● அதாவது, பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்டத்தை ஒட்டி, மாநிலத்தில் அதுபோன்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பசுமை சூழலுக்கான நிறுவனம் உருவாக்கப்பட்டது.
● தமிழ்நாடு பருவநிலை இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை செயல்படுத்தும் வகையில் பசுமை சூழலுக்கான நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
● இந்தப் பணிகளைத் தொடா்ந்து, பசுமைச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தும் நோக்குடன், இப்போது காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கான கொள்கை வழிகாட்டுதல்களை ஆட்சிமன்றக் குழு வழங்கிடும்.
● காலநிலை சூழல்களை ஏற்பது மற்றும் துயா் தணிப்பு போன்ற பணிகளுக்குரிய ஆலோசனைகளை வழங்குவது, காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பணிகளை ஆட்சிமன்றக் குழு செய்யும். மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பருவநிலை மாற்ற இயக்கங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கும்.
● இந்த ஆட்சிமன்றக் குழுவானது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு 22 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
3. மத்திய அமைச்சகங்கள் (ம) பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் எத்தனை லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் ?
அ) 10 லட்சம்
ஆ) 15 லட்சம்
இ) 20 லட்சம்
ஈ) 25 லட்சம்
விடை : (அ) 10 லட்சம்
● மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் தொடக்கி வைத்தாா்.
● முதல்கட்டமாக, நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
4. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எத்தனை சதவீதம் சரிந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ?
அ) 6.7%
ஆ) 5.4%
இ) 3.9%
ஈ) 2.8%
விடை : (ஆ) 5.4%
● இது 6 முக்கிய நாடுகளின் செலாவணி மதிப்பு சரிந்ததைவிட குறைவு.
● டாலருக்கு நிகரான அந்த நாடுகளின் செலாவணி மதிப்பு 6 மாதங்களில் 8.9% சரிந்துள்ளது.
5. இந்திய - அமெரிக்க தொழில் அதிபரும் , சமூக ஆர்வலருமான ஸ்வதேஷ் சட்டர்ஜிக்கு ' தி ஆர்டர் ஆஃப் லாங்லீஃப் பைன் விருது வழங்கப்பட்டது, இவர் எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ?
அ) 1998
ஆ) 1999
இ) 2000
ஈ) 2001
விடை : (ஈ) 2001
● இந்திய-அமெரிக்க தொழில் அதிபரும், சமூக ஆா்வலருமான1 ஸ்வதேஷ் சட்டா்ஜிக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
● கேரி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநா் ரே கூப்பா் மாகாணத்தின் உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் லாங் லீஃப் பைன்’ என்ற விருதினை சுதேஷ் சட்டா்ஜிக்கு வழங்கினாா்.
● வடக்கு கரோலினா மாகாணம் மட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் அவருடைய பங்களிப்பு குறித்து ஆளுநா் கூப்பா் பாராட்டினாா்.
● குறிப்பு : இவருக்கு கடந்த 2001-இல் மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது.
6. இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ?
அ) ஜியார்ஜியா மெலோனி
ஆ) அன்னா பான்கிரடோவா
இ) மரியா சினிடர்
ஈ) ஜோஹன்னா டாப்பர்
விடை : (அ) ஜியார்ஜியா மெலோனி
III. முக்கிய தினங்கள்
7. International Snow Leopard Day 2022 -------
● Ans : October 23 .
No comments:
Post a Comment