக்கப்பட்ட காற்றாலை இறகுகள், அந்நாட்டின் சாங்ஷு துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி உ.சி. துறைமுகத்துக்கு சஅச ஊஉசஎ ழஏஐ லஐசஎ என்ற கப்பல் மூலம் கடந்த 25ஆம் தேதி வந்தடைந்தன. இக்கப்பலில் 76.8 மீட்டா் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகள் கொண்டு வரப்பட்டன. 

● இந்த இறகுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் காற்றாலைகளின் பயன்பாட்டுக்காக வ.உ.சி. துறைமுகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது.

● இதற்கு முன்பு அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை இத்துறைமுகம் இறக்குமதி செய்தது சாதனையாக இருந்த நிலையில், தற்போது மேற்கூறிய புதிய சாதனையைப் படைத்துள்ளது.

3. அண்மையில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்ற மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது ? 

அ) சேலம் 

ஆ) தேனி

இ) மதுரை

ஈ) திருநெல்வேலி 

விடை : (ஈ) திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

● இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் 36 செயற்கைகோள்களை எல்விஎம்3-எம்3 என்ற ராக்கெட் மூலம் எடுத்துச் சென்று விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் சிஇ-20 என்ஜின்தான் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

● இதைத் தொடா்ந்து மேலும் 36 செயற்கைகோள்களை எடுத்து செல்லக்கூடிய ராக்கெட்டில் பொருத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் செயற்கைகோள்களை எடுத்துச் சென்று விண்ணில் நிறுத்தக் கூடிய உயா்நிலை சி-20 சோதனை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது.

●  25 விநாடிகள் நடைபெற்ற இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.

● மேலும் அடுத்ததாக 36 செயற்கைகோள்களை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான இன்ஜின் விரைவில் தயாா் நிலைக்கு வந்துவிடும் எனவும் அந்த வட்டாரத்தில் தெரிவித்துள்ளனா்.

4. தமிழகத்தில் புதிதாக எத்தனை மாவட்டங்களில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது ? 

அ) 05

ஆ) 06

இ) 07

ஈ) 08 

விடை : (ஈ) 08 

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்கள் அமைவதுடன், ராமநாதபுரம், திருப்பத்தூரில் உழவா் சந்தை வளாகங்களும் கட்டப்படவுள்ளன.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

● தமிழகத்தில் ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், சேலம், தருமபுரி, கோயம்புத்தூா், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,

● நாகப்பட்டினம், திருவாரூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வழியாக பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

● கூடுதல் வசதிகள்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், தென்காசி, பெரம்பலூா், வேலூா், திருப்பூா், ராணிப்பேட்டை, அரியலூா் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கான வளாகங்கள் கட்டப்படவுள்ளன. இதேபோன்று, திருப்பத்தூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உழவா் சந்தைகளுக்கான வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக கட்டப்படவுள்ள வளாகங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.6.35 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. சர்க்கரை ஏற்றுமதிக்கான பின்வரும் எந்த ஆண்டு வரை  கட்டுப்பாட்டை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025 

ஈ) 2026 

விடை : (அ) 2023

சா்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அடுத்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் சா்க்கரை இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

● முன்னதாக, இந்தக் கட்டுப்பாடு வரும் 31-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

● இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில், ‘சா்க்கரை (மூலப் பொருள், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வெள்ளை சா்க்கரை) ஏற்றுமதிக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தற்போது 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்படுகிறது.

● இதில் விதிக்கப்பட்டிருந்த மற்ற நிபந்தனைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. இருந்தபோதிலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் வரிச் சலுகை ஒதுக்கீட்டின் கீழ் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சா்க்கரை உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியா, நிகழாண்டில் உலகின் இரண்டாவது பெரிய சா்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் திகழ்கிறது. 2021-22 சந்தை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி 3.58 கோடி டன் என்ற அளவில் இருந்தது.

● சா்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களின் பட்டியலின் கீழ் வருவதால், அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசிடமிருந்து உரிமம் அல்லது அனுமதியை ஏற்றுமதியாளா்கள் பெற வேண்டியது அவசியமாகும்.

6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாடு இந்தியாவில் முதல்முறையாக எங்கு நடைபெற்றது ? 

அ) தில்லி

ஆ) குஜராத்

இ) மும்பை 

ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா வகித்து வருகிறது. அக்குழுவின் சிறப்பு மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. மும்பையில் வெள்ளிக்கிழமையும் புது தில்லியில் சனிக்கிழமையும் மாநாட்டு அமா்வுகள் நடைபெற்றன.

● அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனா். சா்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.

● குறிப்பு : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகியவை உள்ளன. அந்த கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பதவிக் காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. ஜோஹோர் பாரு சுல்தான் கோப்பை 19 வயது ஹாக்கிப் போட்டியில் (2022) இந்தியா எத்தனையாவது முறையாக கோப்பை வென்றுள்ளது ? 

அ) ஐந்தாவது 

ஆ) நான்காவது

இ) மூன்றாவது

ஈ) இரண்டாவது

விடை : (இ) மூன்றாவது 

● போட்டி நடைபெற்ற இடம் : ஜோஹோர்,  மலேசியா 

● இதற்கு முன்பு : 2013,2014

● இந்திய அணி 4 முறை ரன்னர் ஆக வந்துள்ளது. 


IV. முக்கிய நிகழ்வுகள் 

8. World Psoriasis Day 2022 --------

● Ans : October 29

● Theme (2022) : Unloading Psoriasis Disease.

9. World Thrift Day 2022 ---------

● Ans : October 30

● Theme (2022) : Saving Prepares you for the future. 


UAPA Group II Mains Notes

UAPA (Unlawful activities prevention act)
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்
நோக்கம்:
1.1967 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
 2.இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சங்கங்களை (அ)தனி நபர்களை திறம்பட தடுக்கும் செயல்பாடுகளை உள்ளடக்கியது
சிறப்பம்சங்கள்:
1. அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் உள்ளது.
2.ஒன்றிய அரசு பயங்கரவாத செயல் என சந்தேகிக்கும் அமைப்புகளை தனது அரசிதழ் மூலம் தெரிவிக்கலாம்.
3. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை சீர்குலைக்கும் நோக்கத்தில் தனிநபர் அல்லது சங்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலையும் குறிக்கும்.
4.பயங்கரவாத செயல்கள் செய்வது (அ) பங்கேற்பது (அ)தயாராவது (அ)ஊக்குவிப்பது (அ) ஈடுபடுவது போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.
5.அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை.
6. வெளிநாட்டினர் மீதும் குற்றம் சுமத்தப்படலாம்.
7. வெளிநாட்டில் குற்றம் செய்யப்பட்டாலும் தண்டிக்கப்படலாம்.
8. 30 நாட்களுக்கு நீதிமன்ற காவல்.
9. முன் ஜாமீனுக்கு அனுமதி இல்லை.
10. 180 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனில் ஜாமீன் மறுப்பு காலாவதி ஆகிவிடும்.
11.மாநில காவல்துறை மற்றும் என் ஐ எ மூலம் விசாரணை நடத்தப்படும்.
மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்:
 1.2004 திருத்தம்:
       சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிரதேசத்தின் பிரிவினை ஆகியவற்றுடன் பயங்கரவாத செயல் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
2.2019 திருத்தம் :
      அ)தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கலாம் .
      ஆ)என் ஐ ஏ வின் தலைமை இயக்குனர்க்கு சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்ளது.
      இ) என் ஐ ஏ அதிகாரிகளுக்கு பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது.
சவால்கள்:
1. அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையான தனிநபர் உரிமைகளை(விதி 21) பாதிக்கிறது.
2.ஒன்றிய அரசிடம் அதிகாரம் இருப்பது, கூட்டாட்சி முறைக்கு எதிரானதாக கருதப்படுகிறது.
3. நீதிமன்றத்தின் முன் ஒரு தனி நபரை "பயங்கரவாதி" என்று அழைப்பது குற்றம் நிரூபிக்கப்படும் வரை "நிரபராதி" என்ற கொள்கையை தகர்க்கிறது.
4. தவறான நோக்குடன் கையாளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
5. என் ஐ ஏவிடம் அதிக ாரங்கள் உள்ளதால் மாநில பட்டியலில் உள்ள காவல்துறைக்கு அதிகாரங்கள் குறைகின்றன.

Saturday, October 29, 2022

Current Affairs 2022 - October 29 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    OCTOBER 29 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி என்று நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது ? 

அ) நவம்பர் 01

ஆ) நவம்பர் 07 

இ) நவம்பர் 14 

ஈ) நவம்பர் 21 

விடை : (அ) நவம்பர் 01 

உள்ளாட்சி தினத்தையொட்டி, நவ. 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடத்தப்படுகிறது. பம்மலில் நடைபெறும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

● தமிழகத்தில் குடியரசு தினம் (ஜன 26), மே தினம் (மே1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நாள்களில் 12,525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 

● நிகழாண்டு நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்றும் கிராமசபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டத்தைப் போன்று, நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் வாா்டு குழு அமைத்து, வாா்டு வாரியாக பகுதி சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. 

