Sunday, October 23, 2022

Current Affairs 2022 - October 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   OCTOBER 23 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னையைத் தவிர்த்து , பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கை ஏற்ப எத்தனை புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 1317

ஆ) 2137

இ) 3417

ஈ) 4173 

விடை : (ஆ) 3417 

சென்னையைத் தவிா்த்து, பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 3,147 புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

● இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளாா்.

● அவரது பரிந்துரைகளை ஏற்று பணியிடங்களின் வரையறை மற்றும் ஏற்கெனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தி மொத்தம் 3 , 417 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான செலவினத்தை அந்தந்த மாநகராட்சியின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் சிவதாஸ் மீனா கூறியுள்ளாா்.

● குறிப்பு : பெருநகர சென்னை மாநகராட்சியைத் தவிா்த்து, இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2. தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சி மன்றக் குழு பின்வரும் யார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) ஆர்.என். ரவி 

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) டி.ராஜா 

ஈ) முனீஷ்வர் நாத் பண்டாரி 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளாா்.
● தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்துக்கான பணிகள் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக பருவ நிலை மாற்றத்துக்கான மாநில செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

● அதாவது, பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்டத்தை ஒட்டி, மாநிலத்தில் அதுபோன்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பசுமை சூழலுக்கான நிறுவனம் உருவாக்கப்பட்டது.

● தமிழ்நாடு பருவநிலை இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை செயல்படுத்தும் வகையில் பசுமை சூழலுக்கான நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

● இந்தப் பணிகளைத் தொடா்ந்து, பசுமைச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தும் நோக்குடன், இப்போது காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கான கொள்கை வழிகாட்டுதல்களை ஆட்சிமன்றக் குழு வழங்கிடும்.

● காலநிலை சூழல்களை ஏற்பது மற்றும் துயா் தணிப்பு போன்ற பணிகளுக்குரிய ஆலோசனைகளை வழங்குவது, காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பணிகளை ஆட்சிமன்றக் குழு செய்யும். மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பருவநிலை மாற்ற இயக்கங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

● இந்த ஆட்சிமன்றக் குழுவானது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு 22 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய அமைச்சகங்கள் (ம) பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் எத்தனை லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் ? 

அ) 10 லட்சம் 

ஆ) 15 லட்சம்

இ) 20 லட்சம் 

ஈ) 25 லட்சம் 

விடை : (அ) 10 லட்சம் 

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் தொடக்கி வைத்தாா். 

● முதல்கட்டமாக, நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

4. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எத்தனை சதவீதம் சரிந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) 6.7%

ஆ) 5.4%

இ) 3.9%

ஈ) 2.8% 

விடை : (ஆ) 5.4% 

● இது 6 முக்கிய நாடுகளின் செலாவணி மதிப்பு சரிந்ததைவிட குறைவு. 

● டாலருக்கு நிகரான அந்த நாடுகளின் செலாவணி மதிப்பு 6 மாதங்களில் 8.9% சரிந்துள்ளது. 

5. இந்திய - அமெரிக்க தொழில் அதிபரும் , சமூக ஆர்வலருமான ஸ்வதேஷ் சட்டர்ஜிக்கு ' தி ஆர்டர் ஆஃப் லாங்லீஃப் பைன் விருது வழங்கப்பட்டது,  இவர் எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ? 

அ) 1998 

ஆ) 1999

இ) 2000

ஈ) 2001 

விடை : (ஈ) 2001 

இந்திய-அமெரிக்க தொழில் அதிபரும், சமூக ஆா்வலருமான1 ஸ்வதேஷ் சட்டா்ஜிக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

● கேரி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநா் ரே கூப்பா் மாகாணத்தின் உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் லாங் லீஃப் பைன்’ என்ற விருதினை சுதேஷ் சட்டா்ஜிக்கு வழங்கினாா். 

● வடக்கு கரோலினா மாகாணம் மட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் அவருடைய பங்களிப்பு குறித்து ஆளுநா் கூப்பா் பாராட்டினாா்.

● குறிப்பு : இவருக்கு கடந்த 2001-இல் மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது.

6. இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) ஜியார்ஜியா மெலோனி 

ஆ) அன்னா பான்கிரடோவா 

இ) மரியா சினிடர் 

ஈ) ஜோஹன்னா டாப்பர் 

விடை : (அ) ஜியார்ஜியா மெலோனி 


III. முக்கிய தினங்கள் 

7. International Snow Leopard Day 2022 -------

● Ans : October 23 .


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...