Friday, July 22, 2022

Current Affairs 2022 - July 21 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                    JULY 21 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழக உளவுத்துறைக்கு புதிய ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 
அ) கே.ஏ. செந்தில் வேலன்
ஆ) கே. பணீந்திர ரெட்டி 
இ) டி.வி. கிரண் சுருதி 
ஈ) டி. கண்ணன் 

விடை : (அ) கே.ஏ. செந்தில் வேலன் 

● தமிழக உளவுத் துறைக்கு புதிய ஐ.ஜி.-ஆக கே.ஏ. செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

● மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

2. அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளவர் ? 

அ) ராம்நாத் கோவிந்த் 
ஆ) வெங்கையா நாயுடு
இ) நரேந்திர மோடி
ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (இ) நரேந்திர மோடி 

● ஜூலை 29 ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 

3. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் தவணைகளை எளிய முறையில் செல்லுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி எது ? 

அ) நம்ம வீடு 
ஆ) நம்ம குடியிருப்பு 
இ) நம்ம வாழ்விடம் 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) நம்ம குடியிருப்பு 

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரா்கள் தவணைகளை எளிய முறையில் செலுத்தும் வகையில் ‘நம்ம குடியிருப்பு’ என்ற புதிய செயலியை அந்தத் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்

● இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, பராமரிப்புத் தொகை, நிலுவைத் தொகை போன்றவற்றை செலுத்தலாம். 

● www.tnuhdb.tn.gov.in  என்ற இணைய தள முகவரியில் உள்ள ணத ஸ்ரீா்க்ங் மூலமாகவும் தவணைத் தொகையை செலுத்தலாம்.

4. உச்சநீதிமன்ற தமிழக அரசின் புதிய வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில் 
ஆ) டி. குமணன்
இ) டி. கண்ணன் 
ஈ) சபரிஷ் சுப்ரமணியன்

விடை : (ஈ) சபரிஷ் சுப்ரமணியன் 

● தமிழக அரசின் 38 துறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் மனுக்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்ததைத் தொடர்ந்து கூடுதலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

II. தேசியச் செய்திகள் 

5. மத்திய துணை ராணுவப் படை ( CRPF ) , எல்லை பாதுகாப்பு படை ( PSF ) ஆகிய மத்திய ஆயுதப்படை போலீஸ் படைகளில் அக்னி வீரர்களுக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு பூர்வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 10% 
ஆ) 13%
இ) 31%
ஈ) 43%
விடை : (அ) 10% 

● அக்னி வீரர்கள் நான்கு ஆண்டு கால ராணுவ பணியை முடித்த பின்பு இந்த பிரிவில் சேர 10% இடஒதுக்கீடு அளிக்க பூர்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது .
● அறிவிப்பு : மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய். 

6. நாட்டில் எத்தனை லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 15
ஆ) 26
இ) 31
ஈ) 13 
விடை : (ஈ) 13 

● நாட்டில் 13 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

7. இந்தியாவில் சிவிங்கிப் புலி ( சீட்டா ) இனம் முற்றிலும் அழிந்து போனதாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது ? 

அ) 1952
ஆ) 1964
இ) 1969
ஈ) 1994 
விடை : (அ) 1952 

● ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு 8 சீட்டாக்கள் ( 4 ஆண் , 4 பெண் ) கொண்டுவரப்படவுள்ளன.
● இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. 
● உலகம் முழுவதும் சுமார் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. 

8. இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) கோத்தபய ராஜபட்ச 
ஆ) ரணில் விக்ரமசிங்க 
இ) சஜித் பிரேமதாச 
ஈ) மகிந்த ராஜபட்ச 

விடை : (ஆ) ரணில் விக்ரமசங்க
 
● முன்பு : ஆறு முறை இலங்கை பிரதமராக இருந்தவர் ஆவார். 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது ? 

அ) 31
 ஆ) 13
இ) 15 
ஈ) 21 
விடை : (இ) 15 

● 15 பதக்கங்கள் : 5G, 6S, 4B 
 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...