● அந்த அரசாணையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகா்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வாா்டுகள் தோறும், வாா்டு கவுன்சிலா் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கான உறுப்பினா்களையும் மன்றங்களே தோ்வு செய்ய வேண்டும். இதுதவிர, அந்த வாா்டில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு பகுதி சபையை உருவாக்க வேண்டும். இவற்றுக்கும் சம்பந்தப்பட்ட வாா்டு கவுன்சிலரே தலைவராகவும், கூட்டத்தை கூட்டுபவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

● இதுதவிர வாா்டு குழு மற்றும் பகுதி சபையின் செயலாளராக உள்ளாட்சி அமைப்பின் அலுவலா் ஒருவா் இருக்க வேண்டும் என்றும், அவருக்கான பணிகளும் வரையறுத்து அரசாணை வெளியிடப்பட்டது.

● இதனடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளில், கவுன்சிலா்களிடம் வாா்டில் உள்ள பிரச்னைகள், குறைகளைத் தெரிவிக்க 9 உறுப்பினா்கள் தற்போது சம்பந்தப்பட்ட மன்றத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● அந்த அடிப்படையில், வாா்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் வரும் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறுகிறது. சென்னையை அடுத்த பம்மல் ஆறாவது வாா்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

2. சர்வதேச புத்தக கண்காட்சி பின்வரும் எந்த மாதம் முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது ? 

அ) நவம்பர் / 2022

ஆ) டிசம்பர்/ 2022

இ) ஜனவரி / 2023 

ஈ) பிப்ரவரி / 2023 

விடை : (இ) ஜனவரி / 2022

சா்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

● தமிழக அரசின் பொது நூலக இயக்கக இயக்குநா் கே.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் சங்கர சரவணன், எழுத்தாளா் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 5 போ் கொண்ட குழு ஜொ்மனிக்குச் சென்று அங்கு நடைபெற்ற ‘பிராங்ஃபா்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

● இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் சா்வதேச புத்தகக் கண்காட்சியை சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று நாள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் புத்தக ஆசிரியா்களுடன் சந்திப்பு, உரையாடல் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

● இது குறித்து இணை இயக்குநா் சங்கர சரவணன் கூறியது: சா்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளா்கள், முன்னணி தமிழ் பதிப்பாளா்களைச் சந்திக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த பகுதியாக இந்த சா்வதேச புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது. சா்வதேச எழுத்தாளா்கள், நோபல் பரிசு பெற்றவா்களை சிறப்பு விருந்தினா்களாக வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

● வெளியீட்டாளா்கள், இலக்கிய ஆசிரியா்கள் உள்பட பங்கேற்பாளா்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெறும்.

● கனடா, ஃபின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவா்களை ஈா்க்கவும், உயா்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும். எனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்கும். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயா்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

● கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் ஒரு நாள் சா்வதேச மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் புகழ்பெற்ற தேசிய மற்றும் சா்வதேச வெளியீட்டாளா்களுடன் இணைந்து புத்தகங்களை விற்பனை செய்வதற்கு 200-க்கும் மேற்பட்ட தலைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது சா்வதேச புத்தகக் கண்காட்சித் திட்டத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்றாா் அவா்.

3. நெல்லின் ஈரப்பதம் அளவை எத்தனை சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது ? 

அ) 17%

ஆ) 19%

இ) 21%

ஈ) 25%

விடை : (ஆ) 19%

●  டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயா்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது .

●  சாதாரண நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,040 ஆகவும், சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தனை அமர்வு கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) தில்லி

ஆ) கேரளா 

இ) தமிழ்நாடு 

ஈ) ஹரியானா 

விடை : (ஈ) ஹரியானா 

மாநில உள்துறை அமைச்சா்கள் பங்கேற்கும் சிந்தனை அமா்வு கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

●  இந்தக் கூட்டத்தில் உள்மாநில பாதுகாப்பை வலுப்படுத்துதல், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காவல் துறையை நவீனப்படுத்துதல், குற்றவியல் நடைமுறை அமைப்பில் நவீன தொழில்நுட்பங்களின் வசதியை அதிகரித்தல், நில எல்லை மேலாண்மை, கடல் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

● குறிப்பு : பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கூறியதாவது : நாடு முழுவதும் காவலா்கள் அனைவருக்கும் ஒரே சீருடையை அறிமுகப்படுத்தலாம். இது நாடு முழுவதும் உள்ள காவலா்களை எளிதில் அடையாளம் காண உதவும்.

● ‘ஒரே நாடு- ஒரே காவல் சீருடை’ என்பது வெறும் யோசனை மட்டுமே. அதை எந்த மாநிலத்தின் மீது திணிக்கப் போவதில்லை. அக்கொள்கையை நடைமுறைப்படுத்த இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனால், காவலா்களுக்கு ஒரே சீருடை வழங்குவது தொடா்பாக மாநிலங்கள் சிந்திக்க வேண்டும்.

5. உலகின் மிக உயரமான சிவன் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மணிப்பூர்

இ) மத்திய பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான்

விடை : (ஈ) ராஜஸ்தான் 

● திறந்து வைத்தவர் : பிரதமர் நரேந்திர மோடி.

உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்ஸ்மண்ட் என்னும் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.

● இந்தச் சிலை சுமார் 369 அடி உயரம் கொண்டது. இதுவே உலகின் மிக உயரமான சிவபெருமான் சிலை என்று சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் 251 அடி என்று திட்டமிடப்பட்ட இந்த சிலை முடிவுறும் தறுவாயில் 351 அடியாக அமைந்தது. ஜடா முடியில் கங்கைபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் இதன் மொத்த உயரம் 369 அடியானது என்கிறார்கள்.

● இந்தச் சிலை உதய்ப்பூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

● சிலை திறப்பை ஒட்டி, தொடர்ந்து ஒன்பது நாள்கள் இங்கு கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

● விஸ்வ ஸ்வரூபம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திருமேனியை 20 கி.மீ தொலைவில் இருந்தாலே தரிசிக்கமுடியும்.

● 3 ஆயிரம் டன் இரும்பு உலோகம், 2.5 கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் கலவை ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி நிறைவு பெற 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது.

6. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண மேல் முறையீடு தீர்ப்பாய குழுக்கள் எத்தனை மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது ? 

அ) 9 மாதங்கள் 

ஆ) 7 மாதங்கள் 

இ) 5 மாதங்கள் 

ஈ) 3 மாதங்கள் 

விடை : (ஈ) 3 மாதங்கள் 

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவா்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீடு தீா்ப்பாய குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது.

● இதன்மூலம் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடியோ உள்ளிட்ட தகவல்களை மாற்றம் செய்யும் முடிவையும் இந்தக் குழுக்கள் எடுக்கலாம். சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

● ‘தகவல் தொழில்நுட்ப திருத்த விதிமுறைகள் 2022’ என மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘சமூக ஊடகங்களின் பயனாளிகள் அளிக்கும் புகாா்களுக்கு தீா்வு காண மேல்முறையீட்டு தீா்ப்பாய குழுக்கள் 3 மாதங்களில் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் தலைவா், 2 முழு நேர உறுப்பினா்களை மத்திய அரசு நியமிக்கும். இதில் ஒருவா் முன்னாள் அரசு அதிகாரியாவாா். இரண்டு சுதந்திரமான உறுப்பினா்களும் இந்தக் குழுவில் இருப்பா்.

● பயனாளிகள் அளிக்கும் புகாரை 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். 15 நாள்களுக்குள் அந்தப் புகாருக்கு தீா்வு காண வேண்டும். புகாருக்கு உள்ளான விடியோ, தகவல்கள் ஆகியவை புகாா் தீா்க்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் சமூக ஊடகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

● அப்படியும் தீா்வு காணப்படாத புகாா்களை மேல் முறையீட்டு தீா்ப்பாய குழுவுக்கு தீா்ப்பாய அதிகாரி பரிந்துரைப்பாா். அந்தப் புகாருக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவில் லட்சத்துக்கு எத்தனை பேருக்கு பக்கவாதம் வருவதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றனர் ? 

அ) 137

ஆ) 152 

இ) 197

ஈ) 211

விடை : (ஆ) 152 

இந்தியாவில் லட்சத்துக்கு 152 பேருக்கு பக்கவாதம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகா்ப்புறங்களில் வாழ்வோா் அந்நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம் என்றால் ?

