தேர்தல் சீர்திருத்தங்கள்
61 வது சட்ட திருத்தம் 1984 இன் படி வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது
1989 ஆம் ஆண்டு முதல் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது
1993 முதல் இந்திய முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது
தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கடைகள் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மது விற்க விநியோகிக்க தடை செய்யப்பட்டது
ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்
வேட்பாளர் அவரது மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் சொத்து விவரம் குறித்து தகவல் அளிக்க வேண்டும்
2017 ஆம் ஆண்டு வட்டி இல்லா பத்திரமாக ,தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்த பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்,2000 ரூபாய்க்கு மேல் வழங்கும் நன்கொடையாளர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
2010 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது
2013 ஆம் ஆண்டு முதல் வாக்காளர் பதிவை இணைய வழி மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற ஆணைப்படி தண்டனை பெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் முன்பு போன்று மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது அதன்படி கருத்துக் கணிப்பு முடிவுகள் கடைசி கட்ட தேர்தல் முடிந்த பின்னர் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும்
நன்றி : Manorama Tamil Year Book 2024
Manorama Year Book 2024 Purchase Link : Click Here
No comments:
Post a Comment