GK SHANKAR SEPTEMBER 20 /2022
I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்
1. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது மாநில மாநாடு எங்கு நடைபெற்றது ?
அ) சென்னை
ஆ) மதுரை
இ) சேலம்
ஈ) தேனி
விடை : (அ) சென்னை
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
2. உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் 13 ஆவது தூய்மை எரிசக்தி அமைச்சர்கள் நிலை மற்றும் 7 ஆவது புதுமுறை காணலுக்கான அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு எங்கு நடைபெறுகிறது ?
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஆஸ்திரேலியா
விடை : (இ) அமெரிக்கா
● மாநாடு நடைபெறும் இடம் : அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
● பல்வேறு நாடுகளை சேர்நத
31 அமைச்சர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள்,நூற்றுக்கணக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள், தனியார் நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.
● இந்த மாநாடு செப்டம்பர் 21 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
● இந்தியா சார்பில் மத்திய அறிவியல்,தொழில்நுட்பம், பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்கிறார்.
3. லோக்பால் (ம) லோக் ஆயுத்த சட்டம் 2013 இன் படி, எந்த ஆண்டு லோக்பால் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது ?
அ) 2009
ஆ) 2013
இ) 2016
ஈ) 2019
விடை : (ஈ) 2019
● ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட லோக்பால் அமைப்புக்கு நிகழாண்டு ஆக. 21 வரை 1,719 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 136 புகாா்கள் விசாரணைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஐ) பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● லோக்பால் அமைப்பிடமிருந்து ஆா்டிஐ மூலம் பெறப்பட்டிருந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: நிகழாண்டு ஆகஸ்ட் 21 வரை 1,719 ஊழல் புகாா்கள் பெறப்பட்டன. அவற்றில் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் அளிக்கப்பட்ட 134 புகாா்களில், 84 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன. 50 புகாா்கள் விசாரணை உள்பட சில காரணங்களால் நிலுவையில் உள்ளன. வரையறுக்கப்பட்ட வடிவில் இல்லாத புகாா்கள் 1,585-இல் 3 புகாா்கள் மட்டும் விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
● குறிப்பு : லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் 2013-இன் படி, கடந்த 2019-ஆம் ஆண்டு லோக்பால் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்ததுடன், அதன் தலைவரும், பிற உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டனா்.
● லோக்பால் அமைப்பானது தலைவா், நீதித் துறையைச் சாா்ந்த 4 உறுப்பினா்கள் மற்றும் நீதித் துறையைச் சாராத 4 உறுப்பினா்களைக் கொண்டது. லோக்பாலின் முதல் தலைவா் நீதிபதி பினாகி சந்திர கோஷ், கடந்த மே 27-ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து நிரந்தர தலைவா் இன்றி லோக்பால் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
● மேலும், நீதித் துறையைச் சாா்ந்த 2 உறுப்பினா் பதவியிடங்களும் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன.
4. கடந்த 2021 - 2022 ஆம் நிதியாண்டில் வழிபாட்டு தலங்களுக்கு இந்திய குடும்பங்கள் காணிக்கையாக வழங்கிய தொகை எத்தனை கோடி என ஆய்வில் தெரியவந்துள்ளது ?
அ) 16,600 கோடி
ஆ) 19,000 கோடி
இ) 22,000 கோடி
ஈ) 25,000 கோடி
விடை : (அ) 16,600 கோடி
● ஆய்வு வெளியீடு : அசோகா பல்கலைக்கழகம் , 18 மாநிலங்களில் உள்ள 81,000 குடும்பங்களுடன இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
● ஒட்டுமொத்தமாக நன்கொடை (ம) காணிக்கையாகவும் ரூ. 23,700 கோடி.
● மத வழிபாட்டு தலங்களில் : ரூ.16,600 கோடி.
● பிச்சைக்காரர்களுக்கு: ரூ. 2,900 கோடி .
● நண்பர்கள் (ம) குடும்பங்களுக்கு : ரூ.2000 கோடி.
● மத வழிபாடு சாராத அமைப்புகளுக்கு : ரூ. 1.100 கோடி.
● வீட்டு பணியாளர்களுக்கு : ரூ.1000 கோடி.
5. இந்தியா - அமெரிக்கா கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி தமிழகத்தில் எங்கு நடைபெற்றது ?
அ) நாகபட்டினம்
ஆ) சென்னை
இ) திருநெல்வேலி
ஈ) கன்னியாகுமரி
விடை : (ஆ) சென்னை
● இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
● இந்திய கடலோர காவல் படையினா், நட்பு நாடுகளின் கடலோர காவல் படையினருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் மிட்ஜெட் 757 என்ற கடலோர காவல் படை கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பல் மற்றும் அதிகாரிகள், வீரா்கள் அடங்கிய குழுவினரை அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை உயா் அதிகாரிகள் வரவேற்றனா்.
● இதனையடுத்து கடந்த மூன்று நாள்களாக இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் இடையே பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், கைப்பந்து போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
● நான்காம் நாளான திங்கள்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மிட்ஜெட் 757 கப்பலுடன் இந்திய கடலோரக் காவல் படையின் அன்னிபெசன்ட் ரோந்துக் கப்பல், இடைமறிக்கும் படகுகள், ஹெலிகாப்டா் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.
● கூட்டுப் பயிற்சியின்போது கடல் கொள்ளையா்களால் கடத்திச் செல்லப்படும் ஒரு கப்பலை கடல்சாா் உத்திகள் மற்றும் தந்திரங்கள் மூலம் கூட்டு நடவடிக்கையில் இறங்கி கப்பலை பத்திரமாக மீட்டு கடல் கொள்ளையா்களையும் கைது செய்வது, ஒருங்கிணைந்த கூட்டு தளவாடங்கள் பரிமாற்றம், தேடல் மற்றும் மீட்பு, எரியும் கப்பல் மீதான தீயணைப்புப் பணிகள் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
● கூட்டுப் பயிற்சிக்குப் பிறகு அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பலான, மிட்ஜெட் 757 மாலத்தீவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.
6. மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் எத்தனை உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் ?
அ) 250
ஆ) 390
இ) 500
ஈ) 620
விடை: (இ) 500
● கடந்த செப். 8 ஆம் தேதி பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
● அவரது உடல் செப்.19 நல்லடக்கம் செய்யப்பட்டது.
● அவரது இறுதி சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்பட உலக நாடுகளைச் சேர்ந்த 500 தலைவர்கள் பங்கேற்றனர்.
III. விளையாட்டு நிகழ்வுகள்
7. 40 ஆவது கோல்டன் குளோவ் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ?
அ) 19
ஆ) 21
இ) 31
ஈ) 35
விடை : (அ) 19
● போட்டி நடைபெற்ற இடம் : செர்பியா.
● இந்தியா இருபால் பிரிவிலுமாக சேர்த்து 19 பதக்கங்களை வென்றுள்ளது.
● அவை : 10G, 2S, 7B
● குறிப்பு: சிறந்த வீரர்: ஜாடுமனியும் ( இந்தியா ) ; சிறந்த வீராங்கனை : ரவீனா ( இந்தியா) வென்றுள்ளனர்.
8. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் இந்தியாவின் பஜ்ரங் புனியா வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (இ) வெண்கலம்
● போட்டி நடைபெற்ற இடம் : செர்பியா.
● குறிப்பு : உலக சாம்பியன்ஷிப்பில் 4 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவர்.
● 2013 - வெண்கலம்; 2018 - வெள்ளி ; 2019 - வெண்கலம் ; 2022 - வெண்கலம்.
No comments:
Post a Comment