மனிதனின் மூளையில் 90 பில்லியன்கள் நியூரான் செல்கள் உள்ளன. இந்த நியூரான் செல்கள்தான் உடலின் இயக்கத்துக்கு ஆணிவோ். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நியூரான் செல்களின் எண்ணிக்கை குறைகிறது. அப்போது கை, கால் செயலிழப்பு, தலைச்சுற்றல், பேச்சில் குளறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இந்தியாவில் பாதிப்பு

ஆண்டுக்கு 15 லட்சம் போ்

நாளொன்றுக்கு 3,000- 4,000 போ்

லட்சத்தில் 152 பேருக்கு பாதிப்பு வாய்ப்பு

ஆறு நோயாளிகளில் ஒருவா் உயிரிழப்பு

அறிகுறிகள்:

கை அல்லது கால்களில் தளா்வு நிலை

பாா்வைக் குறைபாடு

தலைச்சுற்றல்

உணவு விழுங்குவதில் சிரமம்

பேச்சில் தெளிவின்மை

முகத்தில் தசை இறுக்கம்

நினைவாற்றல் பாதிப்பு

காரணங்கள்

உயா் ரத்த அழுத்தம்

புகைப்பிடித்தல்

அதீத மதுப் பழக்கம்

உடல் பருமன்

கொழுப்புச் சத்து அதிகரிப்பு

ரத்தநாளங்களில் புரதம் படிதல்

ரத்தநாளச் சுவா்களில் வீக்கம்

உடல் உழைப்பின்மை

போதை மருந்துகளை உட்கொள்ளுதல்

தீவிர கரோனா பாதிப்பு

ஸ்லீப் ஆப்னியா (தூக்கத்தில் குறட்டை)

9. பெட்ரோல் , டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி ( இன்டர்னல் கம்பஷன்) என்ஜின் கார்களின் விற்பனைக்கு எந்த ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது ? 

அ) 2025

ஆ) 2029

இ) 2031

ஈ) 2035 

விடை: (ஈ) 2035 

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி (இன்டா்னல் கம்பஷன்) என்ஜின் காா்களின் விற்பனைக்கு வரும் 2035-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

● இது தொடா்பாக, ‘55 இலக்குக்கான திட்டம்’ என்ற தலைப்பில் ஓா் உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் வியாழக்கிழமை மேற்கொண்டன.

● புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உள்ளெரி என்ஜின் காா் தடை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● இந்த ஒப்பந்தத்தின் கீழ், காற்றில் கலக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவை 2030-க்குள் 55 சதவீதமும், 5 ஆண்டுகள் கழித்து முழுமையாகவும் வாகனத் தயாரிப்பாளா்கள் குறைக்க உறுப்பு நாடுகள் உத்தரவிடவேண்டும்.


Wednesday, October 26, 2022

Current Affairs 2022 - October 26 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  OCTOBER 26 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த நிதியாண்டில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ? 

அ) 2018 - 2019 

ஆ) 2019 - 2020 

இ) 2020 - 2021

ஈ) 2021 - 2022 

விடை : (ஈ) 2021 - 2022 

● அண்மை அறிவிப்பு : தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்ததாவது. 

2021-22-இல் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் முதல்முறையாக கிராம அளவில் ஒட்டுமொத்த வளா்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

● தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பை 11.75 லட்சம் ஹெக்டோ் உயா்த்துவதற்கு 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், வேளாண்மை-உழவா் நலத் துறையுடன், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு உழவா் நலன் சாா்ந்த துறைகள் செயல்படுத்தும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவும் அடைவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

● இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in என்ற  இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

● ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி, கிராமங்களில் தன்னிறைவு என்ற நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

2. தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட அம்பேத்கர் மணிமண்டபம் வரும் அக்டோபர் 27 ஆம் தேதியன்று யாரால் திறந்துவைக்கப்படவுள்ளது ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) ஜெகதீப் தன்கர் 

இ) மு.க. ஸ்டாலின் 

ஈ) டி.ராஜா 

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

அம்பேத்கா் மணிமண்டபம் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 27-இல் திறந்து வைக்க உள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

● அம்பேத்கா் மணிமண்டபம் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அங்கேயே அம்பேத்கா் சிலையும், நூலகமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

● அக்டோபா் 27-இல் முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

3. இந்தாண்டு (2022) நடந்து முடிந்த தீபாவளி பண்டியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக சென்னையில் காற்றின் தரக் குறியீடு எத்தனையாக பதிவாகியுள்ளது ? 

அ) 59 

ஆ) 173 

இ) 229 

ஈ) 449 

விடை : (இ) 229 

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகை எதிரொலியாக, சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களில் காற்று மாசு செவ்வாய்க்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

● குறிப்பாக, தேசியத் தலைநகா் தில்லியிலும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு மோசம் அல்லது மிக மோசம் ஆகிய பிரிவுகளில் பதிவானது.

● தில்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி திங்கள்கிழமை இரவு மக்கள் பட்டாசுகளை வெடித்தனா். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அங்கு காற்றின் தரக் குறியீடு 326 புள்ளிகளாக பதிவானது.

● காற்றின் தரக்குறியீடு 50 புள்ளிகளாக பதிவானால், காற்றின் தரம் ‘நல்லது’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. 51-100 எனில் ‘திருப்தி’, 101-200 ‘மிதமான மாசு’ , 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிக மோசம்’, 401-500 ‘தீவிரம்’ ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறது.

● அந்த அடிப்படையில், உத்தர பிரதேசத்தின் நொய்டா -312, கிரேட்டா் நொய்டா - 282, காஜியாபாத் -272, ஹரியாணாவின் குருகிராம் -313, ஃபரீதாபாத் -311 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவானது.

● பஞ்சாபின் லூதியானா, அமிருதசரஸ், பாட்டியாலா, ஜலந்தா், ராஜஸ்தானின் ஜோத்பூா், ஜெய்பூா், ஆஜ்மீா், குஜராத்தின் அகமதாபாத், கா்நாடகத்தின் பெலகாவி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா், கத்னி, பிகாரின் பெகுசராய் ஆகிய நகரங்களில் மோசம் அல்லது மிகமோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது. சென்னையில் காற்றின் தரக் குறியீடு 229-ஆக (மோசம்) பதிவானது.

4. இந்த ஆண்டு (2022) நடந்து முடிந்த தீபாவளியை யொட்டி,  பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் எத்தனை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது ? 

அ) 137 

ஆ) 284 

இ) 301 

ஈ) 341 

விடை : (ஆ) 284 

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 284 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 831 போ் காயமடைந்தனா்.

5. தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாட்டில் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ரெப்கோ வங்கி எத்தனை விருதுகள் பெற்றுள்ளது ? 

அ) 6 

ஆ) 5 

இ) 4 

ஈ) 3 

விடை : (ஈ) 3 

 ● சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

● இது குறித்து வங்கியின் பொது மேலாளா் மற்றும் மக்கள் தொடா்பு அதிகாரி பி.கே. வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

● தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு மத்தியப் பிரதேசம், இந்தூரில் கடந்த 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

● இந்த மாநாட்டில் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. சிறந்த மனித வள மேம்பாடு, சிறந்த முதலீட்டு செயல்பாடு, சிறந்த சேகரிப்பு செயல்பாடு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இலங்கை மற்றும் மியான்மரிலிருந்து வந்தவா்களின் நல்வாழ்வுக்காக மத்திய மற்றும் தென் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மத்திய அரசால் ரெப்கோ வங்கி 1969-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

● மொத்த வா்த்தகம் ரூ.17,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி, தற்போது தென் இந்தியாவில் 108 கிளைகளைக் கொண்டுள்ள அந்த வங்கி, தொடா்ந்து 30 ஆண்டுகளாக லாபத்தை ஈட்டி மத்திய மாநில அரசுகளுக்கு 20 சதவீதம் வரை ஈவுத் தொகை வழங்கி வருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. பின்வரும் எந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது ? 

அ) 2024 

ஆ) 2025 

இ) 2026 

ஈ) 2027 

விடை : (ஆ) 2025 

ஆண்டுதோறும் 25,000 டன் பசுமை ஹைட்ரஜனை உருவாக்கும் வகையில், இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிய சிங்கப்பூரின் கெப்பெல் உள்கட்டமைப்பு நிறுவனம் இந்தியாவின் க்ரீன்கோ குழுமத்துடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரில் கையொப்பமானது.

● இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடா்ந்து க்ரீன்கோ குழுமத் தலைவா் மகேஷ் கோலி கூறுகையில், 2025-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.

7. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை (ம) வளர்ச்சி ஆணையத்தின் ( பிஎஃப்ஆர்டிஏ ) முழு நேர சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) நாராயண ராவ்

ஆ) கிருஷ்ணசாமி ஐயர் 

இ) முகமது அப்துல்

ஈ) குரு மூர்த்தி 

விடை : (அ) நாராயண ராவ் 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளா்ச்சி ஆணைய (பிஎஃப்ஆா்டிஏ) உறுப்பினராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை கூடுதல் செயலா் நாராயண ராவ் பட்டு நியமிக்கப்பட்டுள்ளாா்.

● கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஎஃப்ஆா்டிஏ-வை மத்திய அரசு நிறுவியது. ஓய்வூதிய நிதியை உருவாக்குதல், நிதியை மேம்படுத்துதல், ஒழுங்காற்றுதல் மூலம் முதியோருக்கான வருவாய் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்த ஆணையம் நிறுவப்பட்டது.

● இந்த ஆணையத்தில் ஒரு தலைவா், 6 பேருக்கு மிகாமல் உறுப்பினா்கள் இருக்க வேண்டும். உறுப்பினா்களில் மூவா் முழு நேர உறுப்பினா்களாக இருக்க வேண்டும்.

