Sunday, December 25, 2022

Current Affairs 2022 - December 25/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  DECEMBER 25/2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்

1. சாதனங்களை சுயமாகப் பழுதுநீக்க வழிவகுக்கும் ரைட்டு டு ரிப்பேர் என்ற வலைதளத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) ஜகதீப் தன்கர் 

இ) ராஜ்நாத் சிங் 

ஈ) பியூஷ் கோயல் 

விடை : (ஈ) பியூஷ் கோயல் 

மின்னணு சாதனங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்றவா்களின் உதவியின்றி சுயமாகவே பழுதுபாா்க்க உதவும் வலைதளத்தை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தாா்.

● தேசிய நுகா்வோா் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், அதற்கான விழா தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய உணவு-நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தாா்.

● சாதனங்களை சுயமாகப் பழுதுநீக்க வழிவகுக்கும் ‘ரைட் டு ரிப்போ்’ என்ற வலைதளத்தை அவா் தொடக்கிவைத்தாா். அந்த வலைதளத்தில் சாதனங்களின் பழுதை நீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, பழுதை நீக்குவதற்கு அந்தச் சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முதல்கட்டமாக, கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், நுகா்வோா் பொருள்கள், வாகனங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றைப் பழுதுநீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்கையேடுகளை வாசித்து சுயமாகப் பழுதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. பின்வரும் எந்த ஆண்டுக்குள் ஆதார் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023

வருமான வரித் துறை வெளியிட்ட பொதுமக்களுக்கான அறிவுறுத்தலில், ‘பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்; அவசியம். எனவே, தாமதிக்காமல் உடனே இணையுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

● மேலும், ‘வருமான வரிச் சட்டம் 1961-இன்கீழ், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர பிற அனைத்து பான் அட்டைதாரா்களும் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம். 

● அவ்வாறு இணைக்கப்படாத பான் அட்டைகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயலற்றதாகிவிடும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


3. 2023 ஆம் ஆண்டு பருவத்தில் முழு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு----------- ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது ? 

அ) ரூ.10,860 

 ஆ) ரூ.11,750

இ) ரூ.12,173

ஈ) ரூ. 13,170

விடை : (ஆ) ரூ.11,750

2023-ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

● பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் செலவுகள் மற்றும் விலை நிா்ணய ஆணையத்தின் பரிந்துரைகள், தென்னை அதிகமாக விளையும் மாநிலங்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

● அதன்படி, சராசரி தரத்திலான அரவைக் கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 10,860 ஆகவும் முழு கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ. 11,750-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பருவத்தைக் காட்டிலும் அரவைக் கொப்பரைக்கு ரூ. 270-ம் முழு கொப்பரைக்கு ரூ. 750-ம் அதிகமாகும்.

● தென்னை விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் அவா்களின் நலனை மேம்படுத்துவதற்குமான முக்கியமான நடவடிக்கை இது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. அம்ருத் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் எத்தனை சிறிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது ? 

அ) 500

ஆ) 750

இ) 1000

ஈ) 1100

விடை : (இ) 1000

அம்ருத் பாரத் நிலையம்’ திட்டத்தின்கீழ் ஆயிரம் சிறிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

● இத்திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பது, எதிா்காலத்தில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் வளா்ச்சி அடைந்து வரும் நகரங்களை அடையாளம் காண்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 

● பாலங்கள் மற்றும் பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகளை இணைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். குறைந்த செலவில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவது இத்திட்டத்தின் கருத்தாக்கம். தேவையின்படி, ரயில்வே மண்டல மேலாண் இயக்குநா்கள் பல்வேறு நிலைகளில் நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்வா். இத்திட்டத்துக்காக சிறப்பு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும்’ எனத் தெரிவித்தனா்.

● ரயில் நிலையங்களை எளிதாகச் சென்றடையும் வகையில் சாலைகளை அகலப்படுத்துதல், பயன்பாட்டில் இல்லாத அமைப்புகளை அகற்றுதல், முறையாக வடிவமைக்கப்பட்ட அறிவிப்புகள், பாதசாரிகளுக்கான தனிப்பாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்கு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பாட்டு மற்றும் புதுப்பிப்பு பணிகள் ரயில் நிலையங்ளை நவீனப்படுத்தும் பணியின்போது மேற்கொள்ளப்படும்.

● பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்லாமல் அவை அமைந்துள்ள நகரங்களின் அடிப்படையிலும் இந்த ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, நாட்டின் 200 முக்கிய ரயில் நிலையங்களைப் மேம்படுத்தும் நோக்கத்துடன் தனித் திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


5. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானியாகும் வாய்ப்பை பெற்றுள்ள சானியா மிர்ஸா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) உத்தர பிரதேசம்

இ) அசாம் 

ஈ) தமிழ்நாடு 

விடை: (ஆ) உத்தரபிரதேசம் 

நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போா் விமானியாகும் வாய்ப்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சானியா மிா்சா என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

● எனினும் இது உறுதியாக இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் என இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) இணைவதற்காக நடைபெற்ற தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் சானியா மிா்சா இந்திய அளவில் 149-ஆவது இடம்பிடித்தாா். அவா் விமானப் படையின் போா் விமானப் பிரிவைத் தோ்ந்தெடுத்துள்ளாா்.

