சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்
நோக்கம்:
1.1967 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
2.இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சங்கங்களை (அ)தனி நபர்களை திறம்பட தடுக்கும் செயல்பாடுகளை உள்ளடக்கியது
சிறப்பம்சங்கள்:
1. அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் உள்ளது.
2.ஒன்றிய அரசு பயங்கரவாத செயல் என சந்தேகிக்கும் அமைப்புகளை தனது அரசிதழ் மூலம் தெரிவிக்கலாம்.
3. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை சீர்குலைக்கும் நோக்கத்தில் தனிநபர் அல்லது சங்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலையும் குறிக்கும்.
4.பயங்கரவாத செயல்கள் செய்வது (அ) பங்கேற்பது (அ)தயாராவது (அ)ஊக்குவிப்பது (அ) ஈடுபடுவது போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.
5.அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை.
6. வெளிநாட்டினர் மீதும் குற்றம் சுமத்தப்படலாம்.
7. வெளிநாட்டில் குற்றம் செய்யப்பட்டாலும் தண்டிக்கப்படலாம்.
8. 30 நாட்களுக்கு நீதிமன்ற காவல்.
9. முன் ஜாமீனுக்கு அனுமதி இல்லை.
10. 180 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனில் ஜாமீன் மறுப்பு காலாவதி ஆகிவிடும்.
11.மாநில காவல்துறை மற்றும் என் ஐ எ மூலம் விசாரணை நடத்தப்படும்.
மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்:
1.2004 திருத்தம்:
சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிரதேசத்தின் பிரிவினை ஆகியவற்றுடன் பயங்கரவாத செயல் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
2.2019 திருத்தம் :
அ)தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கலாம் .
ஆ)என் ஐ ஏ வின் தலைமை இயக்குனர்க்கு சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்ளது.
இ) என் ஐ ஏ அதிகாரிகளுக்கு பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது.
சவால்கள்:
1. அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையான தனிநபர் உரிமைகளை(விதி 21) பாதிக்கிறது.
2.ஒன்றிய அரசிடம் அதிகாரம் இருப்பது, கூட்டாட்சி முறைக்கு எதிரானதாக கருதப்படுகிறது.
3. நீதிமன்றத்தின் முன் ஒரு தனி நபரை "பயங்கரவாதி" என்று அழைப்பது குற்றம் நிரூபிக்கப்படும் வரை "நிரபராதி" என்ற கொள்கையை தகர்க்கிறது.
4. தவறான நோக்குடன் கையாளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
5. என் ஐ ஏவிடம் அதிக ாரங்கள் உள்ளதால் மாநில பட்டியலில் உள்ள காவல்துறைக்கு அதிகாரங்கள் குறைகின்றன.
No comments:
Post a Comment