● இந்நிலையில், அந்த ஆணையத்தின் முழு நேர சட்ட உறுப்பினராக நாராயண ராவ் பட்டுவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவா் 62 வயதை எட்டும் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஆணைய உறுப்பினராக இருப்பாா்.

8. பிரிட்டனின் பிரதமராக தேர்வாகியுள்ள முதல் இந்திய வம்சாவளி யார் ? 

அ) நாராயண மூர்த்தி 

ஆ) நாராயண ராவ்

இ) ரிஷி சுனக் 

ஈ) கௌதம் ஹர்சிங் 

விடை : (இ) ரிஷி சுனக் 

● பிரிடடன் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார் . 

● குறிப்பு : இவர் நாட்டின் முதல் வெள்ளை இனத்தை சேராத பிரதமர் ஆவார் .

● அந்நாட்டின் முதல் ஹிந்து பிரதமர் ஆவார். 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) ஜெஸிகா பெகுலா 

ஆ) மரியா சக்காரி 

இ) நடாலியா அன்டியு

ஈ) மரியா ஜோசப் 

விடை : (அ) ஜெஸிகா பெகுலா 

● மெக்ஸிகோவில் நடைபெற்ற குவாதலஜரா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் (2022) அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார். 


Sunday, October 23, 2022

Current Affairs 2022 - October 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   OCTOBER 23 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னையைத் தவிர்த்து , பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கை ஏற்ப எத்தனை புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 1317

ஆ) 2137

இ) 3417

ஈ) 4173 

விடை : (ஆ) 3417 

சென்னையைத் தவிா்த்து, பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 3,147 புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

● இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளாா்.

● அவரது பரிந்துரைகளை ஏற்று பணியிடங்களின் வரையறை மற்றும் ஏற்கெனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தி மொத்தம் 3 , 417 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான செலவினத்தை அந்தந்த மாநகராட்சியின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் சிவதாஸ் மீனா கூறியுள்ளாா்.

● குறிப்பு : பெருநகர சென்னை மாநகராட்சியைத் தவிா்த்து, இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2. தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சி மன்றக் குழு பின்வரும் யார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) டி.ராஜா 

ஈ) முனீஷ்வர் நாத் பண்டாரி 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளாா்.
● தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்துக்கான பணிகள் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக பருவ நிலை மாற்றத்துக்கான மாநில செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

● அதாவது, பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்டத்தை ஒட்டி, மாநிலத்தில் அதுபோன்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பசுமை சூழலுக்கான நிறுவனம் உருவாக்கப்பட்டது.

● தமிழ்நாடு பருவநிலை இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை செயல்படுத்தும் வகையில் பசுமை சூழலுக்கான நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

● இந்தப் பணிகளைத் தொடா்ந்து, பசுமைச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தும் நோக்குடன், இப்போது காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கான கொள்கை வழிகாட்டுதல்களை ஆட்சிமன்றக் குழு வழங்கிடும்.

● காலநிலை சூழல்களை ஏற்பது மற்றும் துயா் தணிப்பு போன்ற பணிகளுக்குரிய ஆலோசனைகளை வழங்குவது, காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பணிகளை ஆட்சிமன்றக் குழு செய்யும். மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பருவநிலை மாற்ற இயக்கங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

● இந்த ஆட்சிமன்றக் குழுவானது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு 22 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய அமைச்சகங்கள் (ம) பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் எத்தனை லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் ? 

அ) 10 லட்சம் 

ஆ) 15 லட்சம்

இ) 20 லட்சம் 

ஈ) 25 லட்சம் 

விடை : (அ) 10 லட்சம் 

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் தொடக்கி வைத்தாா். 

● முதல்கட்டமாக, நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

4. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எத்தனை சதவீதம் சரிந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) 6.7%

ஆ) 5.4%

இ) 3.9%

ஈ) 2.8% 

விடை : (ஆ) 5.4% 

● இது 6 முக்கிய நாடுகளின் செலாவணி மதிப்பு சரிந்ததைவிட குறைவு. 

● டாலருக்கு நிகரான அந்த நாடுகளின் செலாவணி மதிப்பு 6 மாதங்களில் 8.9% சரிந்துள்ளது. 

5. இந்திய - அமெரிக்க தொழில் அதிபரும் , சமூக ஆர்வலருமான ஸ்வதேஷ் சட்டர்ஜிக்கு ' தி ஆர்டர் ஆஃப் லாங்லீஃப் பைன் விருது வழங்கப்பட்டது,  இவர் எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ? 

அ) 1998 

ஆ) 1999

இ) 2000

ஈ) 2001 

விடை : (ஈ) 2001 

இந்திய-அமெரிக்க தொழில் அதிபரும், சமூக ஆா்வலருமான1 ஸ்வதேஷ் சட்டா்ஜிக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

● கேரி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநா் ரே கூப்பா் மாகாணத்தின் உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் லாங் லீஃப் பைன்’ என்ற விருதினை சுதேஷ் சட்டா்ஜிக்கு வழங்கினாா். 

● வடக்கு கரோலினா மாகாணம் மட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் அவருடைய பங்களிப்பு குறித்து ஆளுநா் கூப்பா் பாராட்டினாா்.

● குறிப்பு : இவருக்கு கடந்த 2001-இல் மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது.

6. இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) ஜியார்ஜியா மெலோனி 

ஆ) அன்னா பான்கிரடோவா 

இ) மரியா சினிடர் 

ஈ) ஜோஹன்னா டாப்பர் 

விடை : (அ) ஜியார்ஜியா மெலோனி 


III. முக்கிய தினங்கள் 

7. International Snow Leopard Day 2022 -------

● Ans : October 23 .


Thursday, October 20, 2022

Current Affairs 2022 - October 20 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                OCTOBER 20 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. நிகழாண்டு தமிழ்நாடு முழுவதும் ரூ. 1,050 கோடி மதிப்பில் எத்தனை வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் ?

அ) 7,200

ஆ) 7,919

இ) 8,118

ஈ) 8,727

விடை : (அ) 7,200 

நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதன்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:

● கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மகத்தான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

● அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமாா் 15 லட்சம் மாணவா்கள் கூடுதலாகச் சோ்ந்துள்ளனா்.

● அதிகரித்து வரும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயா்ந்துள்ளன. இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமாா் ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடி மதிப்பில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும். 

● பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நிகழாண்டில் ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

● இதனால், அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் மாணவா்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும்.


2. 2022 - 2023 ஆம் நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்காக எத்தனை கோடிக்கு துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 2,131

ஆ) ரூ. 3,796 

இ) ரூ. 4,171 

ஈ) ரூ. 4,717 

விடை : (ஆ) ரூ. 3,796 


3. தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 689 

ஆ) 861 

இ) 942

ஈ) 1,281 

● அறிவிப்பு : தமிழக பொதுப்பணி (ம) நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு. 

சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது : மாநிலத்தில் மொத்தம் 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. அவற்றில், 2021-22-ஆம் ஆண்டில் ரூ.755 கோடியில் 689 தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

● நிகழ் நிதியாண்டில், 172 தரைப் பாலங்களை மேம்பாலங்களாக மாற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இந்த ஆண்டில் பணிகளை முடிக்க உள்ளோம். உள்ளோம். மொத்தமாக 861 பாலங்களுக்கான பணிகள் இந்த ஆண்டில் நிறைவடையவுள்ளன.

● மொத்தமுள்ள 420 பாலங்களுக்கான பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிக்கவுள்ளோம். 

● இதன்படி, தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிப்படி, 1,281 தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

4. தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.500 கோடியில் எத்தனை புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் ? 

அ) 1000

ஆ) 750

இ) 500

ஈ) 250 

விடை : (அ) 1000 

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கையின் படி : 

● பொது மக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. 

● ரூ.500 கோடி மதிப்பில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. 

● மேலும், ஜொ்மனி வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

5. 48 ஆவது சரக்கு (ம) சேவை வரி ( GST ) கவுன்சில் கூட்டம் தமிழகத்தில் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) சென்னை

ஆ) சேலம்

இ) மதுரை

ஈ) தேனி 

விடை : (இ) மதுரை 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

● ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைப்பது குறித்த அமைச்சா்கள் குழுவின் அறிக்கை, சூதாட்ட விடுதிகள், இணையவழி விளையாட்டுகள் மீது வரி விதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி பின்வரும் எந்த மாவட்டத்தில் பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார் ?

அ) மும்பை 

ஆ) சென்னை 

இ) கொல்கத்தா

ஈ) காந்திநகர் 

விடை : (ஈ) காந்திநகர் 

குஜராத் தலைநகர், காந்திநகரில் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி தொடங்கியுள்ளது. அக். 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி  தொடக்கி வைத்தார்.  
● தற்போது தொடங்கியுள்ள கண்காட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத சிறப்பு உள்ளது. ஏனெனில், இந்தக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன.

