GK SHANKAR JULY 26 / 2022
1. தமிழகத்தில் பிளஸ் 01 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார் ?
அ) ஆர்.என். ரவி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) மா. சுப்பிரமணியன்
ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
● நடப்பு கல்வியாண்டுக்கான ( 2021 - 2022 ) அரசு,அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் 01 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
II. தேசியச் செய்திகள்
2. இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ளார் ?
அ) 14 ஆவது
ஆ) 15 ஆவது
இ) 17 ஆவது
ஈ) 16 ஆவது
விடை : (ஆ) 15 ஆவது
● பதவி பிரமாணம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
● இந்தியாவின் 2 ஆவது பெண் குடியரசு தலைவர்.
● பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசு தலைவர்.
● குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்பதற்கான ஆவணத்தில் முர்மு கையொப்பமிட்ட போது , முப்படைகள் சார்பில் 21 குண்டுகள் முழங்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது .
3. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமார் எத்தனை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது ?
அ) 12,000
ஆ) 13,000
இ) 17,000
ஈ) 22,000
விடை : (அ) 12,000
● நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமார் 12,044 ஆசிரியர் காலிப் பணியிடங்களும் (ம) 1,332 ஆசிரியரல்லாத பணியிடங்களும் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
● இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 1,162 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன.
4. மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியக் குழுவில் எத்தனை எம்.பிக்களை நியமனம் செய்வது தொடர்பான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது ?
அ) 03
ஆ) 05
இ) 02
ஈ) 06
விடை : (இ) 02
● மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியக் குழுவில் இடம் பெறும் இரண்டு MP க்களை மக்களைவில் தலைவர் தேர்வு செய்வார்.
● இந்திய தொல்லியல் துறைக்கும் இந்தத் துறையில் ஆராய்ச்சியில் உள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்த இந்த வாரியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
5. பதவிக் காலம் முடிந்து இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் மாத ஓய்வூதியம் எவ்வளவு ஆகும் ?
அ) 3 லட்சம்
ஆ) 4 லட்சம்
இ) 3.5 லட்சம்
ஈ) 2.5 லட்சம்
விடை : (ஈ) 2.5 லட்சம்
● பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜூலை 25 அரசு இல்லத்தில் குடியேறினாா். அவருக்கு மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றுள்ளாா்.
6. பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு இதுவரை எத்தனை கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது ?
அ) ரூ.494 கோடி
ஆ) ரூ. 500 கோடி
இ) ரூ. 371 கோடி
ஈ) ரூ. 243 கோடி
விடை : (அ) ரூ. 494 கோடி
7. இந்தியாவில் முதல்முறையாக மனிதர்களை ஏற்றிச் செல்லக் கூடிய ஓட்டுநர் இல்லாத ஆளில்லா விமானம் எங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது ?
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) புது டெல்லி
ஈ) குஜராத்
விடை : (இ) புது டெல்லி
● ஆளில்லா விமானத்தின் பெயர் : வருணா.
● தயாரிப்பு : சாகர் டிஃபென்ஸ் இஞ்ஜினியரிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
● இது ஒரு முறையில் ஒரு நபரினை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
8. குஜராத்தில் நடைபெறவுள்ள 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்காக (2022) வெளியிடப்பட்டுள்ள சின்னம் எது ?
அ) ஆசிய சிங்கம்
ஆ) ஆசிய புலி
இ) ஆசிய யானை
ஈ) ஆசிய குதிரை
விடை : (அ) ஆசிய சிங்கம்
● செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10 வரை குஜராத்தில் 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
● இப்போட்டிக்கு ஆசிய சிங்கம் இடம் பெற்றச் சின்னமானது வெளியிடப்பட்டுள்ளது.
III. விளையாட்டுச் செய்திகள்
9. அமெரிக்காவில் நடைபெற்ற 18 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் எந்த நாடு அதிக பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது ?
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) அமெரிக்கா
விடை : (ஈ) அமெரிக்கா
● உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 - அமெரிக்காவில் நடைபெற்றது.
● இப்போட்டியில் அமெரிக்கா 33 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
● இப்போட்டியில் இந்தியா 1 பதக்கத்துடன் 37 ஆவது இடம் பிடித்துள்ளது.
IV. முக்கிய தினங்கள்
10. சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம்( International day for the conservation of the Mangrove Ecosystem ) 2022 ?
அ) ஜூலை 20
ஆ) ஜூலை 22
இ) ஜூலை 24
ஈ) ஜூலை 26
விடை : (ஈ) ஜூலை 26
No comments:
Post a Comment