Friday, August 19, 2022

Current Affairs 2022 - August 19 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                         GK SHANKAR 
                     AUGUST 19 / 2022

தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க பயன்படுத்தும் செயலி எது ? 

அ) கருடா
ஆ) கடம்பா
இ) சிம்பா
ஈ) சீட்டா

விடை : (அ) கருடா 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

● வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் இணைய வழி வாயிலாகவும் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

● மேலும், தமிழக முழுவதும் இதுவரை சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். 

● அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் ஆட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்கவுள்ளது. 

2. அண்மையில் மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணன் எந்த ஆண்டு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது பெற்றார் ? 

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஈ) 2022

● தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார். 

● பணி : தமிழறிஞர், இலக்கியப் பேச்சாளர் , பட்டிமன்றப் பேச்சாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி. 

● நூல்கள் (ம) கவிதை நூல்கள் : குறுக்குத்துறை ரகசியங்கள் 1, குறுக்குத்துறை ரகசியங்கள் 2, வடிவுடை காந்திமதியே,  காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்,  திக்கனைத்தும் சடை வீசி, பழம் பாடல். 

3. தமிழகத்தில் மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூபாய் -------- வரை உயர்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 250 

ஆ) 100

இ) 500

ஈ) 1000

விடை : (ஆ) 100

● தமிழகத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூ.100 வரை உயர்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

4. தமிழகத்தில் நிகழாண்டில் புதிதாக எத்தனை பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் ? 

அ) 50,000

ஆ) 52,131

இ) 57, 531

ஈ) 59, 313

விடை : (இ) 57,531 

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, 2025-ஆம் ஆண்டுக்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

● அதன் பயனாக, காசநோய் பாதிப்பு தொடா்பு விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

● அதுமட்டுமின்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

● குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 57,531 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 12,781 பேரும், அரசு மருத்துவமனைகளில் 44,750 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. இந்தியா - வியத்நாம் இடையே வின்பேக்ஸ் என்ற இருதரப்பு ராணுவப் பயிற்சி எங்கு நடைபெற்றது ? 

அ) ஹரியானா

ஆ) குஜராத்

இ) கேரளா

ஈ) மேற்கு வங்கம் 

விடை : (அ) ஹரியானா 

● இந்தியா-வியத்நாம் இடையே நடைபெற்று வந்த இருதரப்பு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

● 'வின்பேக்ஸ்’ என்ற பெயரில், கடந்த ஆகஸ்ட் 1 முதல் ஹரியாணாவின் பஞ்சகுலா நகா் அருகே சண்டீமந்திா் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்று வந்தது.

● இதில், பேரிடா் காலங்களில் மனிதா்களை மீட்க உதவும் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

● ஐ.நா. அமைதிக் குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளா் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடைபெற்றது.

● வியத்நாமின் ராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் ராணுவப் பயிற்சி இதுவாகும். இரு நாட்டு வீரா்களுக்கும் கருத்தியல் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்பிக்கப்பட்டன.

● நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியத்நாம் தூதா் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நவ்குமாா் கந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியத்நாமில் 2023-இல் நடைபெறுகிறது.

6. பாங்காக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) எஸ்.ஜெய்சங்கர்

இ) திரௌபதி முர்மு

ஈ) அமித் ஷா 

விடை : (ஆ) எஸ். ஜெய்சங்கர் 

மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16-ந் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்திய தாய்லாந்து 9 ஆவது கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணைப்பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான டான் பிரமுத்வினயை சந்தித்து பேசினார்.

● பாங்காக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார்.

7. பின்வரும் எந்த நாடு ,10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபிள் ( ரூ. 13.30 லட்சம் ) வெகுமதிப்புடன் கூடிய அன்னை நாயகி என்ற விருதையும் வழங்கவுள்ளது ? 

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) ரஷ்யா

ஈ) பிரிட்டன் 

விடை : (இ) ரஷ்யா

● காரணம் : ரஷ்யாவில் சரிந்து வரும் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க. 

8. குரங்கு அம்மை தீநுண்மியின் துணை ரகங்களுக்கு கீழ்க்கண்ட எந்த பெயர்களை உலக சுகாதார அமைப்பு மாற்றி வைத்துள்ளது ? 

அ) கிளேட் 1

ஆ) கிளேட் 2

இ) காங்கோ படுகை 

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

● முன்பு : காங்கோ படுகை , தென் ஆப்பிரிக்க கிளேட் என்றிருந்தது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. தென் கொரியாவில் நடைபெறும் பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2022 ல் கலப்பு பி3 25மீ பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் ராகுல் ஜாக்கர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம்

● இதே பிரிவில் இந்தியாவின் பூஜா அகர்வால் (வீராங்கனை)  வெண்கலம் வென்றுள்ளார்.

● மேலும் மகளிர் ஆர் 2 10 மீ ஏர் ரைஃபிள் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா வெள்ளி வென்றுள்ளார் . 

IV. முக்கிய தினங்கள்

10. World Humanitarian Day 2022 ? 

Ans : August 19 

Theme (2022) : It takes a village 

11. World Photography Day 2022 ? 

Ans : August 19 

Theme (2022)  : Pandemic Lockdown through the lens. 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...