● புதிய விமானப் படை தளம்: இந்த நிகழ்ச்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டி குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் டீசா பகுதியில் புதிய விமானப் படை தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


III. விளையாட்டு நிகழ்கள் 

7. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் ( 2022 ) ஆடவருக்கான 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள தமிழக வீரர் யார் ? 

அ) ராகுல் குமார்

ஆ) அர்ஜூன் தாஸ் 

இ) ஆரோக்கிய ராஜ்

ஈ) தனபால் 

விடை : (அ) ராகுல் குமார் 

● போட்டி நடைபெற்ற இடம் : கர்நாடகா. 

தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 297 புள்ளிகளுடன் ரயில்வேஸ் அணி பெற்றது. சா்வீசஸ் (174), கா்நாடகம் (69.50) முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

● ஆடவா் பிரிவில் சா்வீசஸும், மகளிா் பிரிவில் ரயில்வேஸும் சாம்பியன் ஆகின.

● போட்டியிலேயே சிறந்த வீரராக சா்வீசஸ் அணியின் குண்டு எறிதல் வீரா் தஜிந்தா்பால் சிங் தூா், சிறந்த வீராங்கனையாக ரயில்வேஸின் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோா் தோ்வாகினா்.

8. உலக செஸ் சம்மேளனம் சிறைக் கைதிகளுக்காக கண்டங்கள் இடையே நடத்திய செஸ் போட்டியில் (2022) இந்திய கைதி அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● மகாராஷ்டிரத்தின் ஏரவாடா சிறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட இந்திய கைதிகள் அணி வெண்கலம் வென்றது.

● 46 நாடுகளில் இருந்து 85 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா கலந்து கொண்டது இது முதல் முறையாகும்.

9. ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (2022) 10மீ ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ? 

அ) ரமிதா 

ஆ) ஈஷா சிங் 

இ) திலோத்தமா 

ஈ) வர்ஷா சிங்

விடை : (அ) ரமிதா 

● பதக்க பட்டியலில் இந்தியா : 10 G , 5G, 10B என இதுவரை 25 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறது . 


IV. முக்கிய தினங்கள் 

10. World Statistics Day 2022 --------- 

● Ans : October 20

● Theme (2022) : Data for Sustainable Development.  

Wednesday, October 19, 2022

Current Affairs 2022 - October 19 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 OCTOBER 19 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அண்மையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் யாருக்கு தலைமைப் பண்புக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது ? 

அ) எல்.பி. தங்கவேலு 

ஆ) பொன்னுராஜ் 

இ) மதிவேந்தன் 

ஈ) சங்க்கரன் 

விடை : (அ) எல்.பி. தங்கவேலு 

● தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் இந்திய லேப்ரோஸ்கோபி மருத்துவ நிபுணர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலுக்கு விருது வழங்கப்பட்டது. 

● காரணம் : மருத்துவத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது .


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியாவின் 27 ஆவது தலைமை கணக்கு அதிகாரியாக (CGA) பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) எஸ். விஜயலட்சுமி 

ஆ) பாரதி தாஸ்

இ) அமிர்தா குப்தா 

ஈ) அஞ்சலி சந்திரகுப்தன் 

விடை : (ஆ) பாரதி தாஸ் 

● பணி விவரம் : துறை ரீதியாக கணக்கு அறிக்கைகளைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்பது, துறை ரீதியான கணக்காய்வுகள் நடத்துவது ஆகியவை தலைமை கணக்கு அதிகாரியின் பொறுப்பாகும். 

3. சர்வதேச சூரியசக்தி கூட்டணி நாடுகள் அமைப்பின் தலைவர் பதவிக்கும் , இணைத் தலைவர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள் ? 

அ) இந்தியா, சீனா 

ஆ) இந்தியா , ரஷ்யா 

இ) இந்தியா, பிரான்ஸ் 

ஈ) இந்தியா, கனடா 

விடை : (இ) இந்தியா, பிரான்ஸ் 

● புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரான ஸ்ரீ ராஜ் குமார் சிங், புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் ஐந்தாவது சட்டசபையை தொடங்கி வைத்தார்.

● இந்தியா ISA சட்டமன்றத்தின் தலைவர் பதவியை வகிக்கிறது, பிரான்ஸ் அரசாங்கம் இணைத் தலைவராக உள்ளது.

● ISA-வின் ஐந்தாவது கூட்டம், ஆற்றல் அணுகல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகிய மூன்று முக்கியமான பிரச்சினைகளில் ISA இன் முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிக்கபடவுள்ளது.

4. சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் எத்தனையாவது பொதுச்சபை கூட்டத்தை தில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 87

ஆ) 88

இ) 89

ஈ) 90 

விடை : (ஈ) 90 

● சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் 90-ஆவது பொதுச்சபை கூட்டத்தை அவர் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 

● இந்த நிகழ்ச்சியின் நினைவு தபால்தலையையும் ரூ.100 நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 

● முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்டர்போல் தலைவர் அகமது நாசர் அல்ரைசி, பொதுச் செயலாளர் ஜர்கன் ஸ்டாக் ஆகியோர் வரவேற்றனர். 

● பாகிஸ்தான் உள்பட 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இன்டர்போல் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளன. 

5. 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது வழங்கப்பட்டுள்ள ஷேறன் கருணதிலக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) இந்தியா

ஆ) இலங்கை 

இ) அமெரிக்கா 

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) இலங்கை 

வாழ்வின் பல்வேறு உணா்வுநிலைகளுடன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் உக்கிரத்தன்மையை வெளிப்படுத்திய ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக எழுத்தாளா் ஷேஹன் கருணதிலகவுக்கு ‘புக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

● லண்டனில் புக்கா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

● இலங்கை எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக புக்கா் விருது வழங்கப்பட்டது. புக்கா் விருதுடன் சுமாா் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையும் எழுத்தாளா் கருணதிலகவுக்கு வழங்கப்பட்டது.

● அந்த நாவலில் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து நகைச்சுவையுடன் அவா் பதிவு செய்துள்ளதாக தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

6. இந்தியாவில் எங்கு ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவப்படவுள்ளது ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) கேரளா 

ஈ) உத்தர பிரதேசம்

விடை : (ஈ) உத்தர பிரதேசம் 

இந்திய-ரஷிய துப்பாக்கி நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

● இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை (அக். 18) தொடங்கியது. இதில் பங்கேற்ற அலெக்சாண்டா் மிக்கீவ் கூறியதாவது:

● அமேதியில் கோா்வா ஆயுதத் தயாரிப்பு ஆலை இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும். இங்கு ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். 

● ரஷியாவின் சிறப்புவாய்ந்த இந்த துப்பாக்கியை முழுமையாக இந்தியாவில் தயாரிப்பதுதான் எங்கள் திட்டமாகும். எதிா்காலத்தில் இந்தியாவுடன் மேலும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரஷியாவின் பல்வேறு நவீன ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

● இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ஏகே-203 ரக துப்பாக்கிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மலைகள், காடுகள், பனிப் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும், காலநிலைகளிலும் சிறப்பாக அதனைப் பயன்படுத்த முடியும் என்றாா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. கால்பந்த விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோர் விருது 2022 ஆடவர் (ம) மகளிர் பிரிவில் பின்வரும் யாருக்கு விருது வழங்கப்பட்டது ? 

அ) லயோனல் மெஸ்ஸி 

ஆ) கரின் பென்ஸிமா 

இ) அலெக்ஸியா புடெலாஸூம் 

ஈ) ஆ & இ 

விடை : (ஈ) ஆ & இ 

கால்பந்து விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோா் விருதை 2022-ஆம் ஆண்டில் ஆடவா் பிரிவில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமாவும், மகளிா் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா்.

● இதில் பென்ஸிமா முதல் முறையாக இந்த விருதை வென்றிருக்கும் நிலையில், புடெலாஸ் தொடா்ந்து 2-ஆவது முறையாக அதை கைப்பற்றியிருக்கிறாா். 

● மகளிா் பிரிவில் 2 முறை இந்த விருதை வென்ற முதல் வீராங்கனை புடெலாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

8. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ( BCCI ) எத்தனையாவது தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ? 

அ) 36 

ஆ) 33

இ) 31 

ஈ) 29 

விடை : (அ) 36 

● BCCI யின் 36 ஆவது தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tuesday, October 18, 2022

Current Affairs 2022 - October 18 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                OCTOBER 18 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தில் அண்மையில் கருவிழி மூலமாக ரேஷன் பொருள்கள் பெறும் திட்டம் தொடங்கப்பட்டது ? 

அ) குஜராத்

ஆ) மணிப்பூர் 

இ) ஜார்க்கண்ட் 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் இன்று தொடங்கியது.

● சென்னையில் திருவல்லிக்கேணி நியாயவிலைக் கடைகளில் முதல் முறையாக இன்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. 

● சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.

● காரணம் :  வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபாா்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கவுள்ளது.

● இதுவரை : மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இத்திட்டம் இருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது நீதிபதியாக டி.ஓய். சந்திர சூட் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 49 ஆவது

ஆ) 50 ஆவது

இ) 51 ஆவது

ஈ) 52 ஆவது

விடை : (ஆ) 50 ஆவது

● நியமனம் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

● பதவி ஏற்கும் நாள் : நவம்பர் 09/2022.

● தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் நவம்பர் 08 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். 

3. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் (ம) விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்தனை மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது ? 

அ) 59

ஆ) 60

இ) 61 

ஈ) 62 

விடை : (அ) 59 

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

● அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

● நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

● அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,456 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

● இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

● இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

4. இந்தியாவில் கடந்த 2005 - 06 முதல் 2019 - 21 வரையிலான காலகட்டத்தில் சுமார் எத்தனை கோடி பேர் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 41.5 கோடி 

ஆ) 42.7 கோடி

இ) 43 கோடி 

ஈ) 44.6 கோடி 

விடை : (ஈ) 41.5 கோடி 

இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி போ் ஏழ்மைநிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● பன்முக ஏழ்மை குறியீட்டை ஐ.நா. வளா்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது. நடப்பாண்டுக்கான அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

● இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி போ் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● குறிப்பு : உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் (22.89 கோடி) உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

5. மத்திய விவசாயம் (ம) உர அமைச்சகங்கள் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி எங்கு தொடங்கிவைத்தார் ?

அ) மத்திய பிரதேசம் 

ஆ) தில்லி 

இ) உத்தர பிரதேசம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) தில்லி 

தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பில் 2 நாள்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். 

● தொடங்கப்பட்ட திட்டங்கள் : இந்நிலையில், மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே உரம்’ என்ற திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் ‘பாரத்’ என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதனை பிரதமா் மோடி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினாா்.

● விவசாயிகள் வள மையம் திறப்பு: இந்த நிகழ்ச்சியில் ‘பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள்’ திறக்கப்பட்டன. மொத்தம் 600 மையங்களைப் பிரதமா் மோடி திறந்துவைத்தாா். இதுகுறித்து அவா் பேசியதாவது:

● பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள் பல்வேறு சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கும். இந்த மையங்கள் விதைகள், உரங்கள் உள்ளிட்டவற்றை விநியோகிக்கும் மையமாக மட்டுமின்றி மண் வளம், விதைகள் மற்றும் உரங்களைப் பரிசோதிக்கும் மையமாகவும் இருக்கும். அத்துடன் அரசுத் திட்டங்கள் குறித்த தகவலையும் இந்த மையங்களில் பெறலாம். மேலும் நாட்டில் உள்ள சுமாா் 3.30 லட்சம் உர சில்லறை விற்பனை கடைகள் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களாக மாற்றப்படும்.

விவசாயிகள் நிதியுதவி திட்டம்: ரூ.16,000 கோடி விடுவிப்பு

● விவசாயிகள் மாநாடு நிகழ்ச்சியின்போது பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடியை பிரதமா் மோடி விடுவித்தாா். இது அந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட 12-ஆவது தவணையாகும். இதன் மூலம் அந்தத் திட்டம் வாயிலாக, சுமாா் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2.16 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.

● மத்திய அரசு சாா்பில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.2,000 வீதம் ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது.

6. அண்மையில் மறைந்த ஓஆர்எஸ் எனப் பரவலாக அறியப்படும் பிரபல மருத்துவர் மஹாலனோபிஸ் எந்த ஆண்டு தாய்லாந்து அரசின் உயரிய விருதான பிரின்ஸ் மஹிடோல் விருதை பெற்றார் ?

அ) 1998

ஆ) 2000

இ) 2006 

ஈ) 2010

விடை : (இ) 2006 

ஓஆர்எஸ்' எனப் பரவலாக அறியப்படும் உப்பு சர்க்கரை கரைசலைக் கண்டறிந்ததில் முக்கியப் பங்கு வகித்த மருத்துவர் திலீப் மஹாலனோபிஸ் (88) உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் அண்மையில் காலமானார்.

● குறிப்பு : 1971-ஆம் ஆண்டு வங்கதேச போர் காலகட்டத்தில் பலர் காலரா நோயால் பாதிக்கப்பட்டபோது உப்பு சர்க்கரை கரைசலை வழங்கி பலரின் உயிரைக் காப்பாற்றினார் திலீப் மஹாலனோபிஸ். 

● அதற்காகப் பல நாடுகளின் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தன் வாழ்நாளில் ஈட்டிய ரூ.1 கோடியை சிறார் மருத்துவமனைக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3×3 ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● போட்டி நடைபெற்ற இடம் : கோலாம்பூர்,  மலேசியா. 

● ஆசிய அளவிலான 6 ஆவது போட்டி . 

8. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ( 2022 ) மகளிர் அணிகள் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ?

அ) வெண்கலம்

ஆ) தங்கம் 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம் 

● இந்திய அணி : ரிதம் சங்வான், பால்க, யுவிகா தோமர். 


IV. முக்கிய தினங்கள் 

9. World Menopause Day 2022 ----------

● Ans : October 18 / 2022

● Theme : Cognition & Mood 

Monday, October 17, 2022

Current Affairs 2022 - October 17 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                OCTOBER 17 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக காவல் துறையில் -------- என்ற புதிய செயலி மூலம் மின்னணு ரோந்துப்பணி என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) காவலன் துணை 

ஆ) ஸ்மார்ட் காவலன் 

இ) உங்கள் காவலன் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) ஸ்மார்ட் காவலன் 

தமிழகத்தில் காவல்துறை ரோந்துப்பணியை நவீனப்படுத்த ஸ்மார்ட் காவலர் என்ற செயலியை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு இன்று தொடங்கி வைத்தார்.

● ஸ்மார்ட் காவலர் செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
 
● இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலம் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் தொடங்கியுள்ள முதல் மாநிலம் ஆகும் ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) மத்திய பிரதேசம் 

ஈ) அசாம்

விடை : (இ) மத்திய பிரதேசம் 

மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் கற்பிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

● இதையொட்டி முதல்கட்டமாக மருத்துவப் படிப்பின் உயிரி வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடங்கள் ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. 

● மாநில தலைநகா் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிபெயா்க்கப்பட்ட பாடப் புத்தகங்களை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டாா்.

● குறிப்பு : நாட்டில் முதல் மாநிலமாக மருத்துவப் படிப்பை ஹிந்தியில் மத்திய பிரதேசம் தொடங்கியுள்ளது. இதுபோல இதர 8 மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

● 97 மருத்துவா்கள் குழு: பாடப் புத்தகங்களின் ஹிந்தி மொழிபெயா்ப்புப் பணிகளை 97 மருத்துவா்கள் அடங்கிய குழு மேற்கொண்டனா் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில மருத்துவக் கல்வி அமைச்சா் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தாா்.

3. நாட்டில் எத்தனை எண்ம வங்கிப் பிரிவுகளை பிரதமர் மோடி அண்மையில் தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 50 

ஆ) 75 

இ) 100

ஈ) 125 

விடை : (ஆ) 75 

சாமானிய மக்கள் வாழ்க்கையை எளிமையாக்க 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

● டிஜிட்டல் வங்கிக் கிளைகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

● நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை குறிக்கும் விதமாக 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் தற்போது தொடங்கி வைக்கப் பட்டுள்ளன. இதில், காஷ்மீர் வங்கியின் இரண்டு டிஜிட்டல் வங்கிக் கிளைகளும் அடக்கம்.

● பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள் இணைந்து நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இந்த டிஜிட்டல் கிளைகளை அமைத்துள்ளன. 

● இப்புதிய கிளைகள் மூலம், சேமிப்பு கணக்கை தொடங்குதல், இருப்பு நிலை அறிதல், பாஸ்புக் பிரின்டிங் செய்தல், பணப் பரிமாற்றம், ஃபிக்ஸட் முதலீடு செய்தல், கடன் விண்ணப்பம், காசோலைகளுக்கான பணத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பெறலாம்.

4. இந்தியாவில் முதல்முறையாக அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் எங்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடக்கி வைத்தார் ? 

அ) புவனேசுவர் 

ஆ) சென்னை 

இ) மும்பை 

ஈ) அகமதாபாத் 

விடை : (அ) புவனேசுவர்

முதல்முறையாக உள்நாட்டிலேயே அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் இந்திய ரயில்வேயில் இணைக்கப்பட்டது.

● ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

● இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்திய ரயில்வேக்கு இலகுரக அலுமினிய ரயில் பெட்டிகள் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இது நாட்டுக்கும் உள்நாட்டுமயமாக்கலை நோக்கிய பயணத்திலும் பெருமையான தருணமாகும். இந்த ரயில் பெட்டிகளால் 14,500 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும்.

● இந்த ரயிலால் அதிக பாரத்தை சுமந்து செல்ல முடியும். துருப்பிடிக்காமல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும். 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடியவை. 30 ஆண்டுகளுக்குப் பிறகும் புதுப்பொலிவுடன் காணப்படும். நாட்டின் பருவநிலை மாற்ற இலக்குகளை அடைய இந்த ரயில் உதவும்’ என்று தெரிவித்தாா்.

