● இணையவழியில் வரைபடங்கள்: நகரப் புலங்களுக்கான வரைபடங்கள் www.eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையும் இணையதளத்திலிருந்து கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.
● மனை அங்கீகாரம், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு வரைபடங்கள் மிகுந்த தேவையாக உள்ளன. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், இதற்காக பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் வருவது தவிா்க்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் விவரங்களை பதிவு செய்வதற்காக எத்தனை மாவட்டங்களில் புத்தாக்கப் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன ?
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 7
விடை : (ஈ) 7
● அறிவிப்பு : வெளிநாடுவாழ் தமிழர் (ம) புலம்பெயர்ந்தோர் நலத்துறை மாநில ஆணையர் ஜெசிந்தாலாசரஸ்.
● 7 மாவட்டங்கள் : ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, பெரம்பலூர், விழுப்புரம் (ம) தஞ்சாவூர்.
3. இந்தியளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ?
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) ராஜஸ்தான்
ஈ) மேற்கு வங்கம்
விடை: (ஆ) தமிழ்நாடு
● முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உறுப்பு மாற்று விழிப்புணா்வு தின நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
● அந்நிகழ்வை தொடக்கி வைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
● 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி முதல் மத்திய அரசின் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
● ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தில் இப்போது 796 அரசு மருத்துவமனைகள், 937 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 1,733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 11 தொடா் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனைகள், 8 உயா் சிறப்பு சிகிச்சைகள் உட்பட 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
● தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘விடியல்’ என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
● தானியங்கி செயலியின் மூலம் மே 2022 முதல் தற்போது வரை 67 உறுப்பு கொடையாளா்களின் 224 உறுப்புகள், இறுதி நிலை உறுப்பு செயலிழப்பு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
● அக்டோபா் 2008 முதல் தற்போது வரை 1,559 மொத்த உறுப்பு கொடையாளா்கள் மூலம், 5,687 உறுப்புகளும், 3,629 திசுக்களும் தானமாக பெறப்பட்டது. உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணா்விலும் மற்றும் தானம் பெற்ற உறுப்புகளை பயன்படுத்துவதிலும் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது என்றாா் அவா்.
4. தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடக்கி வைத்தவர் யார் ?
அ) மு.க. ஸ்டாலின்
ஆ) ஆர்.என்.ரவி
இ) வெங்கையா நாயுடு
ஈ) முனீஷ்வர் நாத் பண்டாரி
விடை : (அ) மு.க. ஸ்டாலின்
● செம்மொழியான தமிழையும் நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பை தமிழக அரசு தொடங்கியது.
● இந்த திட்டத்தின் கீழ் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் வெளியிட்டார்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
5. மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கான தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது ?
அ) டெல்லி
ஆ) உத்தரபிரதேசம்
இ) குஜராத்
ஈ) அசாம்
விடை : (இ) குஜராத்
● மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்களுக்கான தேசிய மாநாடு குஜராத்தின் நா்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
● அந்த மாநாட்டை பிரதமா் மோடி காணொலி மூலம் தொடக்கிவைத்தாா்.
6. திட (ம) திரவம கழிவு மேலாண்மையை சரிவர மேற்கொள்ளாத பின்வரும் எந்த மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 2000 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ?
அ) பஞ்சாப்
ஆ) கர்நாடகா
இ) அசாம்
ஈ) மகாராஷ்டிரா
விடை : (அ) பஞ்சாப்
● திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
● உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநிலங்களில் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது.
● அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
● அப்போது, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் வெளியேறுவதை தடுக்கத் தவறியதற்காகவும், குப்பைகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கத் தவறிய காரணத்திற்காகவும் 2 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
7. அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்திர பானர்ஜி எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ?
அ) 2004
ஆ) 2010
இ) 2017
ஈ) 2020
விடை : (இ) 2020
● உச்சநீதிமன்ற நீதிபதி இந்திர பானர்ஜி 65 வயது நிறைவடைந்ததையடுத்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
● இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
● 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.
● தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்த்து மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.
● இந்திரா பானர்ஜி ஓய்வுபெற்ற நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 29 ஆகவும் , அவர்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆகவும் குறைந்துள்ளது .
8. உலகின் சிறந்த பள்ளி பரிசுக்கான இறுதிப் போட்டியில் பின்வரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிராமப் பள்ளி இடம்பிடித்துள்ளது ?
அ) மத்திய பிரதேசம்
ஆ) ராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரா
ஈ) தமிழ்நாடு
விடை : (இ) மகாராஷ்டிரா
உலகின் சிறந்த பள்ளி பரிசுக்கான இறுதிப் போட்டியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிராமப் பள்ளி இடம்பிடித்துள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
9. இந்திய ஹாக்கி அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ?
அ) ராகேஷ் கட்டியால்
ஆ) போலாநாத் சிங்
இ) சேகர் குப்தா
ஈ) திலீப் திர்கி
விடை : (ஈ) தீலிப் திர்கி
● தேசிய அணி முன்னாள் கேப்டன் திலீப் திர்கி இந்திய ஹாக்கி அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
IV. முக்கிய தினங்கள்
10. World Rabbit Day 2022
Ans : September 24
No comments:
Post a Comment