GK SHANKAR JULY 25 / 2022
I. தமிழ்நாட்டுச் செய்திகள்
1. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக:
1) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாதியின் நினைவாக மெரினா கடலுக்கு நடுவே பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.
2) இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீ கண்ணாடி பாலம் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 (ம) 2
ஈ) ஏதுமில்லை
விடை : (இ) 1 (ம) 2
● தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாதியின் நினைவாக மெரினா கடலுக்கு நடுவே ரூ. 80 கோடி செலவில் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.
● இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீ கண்ணாடி பாலம் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
● மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
2) தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என எந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது ?
அ) 1978
ஆ) 1926
இ) 1998
ஈ) 1911
விடை : (அ) 1978
தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1978 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது .
II. தேசிய செய்திகள்
3. இந்தியாவின் எத்தனயாவது
குடியரசு தலைவராக ராமநாத் கோவிந்த் கடந்த எந்த ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டார் ?
அ) 15 ஆவது , 2014
ஆ) 14 ஆவது , 2014
இ) 15 ஆவது , 2017
ஈ) 14 ஆவது , 2017
விடை : (ஈ) 14 ஆவது ,2017
● அவரின் பதவிக்காலம் ஜூலை 25 ஆம் தேதி நிறைவடைந்தது .
4. ஒற்றை கட்டளையின் கீழ் செயல்படும் முப்படை வீரர்களைக் கொண்ட பிரிவுகள் (தியேட்டரைசேஷன் ) விரைவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) ராஜ்நாத் சிங்
இ) ஜெய்சங்கர்
ஈ) அமித் ஷா
விடை : (ஆ) ராஜ்நாத் சிங்
● முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த கமெண்ட் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். முப்படைகளுக்குமான இந்த ஒருங்கிணைந்த கமெண்ட் மையம் என்பது பாதுகாப்புத் துறையில் நீண்ட காலம் எதிர்பார்த்து இருக்கும் முக்கிய சீர்திருத்தம் ஆகும்.
5. இந்தியாவில் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கும் குடியரசு தலைவர்களின் பட்டியலில் எத்தனையாவது குடியரசுத் தலைவராக முர்மு இடம் பிடித்துள்ளார் ?
அ) 15 ஆவது
ஆ) 10 ஆவது
இ) 13 ஆவது
ஈ) 17 ஆவது
விடை : (ஆ) 10 ஆவது
● கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையுள்ள ஆவணங்களின்படி குடியரசு தலைவர்கள் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றுள்ளனர்.
6. நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில் புலிகளின் இறப்பு அதிகபட்சமாக பதிவாகியுள்ள மாநிலம் எது ?
அ) கேரளா
ஆ) உத்தர பிரதேசம்
இ) மத்திய பிரதேசம்
ஈ) அசாம்
விடை : (இ) மத்திய பிரதேசம்
● நாடு முழுவதம் 74 புலிகள் இறந்துள்ளன.
- அவற்றின் பட்டியல்
- ம.பி. - 27
- மகாராஷ்டிரா - 15
- கர்நாடகா - 11
- அசாம் - 5
- கேரளா - 4
- ராஜஸ்தான் - 4
- உ.பி. - 3
- ஆ.பி - 2
- ஒடிசா, சட்டீஸ்கர், பிகார் - 01
7. பின்வரும் எந்த நாடு தனது சொந்த விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது ?
அ) ரஷ்யா
ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா
ஈ) சீனா
விடை : (ஈ) சீனா
● சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்3 ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலமான தியான்ஹேவுக்கு இடா்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வகமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் தியான்ஹே மையக் கலம் முதல்முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.
III. விளையாட்டுச் செய்திகள்
8. அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (ஆ) வெள்ளி
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து 23 வயதான நீரஜ் சோப்ரா தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் தன்வசப்படுத்தியுள்ளார்.
கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
IV. முக்கிய தினங்கள்
9. உலக நீரில் மூழ்கும் தடுப்பு நாள் ( World Drowning Prevention Day ) 2022
அ) ஜூலை 21
ஆ) ஜூலை 23
இ) ஜூலை 25
ஈ) ஜூலை 26
விடை : (இ) ஜூலை 25
Theme : Do Onething - to Prevent Drowning
No comments:
Post a Comment