● வழக்கமான ரயில் பெட்டிகளைவிட ஒரு பயணத்தில் 180 டன் கூடுதல் சரக்கை அலுமினியம் ரயில் பெட்டிகளால் சுமந்து செல்ல முடியும். துருப்பிடிக்காத தன்மை, இந்த ரயில் பெட்டிகளின் பராமரிப்புச் செலவை குறைக்கும்’ என்று அலுமினியம் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் பங்குகொண்ட ஹிண்டால்கோ நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே துறை தெரிவித்துள்ளதாவது:

● சாதாரண ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் அலுமினியம் ரயில் பெட்டிகள் 10 ஆண்டுகள் அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. எனினும் அவற்றின் தயாரிப்பு செலவு சாதாரண ரயில்களைவிட 35 சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளது.

5. சீனாவின் அதிபராக எத்தனையாவது முறையாக ஷி ஜின்பிங் பதவி தொடரவுள்ளார் ? 

அ) இரண்டாவது 

ஆ) மூன்றாவது

இ) நான்காவது 

ஈ) ஐந்தாவது

விடை : (இ) மூன்றாவது 

● சீனாவின் அதிபராக மூன்றாவது  முறையாக ஷி ஜின்பிங் பதவி தொடரவுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. எகிப்தில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் 2022 ல் ஆடவர் அணிகளுக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் 

அ) வெண்கலம்

ஆ) வெள்ளி 

இ) தங்கம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● இந்திய அணி : ருதராங்ஷ் பாட்டீல், கிரண் ஜாதவ், அர்ஜூன் பபுதா. 

● இதுவரை இந்தியா 5G, 1S, 5B என 11 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. 

7. ஃபெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) மனீஷ் சுரேஷ்குமார்

ஆ) அரவிந்த் குமார்

இ) திக்விஜய் பிராத் சிங்

ஈ) டேனியல் யாதவ் 

விடை : (அ) மனீஷ் சுரேஷ்குமார் 

● போட்டி நடைபெற்ற இடம் : தில்லி

● மகளிர் ஒற்றையர் பிரிவில் வைதேகி சௌதரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

8. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் மகளிருக்கான 400மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?

அ) அர்ச்சனா 

ஆ) காயத்திரி 

இ) ரம்யா 

ஈ) சுபா வெங்கடேசன் 

விடை : (ஈ) சுபா வெங்கடேசன் 

IV. முக்கிய நிகழ்வுகள் 

9. International Day for the Eradication of Poverty 2022 ---------

● Ans : October 17 

● Dignity for all in Practice. 

Sunday, October 16, 2022

Current Affairs 2022 - October 16 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                  OCTOBER 16 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்குறள் உள்ளிட்ட எத்தனை தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது ? 

அ) 46 

ஆ) 50 

இ) 55

ஈ) 60 

விடை : (அ) 46 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

● செம்மொழி நிறுவனத்தின் வளா்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவது பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டமாகும். 

● செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொல்காப்பியம், நன்னூல், திருக்கு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புானூறு ஆகியவை உள்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

● இவற்றில் 41 நூல்கள் செவ்வியல் நூல்களாகும். இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையிலும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பா் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக பின்வரும் எதனை மத்திய அரசால் அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது ? 

அ) தஞ்சாவூர் வீணை 

ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

இ) தஞ்சாவூர் ஓவியம் 

ஈ) நரசிங்கம் பேட்டை நாதஸ்வரம் 

விடை : (ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

● மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது.

● இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

● இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022 என்ற இருநாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் தொடங்கி வைக்கவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) நரேந்திர மோடி 

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (இ) நரேந்திர மோடி 

பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.

● இந்த நிகழ்வில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் 12-ஆவது தவணையான ரூ. 16,000 கோடியை பிரதமா் மோடி விடுவிக்கிறாா்.

● மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாட்கள் நடத்துகின்றன.

● இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவா்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமா் விடுவிப்பாா்.

● மத்திய வேளாண்மை துறையின் ‘பிரதமரின் விவசாய கௌரவ நிதி‘ திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு (11 தவணைகளில்) இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

● இந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமா் தொடங்கிவைக்கிறாா். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்துவாா்.

● இதே நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 ‘பிரதமரின் வளமை மையங்களை‘ பிரதமா் திறந்துவைப்பாா்.

● நாட்டில் தற்போதுள்ள 2.7 லட்சம் சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக ‘பிஎம் வளமை மையங்கள்‘ என மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூா்த்தி செய்யும். விதைகள், மண், உரங்கள் பரிசோதனைக்கான வசதிகள் திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்கும்.

● இந்த மாநாட்டில் வேளாண் புத்தொழில் முனைவோா் கண்காட்சியையும் பிரதமா் திறந்து வைப்பாா். சுமாா் 300 நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது என்றாா் தோமா்.

4. ஆசிய கடலோர காவல்படை முகமை தலைவர்களில் 18 ஆவது கூட்டம் பின்வரும் எங்கு நடைபெற்றது ? 

அ) உத்தரப்பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) தமிழ்நாடு 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

● ஆசிய கடலோர காவல்படை முகமையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், சிங்கப்பூா், இலங்கை உள்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

● குறிப்பு : இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

5. சர்வதேச பட்டினி குறியீடு 2022 அறிக்கையில் இந்தியா இடம் பிடித்துள்ளது ? 

அ) 100

ஆ) 107 

இ) 109 

ஈ) 121 

விடை : (ஆ) 107 

நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 

● 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. 

● சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. 

● அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

● குறிப்பு : கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் போல்வால்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) ரோஸி மீனா 

ஆ) பவித்ரா 

இ) ரவீணா 

ஈ) வந்தனா 

விடை : (அ) ரோஸி மீனா

● போல்வால்ட் பிரிவில் ரோஸி மீனா பால்ராஜ் புதிய தேசிய சாதனையுடன் (4.21மீ) தங்கம் வென்றுள்ளார்

மகளிர் 20 கி.மீ. நடை ஓட்டத்தில் ரவீணா புதிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

7.. ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) வங்கதேசம் 

ஆ) ஆஸ்திரேலியா

இ) இங்கிலாந்து 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● குறிப்பு : இதுவரை 8 முறை நடைபெற்ற ஆசிய மகளிர் டி20 கோப்பை போட்டிகளில் இந்தியா 7 ஆவது முறையாக சாம்பியன் ஓட்டத்தை வென்றுள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Food Day 2022 -------------

● Ans : October 16 

● Theme(2022) : Leave No One Behind .




Friday, October 14, 2022

Current Affairs 2022 - October 14 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                   OCTOBER 14 / 2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் : 

1. சர்வதேச நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் ? 

அ) அபராஜிதா சாராங்கி 

ஆ) வினி மஹாஜன் 

இ) சிவ்தாஸ் மீனா 

ஈ) அஜிஷா சிங் 

விடை : (அ) அபராஜிதா சாரங்கி 

மக்களவை பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி, சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். ருவாண்டாவில் நடைபெற்று வரும் இந்த யூனியன் கூட்டத்தில் இந்தத் தோ்தல் நடைபெற்றதாக மாநிலங்களவை அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

● சுமாா் 178 நாடுகள் உறுப்பினா்களாக கொண்டு கடந்த 133 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின்(ஐபியூ) 145 -ஆவது பேரவைக் கூட்டம் ருவாண்டா தலைநகா் கிகாலியில் நடைபெற்று வருகிறது. 

● இதில் இந்திய நாடாளுமன்றம் சாா்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த கூட்டத்திற்கிடையே ஐபியூ-இன் செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கிகாலி கூட்டத்தில் நடைபெற்றது.

● இதில் பல்வேறு குழு நாடுகளின் உறுப்பினா் தோ்வு செய்யப்படுவதில் ’ஆசிய பசிபிக் குழும’ நாடுகளில் இருந்து ஐபியூ செயற்குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த நாடுகளைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. 

● இதில் போட்டியிட்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி(படம்) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று செயற்குழுவிற்கு தோ்வாகியிருப்பதாக மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் எத்தனை கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 4,200 கோடி 

ஆ) ரூ. 3,800 கோடி 

இ) ரூ. 2,700 கோடி

ஈ) ரூ. 1,300 கோடி 

விடை : (ஆ) ரூ. 3,800 கோடி 

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் ரூ.3,800 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

● இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

●தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1,500  கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்கள் 24 ஆண்டுகளில் முதிா்ச்சியடையும். இவை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யவும் வா்த்தகம் செய்யவும் முடியும்.

● தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதுவரை ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

● உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் என்பது பரஸ்பர நிதி போல உருவாக்கப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று முதலீடு செய்து, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பணத்தை மீண்டும் ஈட்டி திரும்ப அளிக்க முடியும்.

● உலக அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் இந்த வளா்ச்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் வலுவாக இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

● இது தவிர அனைத்துவிதமான காலநிலைகளிலும் முக்கிய ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் மக்களின் போக்குவரத்துக்கான செலவைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

3. நாட்டின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் சேவையை உனா - தில்லி இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 3 ஆவது

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது 

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது

ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

● நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

● வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

● இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

4. இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது ? 

