Thursday, October 20, 2022

Current Affairs 2022 - October 20 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                OCTOBER 20 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. நிகழாண்டு தமிழ்நாடு முழுவதும் ரூ. 1,050 கோடி மதிப்பில் எத்தனை வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் ?

அ) 7,200

ஆ) 7,919

இ) 8,118

ஈ) 8,727

விடை : (அ) 7,200 

நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதன்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:

● கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மகத்தான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

● அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமாா் 15 லட்சம் மாணவா்கள் கூடுதலாகச் சோ்ந்துள்ளனா்.

● அதிகரித்து வரும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயா்ந்துள்ளன. இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமாா் ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடி மதிப்பில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும். 

● பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நிகழாண்டில் ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

● இதனால், அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் மாணவா்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும்.


2. 2022 - 2023 ஆம் நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்காக எத்தனை கோடிக்கு துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 2,131

ஆ) ரூ. 3,796 

இ) ரூ. 4,171 

ஈ) ரூ. 4,717 

விடை : (ஆ) ரூ. 3,796 


3. தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 689 

ஆ) 861 

இ) 942

ஈ) 1,281 

● அறிவிப்பு : தமிழக பொதுப்பணி (ம) நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு. 

சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது : மாநிலத்தில் மொத்தம் 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. அவற்றில், 2021-22-ஆம் ஆண்டில் ரூ.755 கோடியில் 689 தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

● நிகழ் நிதியாண்டில், 172 தரைப் பாலங்களை மேம்பாலங்களாக மாற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இந்த ஆண்டில் பணிகளை முடிக்க உள்ளோம். உள்ளோம். மொத்தமாக 861 பாலங்களுக்கான பணிகள் இந்த ஆண்டில் நிறைவடையவுள்ளன.

● மொத்தமுள்ள 420 பாலங்களுக்கான பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிக்கவுள்ளோம். 

● இதன்படி, தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிப்படி, 1,281 தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

4. தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.500 கோடியில் எத்தனை புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் ? 

அ) 1000

ஆ) 750

இ) 500

ஈ) 250 

விடை : (அ) 1000 

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கையின் படி : 

● பொது மக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. 

● ரூ.500 கோடி மதிப்பில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. 

● மேலும், ஜொ்மனி வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

5. 48 ஆவது சரக்கு (ம) சேவை வரி ( GST ) கவுன்சில் கூட்டம் தமிழகத்தில் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) சென்னை

ஆ) சேலம்

இ) மதுரை

ஈ) தேனி 

விடை : (இ) மதுரை 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

● ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைப்பது குறித்த அமைச்சா்கள் குழுவின் அறிக்கை, சூதாட்ட விடுதிகள், இணையவழி விளையாட்டுகள் மீது வரி விதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி பின்வரும் எந்த மாவட்டத்தில் பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார் ?

அ) மும்பை 

ஆ) சென்னை 

இ) கொல்கத்தா

ஈ) காந்திநகர் 

விடை : (ஈ) காந்திநகர் 

குஜராத் தலைநகர், காந்திநகரில் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி தொடங்கியுள்ளது. அக். 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி  தொடக்கி வைத்தார்.  
● தற்போது தொடங்கியுள்ள கண்காட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத சிறப்பு உள்ளது. ஏனெனில், இந்தக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன.

● புதிய விமானப் படை தளம்: இந்த நிகழ்ச்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டி குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் டீசா பகுதியில் புதிய விமானப் படை தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


III. விளையாட்டு நிகழ்கள் 

7. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் ( 2022 ) ஆடவருக்கான 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள தமிழக வீரர் யார் ? 

அ) ராகுல் குமார்

ஆ) அர்ஜூன் தாஸ் 

இ) ஆரோக்கிய ராஜ்

ஈ) தனபால் 

விடை : (அ) ராகுல் குமார் 

● போட்டி நடைபெற்ற இடம் : கர்நாடகா. 

தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 297 புள்ளிகளுடன் ரயில்வேஸ் அணி பெற்றது. சா்வீசஸ் (174), கா்நாடகம் (69.50) முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

● ஆடவா் பிரிவில் சா்வீசஸும், மகளிா் பிரிவில் ரயில்வேஸும் சாம்பியன் ஆகின.

● போட்டியிலேயே சிறந்த வீரராக சா்வீசஸ் அணியின் குண்டு எறிதல் வீரா் தஜிந்தா்பால் சிங் தூா், சிறந்த வீராங்கனையாக ரயில்வேஸின் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோா் தோ்வாகினா்.

8. உலக செஸ் சம்மேளனம் சிறைக் கைதிகளுக்காக கண்டங்கள் இடையே நடத்திய செஸ் போட்டியில் (2022) இந்திய கைதி அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● மகாராஷ்டிரத்தின் ஏரவாடா சிறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட இந்திய கைதிகள் அணி வெண்கலம் வென்றது.

● 46 நாடுகளில் இருந்து 85 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா கலந்து கொண்டது இது முதல் முறையாகும்.

9. ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (2022) 10மீ ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ? 

அ) ரமிதா 

ஆ) ஈஷா சிங் 

இ) திலோத்தமா 

ஈ) வர்ஷா சிங்

விடை : (அ) ரமிதா 

● பதக்க பட்டியலில் இந்தியா : 10 G , 5G, 10B என இதுவரை 25 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறது . 


IV. முக்கிய தினங்கள் 

10. World Statistics Day 2022 --------- 

● Ans : October 20

● Theme (2022) : Data for Sustainable Development.  

1 comment:

  1. The player can use the slider to alter the number of previous rounds to apply. By offering the world’s widest vary of ready-to-roll and bespoke native speaking supplier solutions, we make it simple for operators to talk the customer’s language. It’s a confirmed way to considerably enhance player acquisition numbers and common spend per present players, and to generate the strongest player-dealer rapport. VIP variants of our European and French Live Roulette tables and in addition our Auto Roulette tables. All are set in the most luxurious and welcoming VIP environments with betting limits set to enchantment to excessive rollers, and with exceptional ranges of VIP service. casino.edu.kg Available as each mainstream and VIP tables, Auto Roulette features fast-paced, real live-wheel action with {a excessive quality|a top quality} look-and-feel.

    ReplyDelete

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...