Wednesday, October 19, 2022

Current Affairs 2022 - October 19 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 OCTOBER 19 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அண்மையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் யாருக்கு தலைமைப் பண்புக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது ? 

அ) எல்.பி. தங்கவேலு 

ஆ) பொன்னுராஜ் 

இ) மதிவேந்தன் 

ஈ) சங்க்கரன் 

விடை : (அ) எல்.பி. தங்கவேலு 

● தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் இந்திய லேப்ரோஸ்கோபி மருத்துவ நிபுணர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலுக்கு விருது வழங்கப்பட்டது. 

● காரணம் : மருத்துவத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது .


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியாவின் 27 ஆவது தலைமை கணக்கு அதிகாரியாக (CGA) பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) எஸ். விஜயலட்சுமி 

ஆ) பாரதி தாஸ்

இ) அமிர்தா குப்தா 

ஈ) அஞ்சலி சந்திரகுப்தன் 

விடை : (ஆ) பாரதி தாஸ் 

● பணி விவரம் : துறை ரீதியாக கணக்கு அறிக்கைகளைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்பது, துறை ரீதியான கணக்காய்வுகள் நடத்துவது ஆகியவை தலைமை கணக்கு அதிகாரியின் பொறுப்பாகும். 

3. சர்வதேச சூரியசக்தி கூட்டணி நாடுகள் அமைப்பின் தலைவர் பதவிக்கும் , இணைத் தலைவர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள் ? 

அ) இந்தியா, சீனா 

ஆ) இந்தியா , ரஷ்யா 

இ) இந்தியா, பிரான்ஸ் 

ஈ) இந்தியா, கனடா 

விடை : (இ) இந்தியா, பிரான்ஸ் 

● புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரான ஸ்ரீ ராஜ் குமார் சிங், புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் ஐந்தாவது சட்டசபையை தொடங்கி வைத்தார்.

● இந்தியா ISA சட்டமன்றத்தின் தலைவர் பதவியை வகிக்கிறது, பிரான்ஸ் அரசாங்கம் இணைத் தலைவராக உள்ளது.

● ISA-வின் ஐந்தாவது கூட்டம், ஆற்றல் அணுகல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகிய மூன்று முக்கியமான பிரச்சினைகளில் ISA இன் முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிக்கபடவுள்ளது.

4. சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் எத்தனையாவது பொதுச்சபை கூட்டத்தை தில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 87

ஆ) 88

இ) 89

ஈ) 90 

விடை : (ஈ) 90 

● சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் 90-ஆவது பொதுச்சபை கூட்டத்தை அவர் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 

● இந்த நிகழ்ச்சியின் நினைவு தபால்தலையையும் ரூ.100 நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 

● முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்டர்போல் தலைவர் அகமது நாசர் அல்ரைசி, பொதுச் செயலாளர் ஜர்கன் ஸ்டாக் ஆகியோர் வரவேற்றனர். 

● பாகிஸ்தான் உள்பட 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இன்டர்போல் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளன. 

5. 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது வழங்கப்பட்டுள்ள ஷேறன் கருணதிலக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) இந்தியா

ஆ) இலங்கை 

இ) அமெரிக்கா 

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) இலங்கை 

வாழ்வின் பல்வேறு உணா்வுநிலைகளுடன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் உக்கிரத்தன்மையை வெளிப்படுத்திய ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக எழுத்தாளா் ஷேஹன் கருணதிலகவுக்கு ‘புக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

● லண்டனில் புக்கா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

● இலங்கை எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக புக்கா் விருது வழங்கப்பட்டது. புக்கா் விருதுடன் சுமாா் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையும் எழுத்தாளா் கருணதிலகவுக்கு வழங்கப்பட்டது.

● அந்த நாவலில் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து நகைச்சுவையுடன் அவா் பதிவு செய்துள்ளதாக தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

6. இந்தியாவில் எங்கு ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவப்படவுள்ளது ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) கேரளா 

ஈ) உத்தர பிரதேசம்

விடை : (ஈ) உத்தர பிரதேசம் 

இந்திய-ரஷிய துப்பாக்கி நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

● இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை (அக். 18) தொடங்கியது. இதில் பங்கேற்ற அலெக்சாண்டா் மிக்கீவ் கூறியதாவது:

● அமேதியில் கோா்வா ஆயுதத் தயாரிப்பு ஆலை இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும். இங்கு ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். 

● ரஷியாவின் சிறப்புவாய்ந்த இந்த துப்பாக்கியை முழுமையாக இந்தியாவில் தயாரிப்பதுதான் எங்கள் திட்டமாகும். எதிா்காலத்தில் இந்தியாவுடன் மேலும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரஷியாவின் பல்வேறு நவீன ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

● இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ஏகே-203 ரக துப்பாக்கிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மலைகள், காடுகள், பனிப் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும், காலநிலைகளிலும் சிறப்பாக அதனைப் பயன்படுத்த முடியும் என்றாா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. கால்பந்த விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோர் விருது 2022 ஆடவர் (ம) மகளிர் பிரிவில் பின்வரும் யாருக்கு விருது வழங்கப்பட்டது ? 

அ) லயோனல் மெஸ்ஸி 

ஆ) கரின் பென்ஸிமா 

இ) அலெக்ஸியா புடெலாஸூம் 

ஈ) ஆ & இ 

விடை : (ஈ) ஆ & இ 

கால்பந்து விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோா் விருதை 2022-ஆம் ஆண்டில் ஆடவா் பிரிவில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமாவும், மகளிா் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா்.

● இதில் பென்ஸிமா முதல் முறையாக இந்த விருதை வென்றிருக்கும் நிலையில், புடெலாஸ் தொடா்ந்து 2-ஆவது முறையாக அதை கைப்பற்றியிருக்கிறாா். 

● மகளிா் பிரிவில் 2 முறை இந்த விருதை வென்ற முதல் வீராங்கனை புடெலாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

8. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ( BCCI ) எத்தனையாவது தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ? 

அ) 36 

ஆ) 33

இ) 31 

ஈ) 29 

விடை : (அ) 36 

● BCCI யின் 36 ஆவது தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...