● தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் 46-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
● பின்னா், கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை வழங்கினார்.
● இப்புத்தகக் காட்சி ஜன. 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இதற்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.
● நிகழாண்டு புத்தகக் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
● பின்னா், கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை வழங்கினார் முதல்வா் ஸ்டாலின்.
● இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெற்றோர்.
● நாவல் பிரிவில் எழுத்தாளர் தேவி பாரதி, சிறுகதை பிரிவில் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ், கவிதை பிரிவில் எழுத்தாளர் தேவதேவன், மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் சி.மோகன், நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் பிரளயன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
● 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.
● இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முதலாவது முன்கூட்டிய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய புள்ளியியல்-திட்ட அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
● நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.157.60 லட்சம் கோடியாக அதிகரிக்கும். நாட்டின் ஏற்றுமதி ரூ.35.70 லட்சம் கோடியாகவும், இறக்குமதி ரூ.46.88 லட்சம் கோடியாகவும் இருக்கும். தனிநபா் வருமானம் ரூ.96,522-ஆக இருக்கும்.
● இந்த ஆய்வறிக்கை பட்ஜெட் தயாரிப்புப் பணிகளுக்குப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முன்கூட்டிய பொருளாதார ஆய்வறிக்கை பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● குறிப்பு : நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் என சா்வதேச நிதியமும் (ஐஎம்எஃப்), 6.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கியும், 7 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளா்ச்சி வங்கியும் கணித்துள்ளன.
● முப்படைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றும் இந்தியாவின் முதலாவது கூட்டுப் படைப்பிரிவு அந்தமான் நிக்கோபாரில் அமைந்துள்ளது. போா் உள்ளிட்ட சூழல்களை எதிா்கொள்வதற்கான இதன் தயாா்நிலை குறித்து ஆராயும் வகையில் இரு நாள்கள் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் வியாழக்கிழமை அந்தமான் நிக்கோபாருக்குச் சென்றாா்.
● இந்நிலையில், கிரேட்டா் நிக்கோபாா் தீவின் கேம்ப்பெல் பேவில் உள்ள ஐஎன்எஸ் பாஸ் கடற்படை விமான தளத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.
● மலாக்கா நீரிணை உள்பட கிரேட் நிக்கோபாா் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு வரையிலுமான கடற்பகுதியை இந்த கடற்படை விமான தளம் கண்காணித்து வருகிறது. மலாக்கா நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையாகும்.
● சிங்கப்பூா், தென்கொரியா போன்ற நாடுகள் ஏற்கெனவே பசுமை பத்திரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. இந்தியாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு 2022-23 நிதியண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதன்படி, சுற்றுசூழலுக்கு உகந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கில் இந்திய பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.
● இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘ரூ.16,000 கோடி மதிப்பிலான இந்திய பசுமைப் பத்திரங்கள் சந்தைப்படுத்துதலுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட 2022-23-ஆம் அரையாண்டு பங்கு பத்திரங்கள் சந்தைப்படுத்துதல் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
● இந்த பசுமை பத்திரங்கள் வெளியீட்டுக்கான நடைமுறைகளை கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த பசுமை பத்திரங்கள் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் கால அளவைக் கொண்டதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள் :
இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.
● இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் : காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.
● குறிப்பு : தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்
No comments:
Post a Comment