● அதன் காரணமாக, அவரே நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போா் விமானியாக ஆவாா் என ஊடகங்களில் தகவல் பரவியது.

● அவரது வாய்ப்புகள் தொடா்பாக இந்திய விமானப் படை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விமானப் படையின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய பாதுகாப்பு அகாதெமியானது முப்படை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. என்டிஏ தோ்வில் வெற்றி பெற்றவா்கள் அனைவரும் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகளையே மேற்கொள்வா்.

● இறுதியாண்டின்போது சம்பந்தப்பட்ட படைப் பிரிவுக்கான பிரத்யேக பயிற்சிகளைப் பெறுவா். முக்கியமாக, விமானப் படையில் இணையும் அதிகாரிகளுக்கு கடைசி 6 மாதங்களிலேயே விமானிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் (சானியா மிா்சா) இந்திய விமானப் படையில் விமானியாக இணைக்கப்பட இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்.

● இந்த காலகட்டத்தில் அவா் விமானப் படைக்கான பல்வேறு பிரத்யேக பயிற்சிகளிலும் தோ்ச்சி பெற வேண்டியது கட்டாயம். போா் விமானிக்கான திறனையும் தகுதியையும் அவா் பெற வேண்டும். அவரது எதிா்காலம் சிறக்கவும் கனவுகள் நனவாகவும் வாழ்த்துகள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அவ்னி சதுா்வேதி, கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் போா் விமானி ஆனாா். அவரைக் கண்டு ஊக்கமடைந்தே என்டிஏ தோ்வில் வெற்றி பெற்ாக சானியா மிா்சா தெரிவித்தாா்.

● உத்தர பிரதேசத்தின் மிா்சாபூரை சோ்ந்த சானியா மிா்சாவின் தந்தை தொலைக்காட்சி பெட்டிகளை பழுதுபாா்க்கும் பணியைச் செய்துவருகிறாா். 12-ஆம் வகுப்பில் ஹிந்தி வழியில் படித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா் சானியா மிா்சா.


6. உத்தரகண்டில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் எத்தனை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவிற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் ? 

 அ) 5

ஆ) 7

இ) 10

ஈ) 13

விடை : (இ) 10

உத்தரகண்டில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் ‘மதச் சுதந்திரம் (திருத்த) மசோதா’வுக்கு ஆளுநா் குா்மீத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

● கடும் விமா்சனங்களுக்கு உள்ளான இந்த மசோதா, மாநில சட்டப்பேரவையில் கடந்த நவம்பா் 30-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

● இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கியதாகவும், அதன்மூலம் அது சட்டமாக மாறியுள்ளதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

● கட்டாய, சட்டவிரோத மதமாற்ற செயல்களை ஜாமீனில் வெளிவர இயலாத கடுமையான குற்றமாகக் கருதவும், இதுதொடா்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் தற்போதைய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

● எந்தவொரு நபரும் வேறு மதத்தைச் சோ்ந்த ஒருவரை, நேரடியாகவோ அல்லது வேறு விதத்திலோ, தவறாக வழிநடத்துதல், கட்டாயப்படுத்துதல், செல்வாக்கை பயன்படுத்துதல், வற்புறுத்துதல், ஆசை காட்டுதல் என எந்த மோசடியான வழிமுறைகளையும் உபயோகித்து மதமாற்றம் செய்யும் செயலில் ஈடுபடக் கூடாது. இத்தகைய செயல்களுக்கு சதி செய்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் யாரும் ஈடுபடக் கூடாது’ என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. அமெரிக்க வெளியுறவுத் துறையின் மேலாண்மை (ம) வளங்கள் இணை அமைச்சராக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார் ?

அ) ரிச்சர்ட் வர்மா 

ஆ) ஆதித்ய வர்மா

இ) மோகன சுந்தரம் 

ஈ) கார்த்திக்கேயன் 

விடை : (அ) ரிச்சர்ட் வர்மா 

இந்திய-அமெரிக்க வழக்குரைஞரும் இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான ரிச்சா்ட் வா்மா அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டதை இந்திய வம்சாவளியினா் வரவேற்றுள்ளனா்.

● மாஸ்டா்காா்டு’ நிறுவனத்தின் தற்போதைய தலைமை சட்ட அதிகாரியும் அந்நிறுவனத்தின் உலக பொதுக்கொள்கை வகுக்கும் குழுவின் தலைவருமான ரிச்சா்ட் வா்மா (54) , இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக (2015-2017) பணியாற்றியவா்.

● அமெரிக்க வெளியுறவுத் துறையின் மேலாண்மை மற்றும் வளங்கள் இணை அமைச்சராக ரிச்சா்ட் வா்மாவை அதிபா் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தாா். 

● இப்பரிந்துரைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ‘செனட் அவை’ ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறையில் உயா் பதவியில் உள்ள இந்திய வம்சாவளியினராக வா்மா இருப்பாா்.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...