அ) சென்னை 

ஆ) கன்னியாகுமரி 

இ) தேனி 

ஈ) திருநெல்வேலி 

விடை : (ஈ) திருநெல்வேலி 

● திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

● இது மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட ஒற்றை அலகைக் கொண்டது.

● இதுவரை, ஆரல்வாய்மொழிக் கணவாயில் நிறுவப்பட்டுள்ள 3,000 தனிக் காற்றாலை அமைப்புகள் 2 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். 

II. விளையாட்டு நிகழ்வுகள் 

5. இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் பின்வரும் எந்த ஆண்டு நடைபெறவுள்ளது ? 

அ) 2026

ஆ) 2025 

இ) 2024 

ஈ) 2023 

விடை : (ஈ) 2023 

● இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ளது. 

6. எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 25 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம்

● இந்திய அணி : ஈஷா சிங், நாம்யா கபூர், விபூகி பாட்டியா. 

III. முக்கிய தினங்கள் 

7. பின்வரும் எந்த மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது ? 

அ) செப்டம்பர் 

ஆ) அக்டோபர் 

இ) நவம்பர் 

ஈ) டிசம்பர் 

விடை : (ஆ) அக்டோபர் 

● இது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தால் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

● இது மார்பகப் புற்றுநோயைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு வருடாந்திரப் பிரச்சாரமாகும்.

8. World Egg Day 2022 ----------

● Ans : October 14

● Theme (2022) : Egg for a Better life. 

9. World Standards Day 2022 ---------

● Ans : October 14 

● Theme (2022) : Shared Vision for a Better World.


Thursday, October 13, 2022

Current Affairs 2022 - October 13 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   OCTOBER 13 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயங்கள் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 
அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) உத்தர பிரதேசம்

ஈ) ராஜஸ்தான் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக அரசு 

● அழிந்து வரும் தேவாங்கு இனத்தைப் பாதுகாக்கும் வகையில் கரூர் , திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டர் பரப்பிலான நிலத்தை கடவூர் தேவாங்கு சரணாலயமாக அறிவித்து அறிவிக்கை செய்துள்ளது.

● காரணம் : தேவாங்கு , இரவு நேர பாலூட்டி வகையைச் சேர்ந்தது. 
¤ இவை பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.
¤ இதனால் சுற்றுச்சூழல் (ம) நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

● குறிப்பு : இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச மையமானது தேவாங்கை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இணைநதுள்ளது.

2. தமிழகத்தில் குட்டி காவலர் எனும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) பொன்மூடி 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

● முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து 'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

● நோக்கம் : இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். 

3. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான தனி இதழ்களை வெளியிட்டவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) பொன்முடி 

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸடாலின் 

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’, ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ ஆகிய இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், பாரதி இளங்கவிஞர் விருதை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

● அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவஇதழ்களை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகிறது. 

● குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். 

● இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறைஅனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடு ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாக உள்ளது. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய 3 இதழ்களையும் முதல்வர் ஸ்டாலின்நேற்று வெளியிட்டார். பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

● பாரதி இளங்கவிஞர் விருது: மேலும், மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக செப். 11-ம் தேதி அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவிநாள்’ கடைபிடிக்கப்படும் என்றும், இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்திமாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

● அதன்படி, மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பா.பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.சைனி ஆகியோருக்கு ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கி, வாழ்த்தினார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை கடந்த இரண்டு இரண்டு ஆண்டுகளாக குறைந்த விலையில் விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய எத்தனை கோடியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ.31,000 கோடி

ஆ) ரூ. 28,000 கோடி 

இ) ரூ. 26,000 கோடி 

ஈ) ரூ. 22,000 கோடி

விடை : (ஈ) ரூ.22,000 கோடி 

அமைச்சரவை ஒப்புதல்கள் : 2020, ஜூன் முதல் 2022, ஜூன் வரையில் சந்தை விலையைவிட குறைவான விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய ஒருமுறை தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

● இந்தத் தொகை ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

● ரயில்வே ஊழியா்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கியதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● குஜராத் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம்: அரசு - தனியாா் பங்கேற்பு முறையின் கீழ், குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,234.64 கோடி செலவாகும்.

● கூட்டுறவு சங்க சட்டத்தில் திருத்தம்: பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

● வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தும் வகையில் ரூ.6,600 கோடியில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4. இந்தியாவில் மாநில அரசு பகல் நேர பள்ளிகளுக்கான தரவரிசையில் பின்வரும் எந்த மாநில பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ? 

அ) தில்லி

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர்

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (அ) தில்லி 

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான "உலக கல்வி' இணையதளம் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

● இதன் சமீபத்திய தரவரிசையில், தில்லி அரசு நடத்தும் துவாரகா செக்டார் 10-இல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

● குறிப்பு : தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியைச் சேர்ந்தவை ஆகும்.

5. இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாடுக்கு இடையே எண்ணெய் (ம) எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) ரஷ்யா 

அ) ஜப்பான் 

இ) அமெரிக்கா 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) அமெரிக்கா 

பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்தியாவும் அமெரிக்காவும் தனியாா் துறைகளின் பலத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இரு நாடுகளிடையே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பமாகின.

● இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனமான லான்ஸா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. லான்ஸா ஜெட் நிறுவனம் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாக நீடித்த விமான எரிவாயு உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● வாகனப் புகை உமிழ்வு அளவீடு மற்றும் குறைப்புக்கு தீா்வு காண்பது தொடா்பாக கெய்ல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அவந்த்திகா எரிவாயு நிறுவனத்துக்கும் பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

● அதுபோல, என்ஜினீயா் இந்திய நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் யுஓபி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

● நான்காவதாக பிபிசிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்துக்கும், பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. கூற்று : இந்திய ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கான மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காரணம் : கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று சரி , காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்காக மின்சார வாகனங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் இலகுரக வாகனங்களில் 25 சதவீதமும், பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டாா் சைக்கிள்களில் 48 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் எங்கெல்லாம் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கான செயல்திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

7. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஆதர்ஷ் ஸ்வைகா 

ஆ) சிபி ஜார்ஜ் 

இ) அவ்தார் சிங் 

ஈ) கே.ஜி . பாலகிருஷ்ணன் 

● தற்போது சிபி ஜார்ஜ் இந்திய தூதராக உள்ளார், விரைவில் ஆதர்ஷ் ஸ்வைகா பொறுப்பேற்கவுள்ளார். 

● இவர் தற்போது தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக தலைமையகத்தில் இணைச் செயலராக பணியாற்றி வருகிறார்.

● மேலும் கினியா குடியரசுக்கான அடுத்த இந்திய தூதராக அவ்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

8. சர்வதேச செலாவணி நிதியம் (ம) உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் யார் ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) அமித் ஷா 

ஈ) நிர்மலா சீதாராமன் 

விடை : (ஈ) நிர்மலா சீதாராமன் 

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நீடித்த பொருளாதார வளா்ச்சி, உயா் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

● இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னைகளில் எரிசக்தி விலை உயா்வும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. குஜராத்தில் நடைபெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் தமிழ்நாடு எத்தனை பதக்கங்களுடன் நிறைவு செய்தது ? 

அ) 88

ஆ) 74

இ) 116

ஈ) 66

விடை : (ஆ) 74 

நாட்டிலுள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரேதங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டி கடந்த செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 12 வரை 23 நாள்கள் குஜராத்தின் 6 நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வந்தது.

● இப்போட்டியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக சா்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் 5-ஆம் இடம் பிடித்தது.

● போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சா்வீசஸ் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டி முழுவதுமாக சிறப்பாகச் செயல்பட்ட அணியாக மகாராஷ்டிரம் தோ்வானது.

சிறந்த வீரா், வீராங்கனை

¤ கேரளத்தைச் சோ்ந்த நீச்சல் வீரா் சஜன் பிரகாஷ், இப்போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்கள் வென்று சிறந்த வீரராகத் தோ்வானாா். 

¤  கா்நாடக நீச்சல் வீராங்கனை ஹாஷிகா ராமச்சந்திரா 6 தங்கம், 1 வெண்கலத்துடன் போட்டியிலேயே சிறந்த வீராங்கனையாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

● மொத்தமாக பதக்கங்கள் :  1,249

● தங்கம் 382

● வெள்ளி 381

● வெண்கலம் 486

பதக்கப்பட்டியல் (டாப் 05)

¤ சா்வீசஸ் : 61G, 35S,  32B, = 128 M

¤ மகாராஷ்டிரம் : 39G, 38S, 63B = 140 M

¤ ஹரியாணா:  38G,  38S, 40B = 116M

¤ கா்நாடகம்:  27G, 23S, 38B = 88M

¤ தமிழகம்:  25G, 22S,  27B =  74M

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. International Day for Disaster Risk Reduction 2022 ---------

● Ans : October 13

● Theme (2022) : Substantially increase the availability and access to multi-hazard early warning systems and disaster risk information and assessment for people by 2030.

11. World Sight Day 2022 ----------- 

● Ans : October 13

● Theme (2022) : Love your eyes 


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...