JULY 20 / 2022
I. தமிழ்நாட்டுச் செய்திகள்
1. தமிழகத்தில் நெல்கொள் முதல் பருவத்தை என்று முதல் துவக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது ?
அ) செப்டம்பர் 01
ஆ) ஆகஸ்ட் 01
இ) அக்டோபர் 01
ஈ) நவம்பர் 01
விடை : (அ) செப்டம்பர் 01
● நிகழாண்டுக்கான கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக செப்டம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .
● குறிப்பு : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. திருப்பூர் ரயில் நிலையத்துக்கு தற்காலிகமாக கீழ்கண்ட எந்த சுதந்திர போராட்ட தியாகியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது ?
அ) ராஜாஜி
ஆ) சிங்கார வேலூர
இ) ராதாகிருஷ்ணன்
ஈ) திருப்பூர் குமரன்
விடை : (ஈ) திருப்பூர் குமரன்
● 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டியுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.
● இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
● அதன் ஒரு பகுதியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாக திருப்பூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளது. மேலும் திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்படக் கண்காட்சி மற்றும் செல்பி பூத் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
● அதன் ஒரு பகுதியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாக திருப்பூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளது. மேலும் திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்படக் கண்காட்சி மற்றும் செல்பி பூத் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
II. தேசியச் செய்திகள்
3. கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?
அ) 3.92 லட்சம்
ஆ) 1.70 லட்சம்
இ) 3.13 லட்சம்
ஈ) 5.42 லட்சம்
விடை : (அ) 3.92 லட்சம்
● கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
● இவர்கள் அனைவரும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
● இவர்களில் அதிகபட்சமாக 1.70 லட்சம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் .
4. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி எத்தனை டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ?
அ) 2 பில்லியன் டாலர்
ஆ) 3 பில்லியன் டாலர்
இ) 1 பில்லியன் டாலர்
ஈ) 2.5 பில்லியன் டாலர்
விடை : (இ) 1 பில்லியன் டாலர்
● பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் ( சுமார் ரூ. 8,000 கோடி ) கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக :
1) உலகில் உள்ள மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 26 லட்சம் ஆகும்.
2) ஆசியாவில் உள்ள மொத்த நூலகங்களில் எண்ணிக்கை 19 லட்சம் ஆகும்.
3) இந்தியாவில் உள்ள மொத்த நூலகங்களில் 15 லட்சம் ஆகும்.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 3 மட்டும்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும்
III. விளையாட்டுச் செய்திகள்
6. உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் (ம) ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2022 ல் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மொத்த பதக்கம் ?
அ) 5
ஆ) 7
இ) 3
ஈ) 8
விடை: (இ) 3
● 3 பதக்கங்கள் : 1 G , 2 B
● தங்கம் : மகளிருக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்ஷதா கௌட் மொத்தமாக 157 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
● இதே பிரிவில் சௌம்யா தேவி 145 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார்.
● ஆடவருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் எல். தனுஷ் மொத்தமாக 185 கிலோ எடை தூக்கி 4 ஆவது இடம் பிடித்தார் என்றாலும் ஸ்னாட்ச் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
7. ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய இணை வென்றுள்ள பதக்கம் ?
அ ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
விடை : (இ) வெண்கலம்
● வெண்கலம் வென்றுள்ள இந்திய இணை அனிஷ் பன்வாலா, ரிதம் சங்வான்.
● இப்போட்டியில் இதுவரை இந்தியா வென்றுள்ள பதக்கம் 5G , 5S, 4B - 14 பதக்கங்கள்.
8. மாமல்லப்புரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் எத்தனை நவீன டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன ?
அ) 205
ஆ) 131
இ) 313
ஈ) 225
விடை : (அ) 205
● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.
● ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.
● 188 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
● போட்டிக்காக மொத்தம் 205 நவீன டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
IV. முக்கிய தினங்கள்
9. சர்வதேச சதுரங்க தினம் ( International Chess Day ) 2022 ?
அ) ஜூலை 16
ஆ) ஜூலை 17
இ) ஜூலை 19
ஈ) ஜூலை 20
விடை : (ஈ) ஜூலை 20
No comments:
Post a Comment