Friday, September 23, 2022

Current Affairs 2022 - September 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
              SEPTEMBER 23 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த திட்டத்தின் கீழ் சென்னையில் காவலர்களிடம் மனுக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் 

அ) உங்கள் துறையில் முதல்வர் 
ஆ) காவல் துறையில் முதல்வர்
இ) உங்கள் நன்பண் முதல்வர் 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) உங்கள் துறையில் முதல்வர் 

காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

● அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார்.

2. தமிழகத்தில் பரம்பரை மருத்துவர்களுக்கு ரூ--------- ஆக உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் ? 


அ) ரூ.1,500

ஆ) ரூ.2000

இ) ரூ.2500

ஈ) ரூ.3000

விடை : (ஈ) ரூ.3000

● தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேத, யுனானி (ம) ஹோமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3000 ஆக மாத ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது , அதற்கான உத்தரவை மு.க.ஸ்டாலின் அளித்தார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பிரதமர் நரேந்திர மோடியின் பிரபல வார்த்தைகளான அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும்,  அனைவரின் நம்பிக்கையுடன் , என்கிற தலைப்பில் அவரது உரைகள் அடங்கிய நூலின் முதல் பாகத்தை வெளியிட உள்ளவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) ராம்நாத் கோவிந்த் 

இ) எம். வெங்கையா நாயுடு

ஈ) நரேந்திர மோடி

விடை : (இ) எம். வெங்கையா நாயுடு

நூல் வெளியிடுபவர்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.

● நூலின் தலைப்பு : அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும்,  அனைவரின் நம்பிக்கையுடன்.

● இந்த நூலில் கடந்த 2019 மே மாதத்தில் இருந்து 2020 மே மாதம் வரை பிரதமர் மோடியின் 86 உரைகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

4. உலகின் முதல் க்ளோனிங் ஓநாய் எந்த நாட்டின் நிறுவனம் உருவாக்கியுள்ளது ? 

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) ஆப்பிரிக்கா

ஈ) கனடா

விடை : (ஆ) சீனா 

● சீன நாட்டின் சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் முதல்முறையாக ஆர்க்டிக் வன ஓநாய் வகையினை மரபணு படியெடுத்தல் ( குளோனிங் ) மூலம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

● பெயர் : மாயா - ஆரோக்கியம் என்று பொருள் 

● இந்த ஆர்க்டிக் ஓநாய் ஆனது வெள்ளை ஓநாய் (அ) துருவ ஓநாய் என்றும் அழைக்கப்படுகிறது.

● இந்த உயிரனமானது அழிந்து போவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு இது மேற்கொள்ளப்படுகிறது.

5. மத்திய அறிவியல் (ம) தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது INSPIRE திட்டத்தின் கீழ் எத்தனை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது ? 

அ) 27,000

ஆ) 33,000

இ) 47,000

ஈ) 53,000

விடை : (ஈ) 53,000

● INSPIRE என்பது The Innovation in Science Pursuit for Inspired Research.

● இது இந்திய அரசின் அறிவியல் (ம) தொழில்நுட்பத் துறையால் செயல் படுத்தப்பட்டுள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக:-

1) இந்தியாவில் முதல்முறையாக மோட்டோ ஜிபி பந்தயம் நடைபெறவுள்ளது.

2) இந்தப் பந்தயம் 5 ஆண்டுகளில் 5 முறை நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1 (ம) 2 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) 2 மட்டும்

● இந்தியாவில் மோட்டார் சைக்கிள் ஊக்குவிக்கும் வகையில்  முதல்முறையாக மோட்டோ ஜிபி பந்தயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

● இந்த பந்தயத்துக்கு கிராண்ட் ப்ரீ ஆஃப் பாரத் என பெயரிடப்பட்டிருக்கிறது.

● இந்தப் பந்தயம் 7ஆண்டுகளில் 7 முறை நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

IV. முக்கிய தினங்கள்

7. World Rhino Day 2022 

Ans : September 22 

Theme (2022) : Five Rhino Species Forever.

8. International Day of Sign Languages 2022 

Ans : September 23



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...