JANUARY 01/2023
I. தமிழ்நாட்டு செய்திகள்
1. தமிழகத்தில் எங்கு மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகளின் பயன்பாடு முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது ?
அ) கேரளா
ஆ) பஞ்சாப்
இ) அசாம்
ஈ) தமிழ்நாடு
விடை : (ஈ) தமிழ்நாடு
● மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகள் :-
¤ சேலம் மாநகரில் முக்கியமான 1,100 இடங்களை ரோந்து போலீசார் நேரடியாக சென்று கண்காணிப்பதை உறுதி செய்து, அவர்களது பணியை ஒருங்கிணைக்கும் வகையில் இ-பீட் ரோந்து செல்போன் செயலி.
¤ காவல் நிலைய வரவேற்பாளர் பணி மீனாய்வு செயலி.
¤ நெடுஞ்சாலை ரோந்து செல்போன் செயலி.
¤ மின்னணு காவல் ரோந்து செயலி.
● தொடக்கி வைத்தவர் : சேலம் மாநகர காவல் ஆணையர் நம்மல் ஹோடா.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
2. இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?
அ) பங்கஜ் குமார்
ஆ) சுஜோய் லால் தாவ்சென்
இ) பங்கஜ் லால்
ஈ) சுந்தர் சேத்ரி
விடை : (ஆ) சுஜோய் லால் தாவ்சென்
● இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.
● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.
● சுஜோய் லால் தாவ்சென்:
¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.
● குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
● BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.
3. பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) நிர்வாக இயக்குநர் (ம) தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா
ஆ) பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா
இ) பாலசுப்பிரமணியன் . கே
ஈ) பங்கஜ் சிங்
விடை : (அ) அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா
4. மலிவு விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்து வரும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டுக்குள் -------- ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ?
அ) 5,300
ஆ) 6,600
இ) 8,700
ஈ) 10,000
விடை : (ஈ) 10,000
● மக்கள் மருந்தகம் :-
தரமான மருந்து பொருளாகள் மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மருந்தகம் திட்டத்தை 2008 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
● மத்திய வேதிப் பொருள்கள் - உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துப் பொருள்கள் துறை இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
● இந்நிலையில் மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
5. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் ( NFSA ) கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு என்று முதல் 2023 ஆம் முழுவதும் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளது ?
அ) ஜனவரி 01
ஆ) ஜனவரி 12
இ) ஜனவரி 26
ஈ) ஜனவரி 31
விடை : (அ) ஜனவரி 01
● கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை என்எஃப்எஸ்ஏ வுடன் மத்திய அரசு அண்மையில் இணைந்துள்ளது.
● இந்த புதிய திட்டத்தின் படி என்எஃப்எஸ்ஏ வின் கீழ் நாட்டில் உள்ள 81.35 கோடி பயனாளிகளுக்கு 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலவச தானியங்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
6.2022 ஆம் ஆண்டின் தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் எத்தனை பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது ?
அ) 60
ஆ) 67
இ) 72
ஈ) 79
விடை : (இ) 72
● வெளியீடு : மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
● குறிப்பு : இதுவரை இல்லாத வகையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
7. பெட்ரோலில் கலப்பதற்காக விநியோகிக்கப்படும் எத்தனால் மீதான சரக்கு - சேவை வரி (GST) குறைப்பானது என்று முதல் அமலுக்கு வருகிறது ?
அ) ஜனவரி 01
ஆ) ஜனவரி 11
இ) ஜனவரி 17
ஈ) ஜனவரி 26
விடை : (அ) ஜனவரி 01
● பெட்ரோலுடன் கலப்பதற்காக பயன்படுத்தப்படும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரி 18% ல் இருந்து 5% குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்திருந்தது.
● இந்த வரி குறைப்பானது ஜனவரி 01/2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
8. கால்நடைகளின் ஏற்படும் தோல் கழலை (லும்பி ஸ்கின் ) நோயைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் பெயர் ?
அ) லும்பி - நோவோவேக்
ஆ) லும்பி - கோவோவேக்
இ) புரோவேக்- லும்பி
ஈ) லும்பி - புரோவேக்
விடை : (ஈ) லும்பி - புரோவேக்
● தடுப்பூசி தயாரிப்பு :
¤ ஹரியாணாவின் தேசிய கால்நடை தடுப்பூசி மையம், தேசிய கால்நடைகள் ஆராய்ச்சி மையம், உத்தர பிரதேசத்தின் இந்திய கால்நடைகள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் லும்பி - புரோவேக் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
● மேலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை மகாராஷ்டிரத்தின் புனேவைச் சேர்ந்த கால்நடை உயிரியல் பொருள்கள் மையத்துடன் (ஐவிபிபி) மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
● தடுப்பூசியை வர்த்தக நோக்கில் தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி னத் துறையானது அந்நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளது .
9. இந்தியாவில் முதல்முறையாக எங்கு ஓமிக்ரான் எக்ஸ்பி.பி.1.5 வகை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது ?
அ) மகாராஷ்டிரா
ஆ) குஜராத்
இ) தமிழ்நாடு
ஈ) மணிப்பூர்
விடை : (ஆ) குஜராத்
III. முக்கிய தினங்கள்
10. Global Family Day 2023 -------------
● Ans : January 01
No comments:
Post a Comment